தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன்பு ‛‛இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் பாடலை குறிப்பிட்டு, ‛ழ’ கரத்துடன் போட்டோவை பதிவிட்டு, தமிழணங்கு என பதிவிட்டார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இதனையடுத்து மத்திய அமைச்சர் அமித் ஷா, ‛‛ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்கனும்” எனத் தெரிவித்தார்.
ஒரு மொழியை கற்பது தவறல்ல. ஆனால் மொழி திணிப்பதை ஏற்க மாட்டோம் என பலர் கருத்து தெரிவித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னையில் நடந்த CII – சிஐஐ மாநாட்டில் பங்கேற்று பேசிய ரஹ்மான், ‛‛தமிழ் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமைப்பட வேண்டும்.
ஒரே இந்தியா தான். வட இந்தியா, தென் இந்தியா என்றில்லை” என்றார்.
மேலும் ‛‛இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியது பற்றிய கேள்விக்கு… ‛தமிழ்தான் இணைப்பு மொழி’ என்று சொன்னவர் ரஹ்மான்.
இந்த நிலையில் இன்று ஏப்ரல் 12ல் நடிகர் சிம்பு & இசையமைப்பாளர் அனிருத் இருவரும் தமிழால் இணைவோம் #TamilConnects எனப் பதிவிட்டுள்ளனர்.
STR and Anirudh take strong political stand following AR Rahman