தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
என்னதான் காமெடி மற்றும் பேய் படங்கள் நன்றாக கல்லா கட்டினாலும் உலகம் முழுவதும் ஆக்சன் படங்களுக்கு என்றும் மவுசு இருக்கதான் செய்கிறது.
எனவே ஒவ்வொரு ஹீரோக்களும் தங்கள் படங்களில் ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
ரஜினியின் கபாலி படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார் பா.ரஞ்சித்.
இப்படத்தில் பாக்ஸராக நடிக்கவுள்ளதால் அதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறாராம் சூர்யா.
பத்ரி படத்தில் விஜய், பூலோகம் படத்தில் ஜெயம் ரவி ஆகியோர் பாக்ஸர்களாக நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.