தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28’ மற்றும் இதன் இரண்டாம் பாகத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
அதில் நடித்த நிதின் சத்யா தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
இவர் தயாரிக்கும் முதல் படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெபா மோனிகாஜான் நடிக்கிறார். இவர் இதற்கு முன் ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்கராஜ்யம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரோபோ சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கும் ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Jai signed to play the hero in Actor Nitinsathyaas maiden production