தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பூலோகம் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் கல்யாண இணைந்துள்ள படம் ‘அகிலன்’.
இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்க ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதில் நாயகிகளாக பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இருவரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
எனவே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
‘அகிலன்’ திரைப்படம் நாளை மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களுடன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் உரையாடினார் ஜெயம் ரவி.
அப்போது ஒரு ரசிகர்.. “உங்களுக்கு படம் இயக்கும் எண்ணம் இருக்கிறதா.? அது எப்போது நிறைவேறும் என கேட்டுள்ளார்?
எனக்கு 50 வயது ஆவதற்குள் நான் படம் இயக்குவேன்” என தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.
i will film directing idea for jayam ravi