தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மாநாடு’.
யுவன் இசையமைத்துள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
இந்த படம் நவம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
‘மாநாடு’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது.
இந் நிகழ்ச்சியில் மாநாடு ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
இதில் பேசிய பிரபலங்கள் சிம்புவை வெகுவாக புகழ்ந்தனர்.
இறுதியாக சிம்பு பேசினார்.
சிம்பு என்ன பேசுவார் என்று ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு சிம்பு கொடுத்தது அதிர்ச்சி தான்.
முதலில் 3 நிமிடம் ரசிகர்களின் கோஷத்தால் பேச முடியாமல் தவித்தார். இறுதியாக எமோஷனல் ஆகி கண்ணீர் விட்டு பேச முடியாமல் தவித்தார்.
“எனக்கு கடந்த சில வருடங்களில் நிறைய பிரச்சினைகள் வந்தன.. பிரச்சினைகளை நான் பாத்துகுறேன்.. என்னைய நீங்க பாத்துகுங்க..” என ரசிகர்களிடம் கண்ணீரூடன் கோரிக்கை வைத்தார் சிம்பு.
STR request his fans at Maanaadu pre release event