தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யா தன் பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு சூர்யா தற்போது நடித்துவரும் ‘கங்குவா’ என்ற படத்தின் க்ளிம்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் நரசராவ்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நக்கா வெங்கடேஷ் மற்றும் போளூர் சாய் ஆகிய இருவர் பேனர் கட்ட முயன்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரசிகர்களின் குடும்பத்தை வீடியோ காலில் தொடர்பு கொண்டுள்ளார் நடிகர் சூர்யா.
அப்போது அவர்களுக்கு கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்து அந்த குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் உறுதியளித்தாராம் சூர்யா.
Suriya fans 2 died in Kanguva celebrations