மீண்டும் வெங்கட் பிரபு-பிரேம்ஜியுடன் கைகோர்க்கும் சூர்யா

மீண்டும் வெங்கட் பிரபு-பிரேம்ஜியுடன் கைகோர்க்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya venkat prabu premji amaranவெங்கட் பிரபு தன் சொந்த பேனரில் தயாரித்து இயக்கியுள்ள படம் சென்னை 28 பார்ட் 2.

முதல் பாகத்தில் நடித்த ஜெய், பிரேம்ஜி, மிர்ச்சி சிவா உள்ளிட்ட கலைஞர்களுடன் இரண்டாம் பாகத்தில் நிறைய கலைஞர்களை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகிற அக்டோபர் 7ஆம் தேதி மாலை 7 மணிக்கு மலேசியாவில் வெளியிட இருக்கிறார்களாம்.

இதனை சூர்யா வெளியிட ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் இணைந்து பணியாற்றியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விஷாலுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

விஷாலுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal keethy sureshசுராஜின் கத்தி சண்டை படத்தை தொடர்ந்து, மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்கிறார் விஷால்.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.

இதனையடுத்து லிங்குசாமி இயக்கவுள்ள சண்டக்கோழி 2 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஷால்.

இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜீன் நடிக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷ்தான் நாயகியாக நடிக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்திர கோபை என்ற புதுமையான பெயரில் படமாகும் உண்மை சம்பவம்.

இந்திர கோபை என்ற புதுமையான பெயரில் படமாகும் உண்மை சம்பவம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indhira kobai‘இந்திர கோபை’… இந்த புதுமையான பெயரைப் போலவே ஒரு வித்தியாசமான படமும் உருவாகி வருகிறது.

‘இந்திர கோபை என்றால் எத்தனை முறை அழித்தாலும் ஒரு வகையான பூச்சி மண்ணில் உருவாகி கொண்டே இருக்குமாம்.

இந்த பூச்சியானது மழைக் காலங்களில் உருவெடுத்து, பின்னர் பவுடராக உதிர்ந்து விடும். அப்படி உதிர்ந்த பிறகு பல பூச்சிகளாக உருவெடுத்து விடுமாம்.

அதுபோல் இப்படத்தில் உதிர்ந்த காதல் மீண்டும் புதிய காதலர்களாக உருவெடுத்து வருகிறது என்கின்றனர் படக்குழுவினர்.

தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்த பிள்ளைகளை பெற்றோர்கள் வெறுப்பதும், அவர்களை வாழ விடாமல் துரத்தும் சமூகத்தை பற்றியதுதான் இப்படம்.

இதன் பின்னணியில் ஒரு உண்மை சம்பவம் மறைந்துள்ளதாம்.

அ ந அய்யும் கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் லட்சுமி பிரபா மற்றும் அய்யும் கணபதி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

அரிதாரம் என்ற படத்தை தொடர்ந்து, விஜய் டி.அலெக்சாண்டர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் ராஜு, ஆஷா லதா, விக்கி, மஞ்சு, ஜெயலட்சுமி, கிச்சா, தாமோதரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் ஒளிப்பதிவை வெள்ளா கேசவன் செய்ய, ரெனால்டு ரீகன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் தேனப்பன், கவிஞர் சொற்கோ, பிஆர்ஓ விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல், ஊமை விழிகள் அரவிந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விஜய்க்கு திருப்புமுனை கொடுத்தவருடன் இணையும் அர்விந்த்சாமி-மஞ்சு

விஜய்க்கு திருப்புமுனை கொடுத்தவருடன் இணையும் அர்விந்த்சாமி-மஞ்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind swamy and manju warriorகடந்த 2002ஆம் ஆண்டில் விஜய்யின் ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அப்போது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த படம் திருமலை.

அதுவரை மீசையுடன் தாடியில்லாமல் க்ளீன் ஷேவ்வாக வந்த விஜய், முதன்முறையாக கொஞ்சம் தாடி, ட்ரிம் செய்யப்பட்ட மீசையுடன் நடித்தார்.

ரமணா இயக்கிய இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, விஜய் இந்த கெட்டப்பிலே பல படங்களில் தொடர்ந்தார்.

இந்நிலையில் சுள்ளான், ஆதி படங்களை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் ரமணா.

இதில் அர்விந்த் சாமி நாயகனாக நடிக்க, நாயகியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார்.

மலையாளத்தில் கொடி பறந்த மஞ்சு, திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை.

பின்னர் இவரது கணவர் நடிகர் திலீப்பை விவாகரத்து செய்துவிட்டு தற்போது படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படம் மூலம் இவர் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

தனுஷ் வருவதற்குள் விஜய்சேதுபதியுடன் இணையும் இயக்குனர்?

தனுஷ் வருவதற்குள் விஜய்சேதுபதியுடன் இணையும் இயக்குனர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and vijay sethupathiவட சென்னை படத்தில் நடித்துக் கொண்டே பவர் பாண்டி படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.

இதனிடையில் கௌதம் மேனனின் என்னே நோக்கி பாயும் தோட்டா படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதன் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் அப்படம் தொடங்கப்படாமல் இருக்கவே, விஜய்சேதுபதியுடன் ஒரு குறுகிய கால படம் செய்யவிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.

இதற்கு முன்பே பீட்சா, இறைவி உள்ளிட்ட படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றியது இங்கே கவனிக்கத்தக்கது.

வெங்கையா நாயுடுவை ஐஸ்வர்யா தனுஷ் சந்தித்தது ஏன்.?

வெங்கையா நாயுடுவை ஐஸ்வர்யா தனுஷ் சந்தித்தது ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya dhanush Venkaiah Naiduரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்குனராகி படங்களை இயக்கி வருகிறார்.

வை ராஜா வை படத்தை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு முன்பு ”சினிமா வீரன்” என்ற ஆவணப்படத்தை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரஜினி வர்ணனை (வாய்ஸ் ஓவர்) கொடுக்கவிருக்கிறார்.

இப்படம் புகழ் வெளிச்சத்திற்கு வராத ஸ்டண்ட் கலைஞர்களை பற்றிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சற்றுமுன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்துள்ளார்.

இதுகுறித்து தன் ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது…

“தேசிய விருது பட்டியலில் சினிமா ஸ்டண்ட் கலைஞர்களை சேர்க்க வலியுறுத்த வேண்டும்” என கடிதம் மூலம் கேட்டுக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

cinema veeran 1st look

More Articles
Follows