JUST IN ‘தண்டட்டி’ படத்திற்கு தடை கோரி ‘அண்டாவ காணோம்’ பட தயாரிப்பாளர் மனு

JUST IN ‘தண்டட்டி’ படத்திற்கு தடை கோரி ‘அண்டாவ காணோம்’ பட தயாரிப்பாளர் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக லக்ஷ்மன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலருடன் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ‘தண்டட்டி’ அணிந்த அப்பத்தாக்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

இந்த நிலையில் விரைவில் ரிலீசாகவுள்ள ‘தண்டட்டி’ பட ரிலீஸுக்கு தடை விதிக்க கோரி ஜே எஸ் கே சதீஷ்குமார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரின் கடிதத்தில்… 2017 ஆம் ஆண்டில் அண்டாவ காணோம் என்ற படத்தை தயாரித்திருந்தேன். சில காரணங்கள் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது அந்தப் படத்தை வெளியிட முயற்சித்து வருகிறேன்.

இந்த நிலையில் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘தண்டட்டி’ படத்தின் கதையும் எங்களின் அண்டாவை காணும் படத்தின் கதையும் ஒரே போல இருப்பதாக அறிந்தேன்.

எனவே ‘தண்டட்டி’ படத்தின் ரிலீஸ்க்கு தடை விதிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Producer JSK letter to Producer Council to ban release of Thandatti

பிரபுதேவாவின் 2வது மனைவிக்கு பெண் குழந்தை.; மகிழ்ச்சியில் நடனமாடும் குடும்பம்

பிரபுதேவாவின் 2வது மனைவிக்கு பெண் குழந்தை.; மகிழ்ச்சியில் நடனமாடும் குடும்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர் நடிகர் இயக்குனர் என இந்திய சினிமாவை கலக்கி வருபவர் பிரபுதேவா. தமிழில் விஜய்.. ஹிந்தியில் சல்மான்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இவரின் இயக்கத்தில் நடித்துள்ளனர்.

இவர் 1995 ஆம் ஆண்டில் தன்னுடைய குழுவில் நடனமாடிக் கொண்டிருந்த ரமலத் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு பின்னர் நயன்தாராவுடன் பிரபுதேவாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. எனவே நயன்தாராவை திருமணம் செய்யும் கொள்ளும் நோக்கத்தில் தன் மனைவி ரமலத்தை விவகாரத்து செய்தார் பிரபுதேவா. ஆனால் நயன்தாராவுடன் திருமணம் நடைபெறவில்லை.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் மும்பையில் தங்கியிருந்தார். அப்போது சிகிச்சைக்குச் சென்ற இடத்தில் பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் நெருக்கம் ஏற்ப்பட்டது.

பின்னர் பிரபுதேவா – ஹிமானி சிங் இருவரும் ரகசிய முறையில் திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்த நிலையில் 3 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா – ஹிமானி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனை முன்னிட்டு தான் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வந்ததாக கூறப்படுகிறது.

Actor Prabudeva became father of girl baby

கூடுதல் தகவல்…

சுந்தரம் டான்ஸ் மாஸ்டருக்கு ராஜு சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் என மூன்று பேரும் மகன்களே.

தந்தையை போல பிரபுதேவாவுக்கு பிறந்த மூன்று பேரும் மகன்களே.

அதுபோல.. பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் மற்றும் தம்பி நாகேந்திர பிரசாத்துக்கும் பிறந்தது ஆண் வாரிசுகள்தான்.

தற்போது இந்த குடும்பத்தில் முதன்முறையாக ஒரு பெண் பிறந்திருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

நடிகையும் அமைச்சருமான ரோஜா மருத்துவமனையில் திடீர் அனுமதி

நடிகையும் அமைச்சருமான ரோஜா மருத்துவமனையில் திடீர் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் தெலுங்கு தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா.

இதுவரை 100+க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

‘செம்பருத்தி’ படம் மூலம் தன்னை தமிழ் அறிமுகப்படுத்தி ஆர்கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் செட்டிலானார்.

அதன் பின்னர் ஆந்திர அரசியலில் ஆர்வம் கொண்டு அரசியலில் நுழைந்தார்.

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று ஆந்திரா மாநில சுற்றுலாத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார் ரோஜா.

இந்நிலையில் ரோஜா உடல்நலக் குறைவு காரணமாக திடீரென ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கால் வீக்கம் காரணமாக அமைச்சர் ரோஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Actress Politician Roja admitted in pvt hospital

முதலாமாண்டு திருமண நாளை கண்ணீருடன் கொண்டாடிய நயன்தாரா – விக்கி

முதலாமாண்டு திருமண நாளை கண்ணீருடன் கொண்டாடிய நயன்தாரா – விக்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான 5-6 மாதங்களில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர் இந்த தம்பதி.

இந்த நிலையில் நேற்று 2023 ஜூன் 9ஆம் தேதி தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை இருவரும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர்.

அப்போது விக்னேஷ் சிவனின் நண்பர் புல்லாங்குழல் வாசித்து இருக்கிறார்.

விக்னேஷ் இவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘நான் பிழை நீ மழலை…’ என்ற பாடலை புல்லாங்குழல் மூலம் வாசித்துள்ளார்

அதை கணவர் விக்கியுடன் அருகில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தார் நயன்தாரா.

ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி அழத் தொடங்கினார் நயன்தாரா.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Nayanthara and Vignesh Shivan celebrated their 1st wedding Anniversary

90s கிட்ஸ்களின் பேவரைட் டைரக்டருக்கு மாரடைப்பு.; ஆஸ்பத்திரியில் அனுமதி!

90s கிட்ஸ்களின் பேவரைட் டைரக்டருக்கு மாரடைப்பு.; ஆஸ்பத்திரியில் அனுமதி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

90 கிட்ஸ்களின் பிரபல திகில் மற்றும் திரில்லர் தொடராக விளங்கிய ‘மர்மதேசம்’ தொடரை இயக்குநர் நாகா மற்றும் சி.ஜெ.பாஸ்கர் இயக்கியிருந்தனர்.

இந்த தொலைக்காட்சி தொடர் சன் டிவி-யில் 1995ஆம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.

இந்த சீரியலை நிச்சயம் 90கிட்ஸ் மறந்து இருக்க மாட்டார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம தேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிகழ்ச்சியை இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.

ரகசியம், விடாது கருப்பு, எதுவும் நடக்கலாம், சிதம்பர ரகசியம், யாமிருக்க பயமேன் போன்ற தொடர்களையும் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார்.

சாயாசிங் நடிப்பில் வெளியான ‘ஆனந்தபுரத்து வீடு’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இயக்குநர் நாகா ஓடிடி தளம் ஒன்றுக்கு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் நாகா இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சுருண்டு விழுந்தார்.

பட குழுவினர் அவரை உடனடியாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இயக்குனர் நாகாவுக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Marma desam director naga admitted in hospital due to heart attack

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை வாங்கினார் தமிழக அமைச்சர்

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை வாங்கினார் தமிழக அமைச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

‘மாவீரன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது.

இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.

‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை 5 மணிக்கு படக்குழு வெளியிட்டது.

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும், இந்த அறிவிப்பை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Maaveeran film tamilnadu release rights take udhayanidhi’s Red Giant

More Articles
Follows