ஜெயலலிதாவின் பயோபிக் ‘தலைவி’ OTT-யில் ரிலீஸ் ஆகிறதா..?

ஜெயலலிதாவின் பயோபிக் ‘தலைவி’ OTT-யில் ரிலீஸ் ஆகிறதா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalaiviகொரோனா பொது முடக்கத்தால் இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் பல தயாரிப்பாளர்கள் ஆன்லைன் ஓடிடியில் நேரடியாக தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி என்ற படமும் நேரடியாக OTTயில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் பரவியது.

தமிழ், ஹிந்தி ஆகிய இரண்டையும் சேர்த்து கிட்டதட்ட ரூ. 55 கோடிக்கு விற்பனையகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கிவருகிறார். கொரோனா பிரச்சினை முடிந்தபின் இன்னும் சில காட்சிகளை எடுக்கவிருக்கிறாராம்.

ஜெயலலிதாவாக வேடத்தில் கங்கனா ரணாவத் மற்றும் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ள கங்கனா ஓடிடி செய்தியை மறுத்துள்ளார்.

தலைவி படம் OTT தளங்களுக்கு விற்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் தலைவி தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக OTTயில் ரிலீஸ் ஆகாது.

பிரம்மாண்டமான படங்கள் தியேட்டர்களுக்காகத்தான் எடுக்கப்படுகிறது. OTT ரிலீஸை விட தியேட்டர் ரிலீஸுக்கு தகுதியான படம் தலைவி என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா போல தோற்றமளிக்க prosthetic மேக்கப் போடப்படுகிறது. இதற்காக அமெரிக்கா சென்று prosthetic லுக் டெஸ்ட்டையும் எடுத்தாரம் கங்கனா.

ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைவி படத்திற்காக 12 கிலோ எடையை அதிகரித்துள்ளார் கங்கனா.

மேலும் தமிழில் பேச பயிற்சி, பாரதநாட்டியம் ஆகியவையும் கற்றுள்ளார்.

தட்டுல தாளம் போட்டால் சோறு கிடைக்காது; நாமே தீர்வின் முதல் தொண்டனாக கமல்

தட்டுல தாளம் போட்டால் சோறு கிடைக்காது; நாமே தீர்வின் முதல் தொண்டனாக கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal launches Naame Theervu to help Chennai in fight against Coronaகொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையே உலுக்கி வருகிறது.

இதன் பாதிப்பில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. சென்னையை மிக மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது.

கொரோனா தாக்குதலில் சென்னையை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளதாக தமிழக முதல்வரே அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன், நாமே தீர்வு என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில்…

தட்டுல தாளம் போட்டால் சோறு கிடைக்காது என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட அது உண்மையாகிவிட்டது. நான் தட்டுனது உங்களின் கவன ஈர்ப்புக்காகவே. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்கடக்க நடந்து பசியால் சாவதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

நாள், கிழமை மறந்து இயங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், வீழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம், சிதையும் வாழ்வாதாரம், அன்றாட காட்சிகள் பசியால் மரணம்… இவை எல்லாமும் நம் எல்லோரின் அலட்சியத்தால் தான். இதை எல்லாம் பார்க்கும் கோபம் வருகிறது.

கொள்ளை நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு மீது விமர்சனம் வைக்க இது நேரம் அல்ல. இது சில்லறை அரசியலுக்கான நேரம் அல்ல.

நாளை என்ன, இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான, ஆக்கப்பூர்வ செயல்களுக்கான நேரம். இது நாமே தீர்வாகும் நேரம். சென்னையை கொரோனாவுக்கான தலைநகராக நாம் மாற்றி விடக்கூடாது. இதற்கான முயற்சி தான் நாமே தீர்வு எனும் இயக்கம்.

இது தனி மனித இயக்கம் அல்ல, நாம் அனைவரும் பங்கேற்கும் இயக்கம். இனி வரும் நாட்களுக்கு நாள் சாதி, மதம், மொழி, கட்சி பேதங்கள் கடந்து ஒரே கோட்டில் இணைவோம்.

இந்த முயற்சியின் முதல் தொண்டன் நான். இன்னும் நிறைய தொண்டர்கள் தேவை. வாருங்கள் நாமே தீர்வாவோம்.

என கமல் அதில் பேசியுள்ளார்.

இணைந்து மீட்டெடுப்போம் சென்னையை. அழையுங்கள் 63698 11111.

Kamal launches Naame Theervu to help Chennai in fight against Corona

கொரோனா உதவி: ஐ.நா-வின் நல்லெண்ண தூதரானார் சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா

கொரோனா உதவி: ஐ.நா-வின் நல்லெண்ண தூதரானார் சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Corona Help UN appoints Madurai barbers daughter Nethra as UNADAPமதுரையில் மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் சலூன் கடைக்காரர் மோகன். இவருக்கு வயது 48.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை நிவாரணமக வழங்கினார்.

