சினிமாவில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு முன் அதிரடி முடிவெடுத்த ஆர்ஜே பாலாஜி

சினிமாவில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு முன் அதிரடி முடிவெடுத்த ஆர்ஜே பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

‘ரன் பேபி ரன்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது…

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது…

இந்த படம் எடுப்பதற்கும், திட்டமிட்டபடி வெளியிட்டதற்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகிறது. பல முன்னணி திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் ஓடுகிறது. இந்த வாரம் வெளியாகும் படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்கான திரைகள் அதிகமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்படம் தொடங்கும்போது திரில்லர் படத்திற்கு திரையரங்கில் வரவேற்பு இருக்குமா? ஓடிடி தளங்கள் இருக்கும்போது, திரையரங்கில் மக்கள் வரவேற்பார்களா? என்ற தயக்கம் இருந்தது. ஆனால், நினைத்ததைவிட படம் வெற்றியடைந்திருக்கிறது.

சிறு வயதில் பேட்மின்டன் சேர்ந்தேன். படிப்படியாக முன்னேறி அந்த கோச்சிங் மையத்திலேயே நான் தான் வெற்றியாளனாக இருந்தேன்.

சிறிது காலம் சென்றதும், வெளியில் சென்றால்தான் அடுத்த நிலைக்கு உயர முடியும் என்று அந்த மையத்தில் இருந்து வெளியேறினேன். அப்போது என்னுடைய கோச் மிகவும் வருத்தமடைந்தார்.

ஆனால், சில வருடங்களுக்குப் பிறகு நீ அன்று எடுத்த முடிவு தான் சிறந்தது. அதற்கு மேல் உனக்கு கற்றுக் கொடுக்க எதுவுமில்லை என்றார்.

அதுபோல் சினிமாவில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு, நான் இதற்கு முன் எடுத்த மூன்று படங்கள் போல் அடுத்தடுத்த படங்கள் இருக்கக் கூடாது என்று தான் இப்படத்தில் நடிக்க முடிவு செய்தேன். இப்படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக சண்டைக் காட்சிகளைப் பார்த்து யதார்த்தமாக இருக்கிறது என்று பாராட்டினார்கள் என்றார்.

Actor – Director RJ Balaji’s bold decision

பிரபாஸ் – கிருத்தி திருமண நிச்சயம் குறித்த அப்டேட்

பிரபாஸ் – கிருத்தி திருமண நிச்சயம் குறித்த அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பிரபாஸ்- பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், இவை வதந்தி என்றும், இவர்கள் இருவரும் ‘ஆதிபுருஷ்’ எனும் திரைப்படத்தில் பணியாற்றும் சக நடிகர்கள் மட்டுமே என்றும் பிரபாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

‘பாகுபலி’ படத்தின் மூலம் பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் பிரபாஸ்.

இவர் தற்போது இயக்குநர் ஓம்ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரபாசும், நடிகை கிருத்தி சனோனும் காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டிருப்பதாகவும் இதற்கு முன் செய்திகள் வெளியானது.

இதற்கு நடிகை கிருத்தி சனோன் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் விரைவில் நடைபெறவிருக்கிறது என சில இணையதளங்களில் தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக பிரபாஸின் நெருங்கிய நட்பு வட்டாரம் விளக்கமளித்து பேசுகையில்…

” இந்த செய்தி முற்றிலும் பொய். இந்த செய்தியில் உண்மை இல்லை. இது வதந்தி. இவர்கள் இருவரும் ‘ஆதி புரூஷ்’ படத்தில் நடிக்கும் சக நடிகர்கள் மட்டும்தான். பரபரப்பாக பேசப்படும் இந்த கதையில் சிறிதளவும் உண்மை இல்லை.

இது யாரோ ஒருவரின் கற்பனை. இவர்கள் பரப்பும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.” என்றனர்.

பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதி புரூஷ்’ எனும் திரைப்படத்தில் நடிகர் பிரபாசும், நடிகை கிருத்தி சனோனும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இவர்களுடன் சையீப் அலி கான், சன்னி சிங் மற்றும் வத்ஸல் ஷெத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

The rumors about Prabhas Kriti Sanon getting engaged are all false

மீண்டும் RBR பட டைரக்டருக்கு வாய்ப்பளித்த பிரின்ஸ் பிக்சர்ஸ்

மீண்டும் RBR பட டைரக்டருக்கு வாய்ப்பளித்த பிரின்ஸ் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக ஆர்ஜே பாலாஜி – ஐஸ்வர்யா நடிப்பில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான படம் ‘ரன் பேபி ரன்’.

