தளபதி விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படக்குழுவின் திடீர் முடிவு.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படக்குழுவின் திடீர் முடிவு.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாரிசு படக்குழு தற்போது இறுதிக்கட்ட பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறது,

இம்மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்க படுகிறது . இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் ‘வரிசு’ படத்தின் முதல் சிங்கிள் பாடலை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக செய்திகள் வந்தன.

சில தொழில்நுட்ப சிக்கல்களால் ‘வரிசு’ முதல் சிங்கிள் இந்த தீபாவளிக்கு வெளியிடப்படாது என்றும் தீபாவளிக்கு ரிலீஸ் தேதியுடன் கூடிய சிறப்பு போஸ்டரை ரசிகர்களுக்கு விருந்தளிக்க படக்குழு முடிவு செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

பிளாக்பஸ்டர் கன்னட இயக்குனர் தளபதி விஜய்யுடன் இணைய விரும்புகிறார்

பிளாக்பஸ்டர் கன்னட இயக்குனர் தளபதி விஜய்யுடன் இணைய விரும்புகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிட்டத்தட்ட எல்லா படத் தயாரிப்பாளரும் விஜய்யை இயக்க ஆர்வமாக இருக்கிறார்கள். தற்போது பிரபல கன்னட இயக்குனர் ஒருவர் அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

பிரேம் கன்னட சினிமாவில் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குனர்.

சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் மற்றும் தர்ஷன் போன்ற பிரபல நடிகர்களுடன் பிளாக்பஸ்டர் படங்களை வழங்கியுள்ளார்.

இப்போது, ​​பிரேம் தனது ஒன்பதாவது படத்திற்காக துருவ் சர்ஜாவுடன் இணைந்துள்ளார், இது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.

Kannada director prem

இளம் ஹீரோ நடிக்கும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா?

இளம் ஹீரோ நடிக்கும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக தனது மூன்றாவது படத்தை விரைவில் தொடங்குவார் என கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அதர்வா முரளி உட்பட பல இளம் ஹீரோக்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

ஐஸ்வர்யா ஸ்கிரிப்டை விவரித்ததாகவும், படத்தில் ஒரு சக்திவாய்ந்த கெஸ்ட் ரோலில் நடிக்கும்படி தனது அப்பாவிடம் கோரிக்கை வைத்ததாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன.

கதைக்களம் மற்றும் அவரது பாத்திரம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட தலைவர் வெளிப்படையாக ஒப்புதல் அளித்துள்ளார் என தெரியவந்துள்ளது

atharvaa murali

அசோக் செல்வனின் ஃபீல் குட் டிராமா ‘நித்தம் ஒரு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அசோக் செல்வனின் ஃபீல் குட் டிராமா ‘நித்தம் ஒரு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அசோக் செல்வன் தனது அடுத்த படமான ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

வீரா, பிரபா மற்றும் அர்ஜுன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களுக்காக அவர் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார்.

தற்போது, ​​’நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி

இதை இன்று புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

ரோலக்ஸ், டில்லி ஒன்றாக இணையும் தருணம் – கார்த்தியின் சூப்பர் ரிப்ளை

ரோலக்ஸ், டில்லி ஒன்றாக இணையும் தருணம் – கார்த்தியின் சூப்பர் ரிப்ளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹைதராபாத்தில் நடந்த ‘சர்தார்’ தெலுங்கு ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், ரோலக்ஸ் மற்றும் டில்லி LCU இல் எப்போது சந்திக்கிறார்கள் என்று கார்த்தியிடம் கேட்கப்பட்டது.

“ரோலக்ஸும் டில்லியும் சந்திப்பார்களா என்று தெரியவில்லை.

இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக அடுத்த ஆண்டு கைதி 2 படத்தைத் தொடங்குவோம்.

கார்த்தி 2019 ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ படத்தில் டில்லியாகவும், ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ‘ரோலக்ஸ்’ ஆகவும் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளியை முன்னிட்டு புல் மீல்ஸ் வழங்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்

தீபாவளியை முன்னிட்டு புல் மீல்ஸ் வழங்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.

கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை… என்ன ஒன்று, அதை ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும்.. அவ்வளவுதான்..

தங்களது தயாரிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக நாளை (அக்-21) வெளியாகும் சர்தார் படத்தை அப்படி ஒரு புல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது பிரின்ஸ் பிக்சர்ஸ்.

கார்த்தியின் டபுள் ஆக்சன், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயனின் கலர்புல் காம்போ, இருக்கையில் அமர்ந்ததுமே ரசிகர்களை கதையோட்டத்திற்குள் இழுத்து செல்லும். ஜி.வி பிரகாஷின் இசை என ரசிகர்களின் முழு திருப்திக்கு நான் கியாரண்டி என்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.

அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே சர்தார் படத்திற்கான எதிர்பார்ப்பு லெவல் எகிறியதால் இந்தப் படத்தின் வியாபாரத்திலும் அது பெரிய அளவில் எதிரொலித்துள்ளது..

குறிப்பாக அதிக அளவிலான திரையரங்குகள் இந்தப் படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் தீபாவளி ரேஸில் சர்தார் முன்னிலையில் இருக்கிறது.

அழகான தரமான எண்டெர்டெய்ன்மெண்ட் படங்களைத் தொடர்ச்சியாக மக்களின் பார்வைக்கு தந்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ், அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து இன்னும் பிரமிப்பூட்டும் படைப்புகளைத் தர இருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.

Karthi starrer Sardar takes front position in Diwali race

More Articles
Follows