மேலும் பலர் இவரின் உதவியை நாட தனது மகள் நேத்ராவின் ஐஏஎஸ் படிப்புக்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து உதவினார்.

இவரின் மகள் நேத்ரா தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார்.

நடிகர் பார்த்திபன் உட்பட பலரும் மோகனை பாராட்டினர். மேலும் அவரின் மகள் நேத்ரா கல்விக்கு உதவுவதாக அறிவித்தனர்.

மோகன் இந்த நெகிழ்ச்சியான உதவியை அறிந்த பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் மகள் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்காக வழங்கியதை பாராட்டி, ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதி சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக நேத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக நாடுகள் உறுப்பினராக உள்ள ஐ.நா சபையில் பொதுச்சபை, பாதுகாப்பு சபை என்ற இரண்டு முக்கிய அமைப்புகள் உள்ளன. அதேபோன்று உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக நிறுவனம், உலக விவசாய நிறுவனம், கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், உலகத் தொழிலாளர் அமைப்பு, உலக குழந்தைகள் நிதி அமைப்பு என்று பல துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில், வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஐ.நா அவை (United Nations Association for Development and Peace) சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக (GOODWILL AMBASSADOR FOR THE POOR) நேத்ரா அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேத்ராவின் எதிர்காலத்திற்காக ஒரு லட்ச ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளனர்.

மேலும் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மாநாட்டில் வறுமை ஒழிப்பு தொடர்பாக நேத்ரா பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Corona Help UN appoints Madurai barbers daughter Nethra as UNADAP

இணையத்தை கலக்கும் அர்ஜூன்-ஹர்பஜன் சிங்-லொஸ்லியாவின் ‘பிரண்ட்ஷிப்’

இணையத்தை கலக்கும் அர்ஜூன்-ஹர்பஜன் சிங்-லொஸ்லியாவின் ‘பிரண்ட்ஷிப்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arjun Harbhajan Singh Losliyas Friendship Motion Poster goes viralஆக்ஷன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் பிரண்ட்ஷிப்.

இந்த படத்தினை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

இது முழுக்க முழுக்க கோயம்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் படமாக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாட்டில் பிரபலம் ஆன லொஸ்லியாவுக்கு நாயகியாக இதுதான் முதல் படம்.

அதுபோல் கிரிக்கெட் வீர்ர் ஹர்பஜன் சிங் இந்த படதின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இதற்கு முன்பு சந்தானத்தின் டிக்கிலோனா என்ற படத்திலும் நடித்துள்ளார். அந்த படமும் இன்னும் வெளியாகவில்லை.

பஞ்சாபை சேர்ந்த ஹர்பஜன் சிங் படிப்பை பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் மீண்டும் தொடர கோயம்பத்தூரில் படிக்க வருகிறார்.

அதே கல்லூரியில் லொஸ்லியாவும் படிக்கிறார்.

இவர்களுடன் ஒரு ப்ரெண்ஷிப் கேங் இணைகிறது. அதுதான் இந்த படத்தின் கதைக்களம் என்றும் கிரிக்கெட்டும் இதில் முக்கியத்துவம் பெறுகிறதாம்.

அர்ஜீன் வேடம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது ‘பிரண்ட்ஷிப்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Arjun Harbhajan Singh Losliyas Friendship Motion Poster goes viral

இந்திய திரையுலகில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் 20 ஆண்டுகள்; ஒரு பார்வை

இந்திய திரையுலகில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் 20 ஆண்டுகள்; ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cinematographer ravi varmanஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பன்முகப்பட்ட திரையுலகங்களில் 20 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார்.

இவர் பன்முகதிறமையாளர், ஒரு சிறந்த இயக்குனர், ரசனையான ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் என பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர்.

மணி ரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி, அனுராக் பாசு, இம்தியாஸ் அலி, பிரியதர்ஷன், ஷங்கர், கௌதம் மேனன், பிரபு தேவா, கே எஸ் ரவிக்குமார், பிரசாந்த் நீல் தேஜா, சுஷி கணேசன், டுவேன் அட்லர், ரேவதி, ராஜீவ் குமார், ஜெயராஜ், ரஃபி மெக்கார்டின், சஜி கலியாஷ் மற்றும் பல சிறந்த இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியது அவரது திறமை மற்றும் விளக்கக்காட்சிக்கு சான்றாக விளங்குகிறது.