இந்த பாக்ஸ் ஆபிஸில் பாசிட்டிவான விமர்சனங்களையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கிய இந்த படம் விறுவிறுப்பான கதை, த்ரில் மற்றும் எதிர்பாரா திருப்பங்களுடன் ஒரு முக்கியமான செய்தியையும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

எனவே படக்குழு நேற்று ‘ரன் பேபி ரன்’ வெற்றி விழா சந்திப்பையும் நிகழ்த்தினர்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் மீண்டும் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமாருடன் இன்னொரு உற்சாகமான படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தப்படம் குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படாவிட்டாலும், நிச்சயமாக இயக்குனரிடம் இருந்து இன்னொரு உற்சாகமான படைப்பாக அது இருக்கும்.

இயக்குனர்கள் FIR மனு ஆனந்த், ‘வதந்தி’ ஆண்ட்ரூ லூயிஸ் ஆகியோர் இயக்கும் படங்கள் உட்பட மற்றும் சில படங்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வரிசை கட்டி நிற்கின்றன.

எதிர்காலத்தில் நல்ல படைப்புகளை தருவதில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய உறுதியை தெரிவிக்கிறது.

Prince Pictures teams up with Run Baby Run director

சிம்பு – தனுஷ் – சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பிக் பாஸ் கவின்….

சிம்பு – தனுஷ் – சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பிக் பாஸ் கவின்….

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் நடித்திருக்கும் படம் ‘டாடா’.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

‘டாடா’ திரைப்படம் நாளை பிப்ரவரி 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ‘டாடா’ படத்தை தமிழ்நாட்டில் 400+ திரைகளைப் பெற்றுள்ளது மற்றும் கவின் நடித்து ரிலீசான படங்களில் இதுவே மிகப்பெரிய ரிலீஸ் ஆகும்.

சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களே அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும். அந்த வரிசையில் கவினின் ‘டாடா’ படமும் இணைந்துள்ளது.

Kavin’s ‘Dada’ to release on over 400 screens in Tamil Nadu

படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு காயம்; ஆயுர்வேத முறையில் சிகிச்சை…!

படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு காயம்; ஆயுர்வேத முறையில் சிகிச்சை…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அருண் விஜய், இயக்குநர் விஜய்யுடன் இணைந்து ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் நிமிஷா சஜயனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அச்சம் என்பது இல்லையே

லண்டனில் தனது ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அருண் விஜய் காயம் அடைந்து சிகிச்சைக்காக இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் கேரளாவில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அருண் விஜய் “காயம் ஏற்பட்ட என் முழங்காலுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்.. இது என்னுடைய நான்காவது நாள் சிகிச்சை.. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அச்சம் என்பது இல்லையே

arun vijay is getting Ayurvedic treatment in kerala

சமூக அக்கறையில் ‘அக்கரன்’..; வெண்பா-வின் தந்தையாக MS பாஸ்கர்

சமூக அக்கறையில் ‘அக்கரன்’..; வெண்பா-வின் தந்தையாக MS பாஸ்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல குணசித்திர நடிகர் எம்எஸ். பாஸ்கர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அக்கரன்’.

அவரே கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் வெண்பா, ‘கபாலி’ விஸ்வநாத், நமோ நாராயணா, ஆகாஷ் பிரேம்குமார், கார்த்திக் சந்திரசேகர் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

அறிமுக இயக்குநர் அருண் கே.பிரசாத் டைரக்டு செய்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் நாயகனாக நடிப்பது குறித்து அருண் கே.பிரசாத் கூறியதாவது..,

“எம்.எஸ்.பாஸ்கர் கதையை கேட்டதுமே உடனே ஒப்புக்கொண்டார். அக்கரன் படத்தில் அவர் விவசாயியாக நடித்துள்ளார். அவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் வெண்பா. மற்றொருவர் பிரியா.

ஒரு மகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட. தந்தை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.” என தெரிவித்துள்ளார்.

வில்லனுடன் எம்.எஸ்.பாஸ்கர் மோதும் சண்டைக் காட்சியும் படத்தில் உள்ளது என்பது கூடுதல் தகவல்..

MS Baskar Venba Viswanth Starrer Akkaran updates

More Articles
Follows