தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் முழு அடைப்பும் அரசின் ஆதரவோடு நடந்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு ஆதரவாக நடிகை சுஹாசினி பேசியதாக செய்திகள் பரவின்.
இதுகுறித்து சுஹாசினி அளித்துள்ள விளக்கத்தில்…
காவிரி பிரச்சனை குறித்து எந்த சமூக வலைத்தளங்களிலும் தான் எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
அந்த கருத்துக்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.