இந்த 20 ஆண்டுகால திரையுலக வாழ்வில் சிறப்பான 32 க்கும் மேற்பட்ட இயக்குனர்களுடனும், 35+ பிற படங்களிலும், 400
விளம்பரப்படங்களிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

ஆஸ்கர் பிலிம்ஸ் வி ரவிச்சந்திரன் தயாரித்த ‘மாஸ்கோவின் காவேரி’ (2010) மூலம் அவர் தன்னை ஒரு எழுத்தாளர் – இயக்குனராகவும் அடையாளம் காட்டினார்.

இப்படத்தின் மூலமாக தான் நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது திறமைகளுக்கு 23 வது ஈஎம்ஈ சர்வதேச விருது, மாநில விருதுகள், பிலிம் ஃபேர் விருதுகள், ஐஃபா விருதுகள், ஸ்க்ரீன் விருதுகள் மற்றும் பல அங்கீகாரங்கள் சான்றாக இருக்கின்றன.

பரத்பாலாவின் ‘மீண்டும் எழுவோம்’: கொரோனா ஊரடங்கில் பல மைல்களை கடந்து 14 மாநிலங்களில் 117 பேர் படமாக்கினர்.!

பரத்பாலாவின் ‘மீண்டும் எழுவோம்’: கொரோனா ஊரடங்கில் பல மைல்களை கடந்து 14 மாநிலங்களில் 117 பேர் படமாக்கினர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharat Balaஇந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். அனைவருடைய வாழ்க்கையிலும் இந்த ஊரடங்கை மறக்கவே முடியாது.

இதுவொரு திருப்புமுனை. இதை வரும் தலைமுறைகளுக்காக நாம் எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது அனைவருடைய மனதிலே இருந்தது. அதை இயக்குநர் பரத்பாலா செயல்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் எல்லா தலைமுறைக்காகவும் இந்தியாவை புதிய கோணத்தில் காட்சியமைத்து பதிவு செய்யும் இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ‘வந்தே மாதரம்’, ‘ஜன கன மன’, மேலும் ஜியோ உடோ படோ ஜீதோ, காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான அதிகாரப்பூர்வ காணொலி என அனைத்துமே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இந்தக் காணொலிகள் அனைத்துமே தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படக் கூடியவை.

தற்போது இந்த கொரோனா ஊரடங்கை ‘மீண்டும் எழுவோம்’ என்ற பெயரில் ஆவணப்படுத்தியுள்ளார்..

தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து இதனை சாத்தியப்படுத்தியுள்ளார். வரும் தலைமுறைகளுக்காக இயக்குநர் பரத்பாலாவும், அவருடைய 117 பேர் கொண்ட 15 குழுக்களும் இதுவரை பார்த்திராத தேசிய ஊரடங்கை தங்கள் கேமராக்களில் காட்சிகளாகச் சிறை பிடித்துள்ளனர்.

கண்டிப்பாக வரும் தலைமுறையினர் கண்ணுக்குத் தெரியாத ஒரு நோய் தொற்றால் இந்தியா எப்படி முழுமையாக ஸ்தம்பித்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தப் படப்பிடிப்புக்கான தலைமை கட்டுப்பாட்டு அறையை மும்பையில் அமைத்து அங்கு ஒரு குழு வாரத்தின் அனைத்து நாட்களும் பூட்டப்பட்டே இருந்தனர். 14 மாநிலங்களில் பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து படம்பிடித்த காட்சிகள் அனைத்தையுமே இந்த குழுவினர் ஒருங்கிணைத்தனர்.

களத்திலிருக்கும் குழுக்கள் வாட்ஸ்-அப் வீடியோ கால், ஜும் செயலி உள்ளிட்ட தொழில்நுட்ப வாயிலாக பரத்பாலாவை தொடர்பு கொண்டு இதனை படமாக்கினர். தேவைப்படும் காட்சிகளை இங்கிருந்து கூற அதனைப் படக்குழுவினர் முழுக்க தொழில்நுட்ப வாயிலாகவே இந்தியா முழுக்கவே காட்சிப்படுத்தி சாதனை புரிந்துள்ளனர்.

4 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப் படம் கண்டிப்பாக இந்தியாவின் கொரோனா ஊரடங்கைப் பார்ப்பவர்களுக்கு எடுத்துரைக்கும் இப்படத்திற்கு ‘மீண்டும் எழுவோம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஊரடங்கிலிருந்து, பொருளாதார இழப்பிலிருந்து எப்படி மீண்டு வந்துள்ளோம் என்பதை வரும் தலைமுறையினர் கண்டிப்பாக உணரும் வகையில் இருக்கும்.

வரும் 6ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது

இப்படத்தின் 4 நிமிட தொகுப்பினை அனைத்து ஊடகங்களும் வரும் 13ம் தேதி வரை நேரடியாக முழுவதும் எடிட் செய்யாமலும்
அளிக்கப்படும் லிங்கினை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்

என விர்டுவல் பரத் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்படுகிறது.

More Articles
Follows