தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
22-9-2016 அன்று இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசி வரை நடக்கவில்லை?
அமெரிக்க மருத்துவர் ரிச்சர்ட் பிலே பரிந்துரை செய்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்படவில்லை.
இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை ஏற்று, இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்..
சசிகலா, கே எஸ் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன – ஆறுமுகசாமி ஆணையம்.
ஜெயலலிதாவிற்கு உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார்.
ஆனால் 2 மாதத்திற்கு பின் இங்கிலாந்து மருத்துவரின் கருத்துப்படி இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என முடிவு மாற்றம்.
மருத்துவ ரீதியாக ஜெயலலிதாவை பரிசோதிக்காமல் இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என இங்கிலாந்து மருத்துவர் முடிவு செய்துள்ளார்.
கூடுதல் தகவல்…
ஜெயலலிதா இறந்த தேதியில் முரண்பாடு.. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4.12.2016 அன்று, பிற்பகல் 3.50 மணிக்கு காலமானார்
CPRல் சிகிச்சை என்பது அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தாமதத்திற்கான காரணமாக தந்திரமாகப் பயன்படுத்தப்பட்டன – ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை.
டிசம்பர் 4ம் தேதி மாலை ஜெயலலிதா இறந்தார் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிக்கை
2016 டிசம்பர் 5ம் தேதி அப்பலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வெளியான அறிக்கை.
Arumugan Commission submits Jayalalithaas Death probe report at TN Assembly