தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சூர்யா நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.
இவர்களுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோ நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக ரத்னவேலு பணிபுரிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தை வரும் மார்ச் 10ஆம் தேதி தியேட்டர்களில் உலகமெங்கும் வெளியிடப் படக்குழு தீர்மானித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதே மார்ச் 10ல் கார்த்தியின் ‘கைதி’ படமும் ரிலீசாகிறது. இது ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கார்த்தி நடித்த படம் ‘கைதி’.
2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையைப் புரிந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது.
தென்னிந்திய மொழிகளில் சாதனையைப் புரிந்த ‘கைதி’, இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது.
தற்போது ‘கைதி’ படத்துக்கு மற்றுமொரு மகுடமும் கிடைத்துள்ளது. ரஷ்ய மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
Suriya and Karthi films will release in same day