தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘எஸ் 3’ பட படப்பிடிப்பு விறுவிறுப்பாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
தற்போது அங்கு நிறைவு பெறுவதையொட்டி அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்கப்படவுள்ளது.
ஆனால் இதற்கு முன்பே, இப்படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
தெலுங்கு உரிமை 18 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதை முன்பே பார்த்தோம்.
தற்போது தமிழக உரிமை இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ. 40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.
இதனை உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இது அஜித்-விஜய் படங்களின் வியாபாரத்திற்கே சவால் விடுவதாகவும் கோலிவுட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படங்கள் எல்லாம் பெரும் வெற்றி பெற்றுள்ளதால், இப்படம் இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.