ராஜமௌலி தந்தையுடன் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ பட தயாரிப்பாளர் ஒப்பந்தம்

ராஜமௌலி தந்தையுடன் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ பட தயாரிப்பாளர் ஒப்பந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதுவதற்காக இந்திய சினிமாவின் பிரபல திரைக்கதை மேதையும், முன்னணி இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் பி ரங்கநாதன் தெரிவித்தார்.

‘பாகுபலி 1 மற்றும் 2’, ‘பஜ்ரங்கி பைஜான்’, ‘மணிகர்னிகா’ மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஆர் ஆர் ஆர்’ உட்பட தெலுங்கு, தமிழ், இந்தி என 25க்கும் மேற்பட்ட இந்திய அளவிலான பிரமாண்ட வெற்றி படங்களுக்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் படத்தில் முன்னணி நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் ரங்கநாதன் கூறினார்.

ஸ்ரீவாரி பிலிம் ஏற்கனவே ‘தர்மபிரபு’ மற்றும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.

‘தர்மபிரபு’ படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப சித்திரமாகும். இதில் சேரன், கௌதம் கார்த்திக், சரவணன், சிவாத்மிகா, வெண்பா, சௌந்தர்ராஜா முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.

விநியோகஸ்தராக திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரங்கநாதன் தனது கடின உழைப்பின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்தவர் ஆவார்.

தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல படங்களை அவர் விநியோகம் செய்து சந்தைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sri Vaari films producer joins KV Vijayendra Prasad for his next

டைவர்ஸ் அறிக்கையில் கூட அதை சொன்னீங்களே.. பர்ஸ்ட் நீங்க பாஃலோ பண்ணுங்க தனுஷ்!

டைவர்ஸ் அறிக்கையில் கூட அதை சொன்னீங்களே.. பர்ஸ்ட் நீங்க பாஃலோ பண்ணுங்க தனுஷ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று (ஜனவரி 17) தன் இல்வாழ்க்கையில் இருந்து தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் நடிகர் தனுஷ்.

இது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரஜினி மகளின் வாழ்க்கை இப்படியானதே என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விவாகரத்து என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். கணவன் மனைவி இடையில் தலையிட நாம் யார்.? தங்கள் வாழ்க்கையை தீர்மானிக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. தற்போது விஷயம் அதுவல்ல.

தனுஷின் சமீபகால கடிதம் மற்றும் அறிக்கைகளை பார்த்தால் தன் முழுப்பெயரை குறிப்பிடமாட்டார். அதில் வெறும் D என்ற எழுத்து மட்டுமே இருக்கும்.

மேலும் தவறாமல் ஓம் நமசிவாயா.. என்ற வார்த்தையும் அத்துடன் SPREAD LOVE என்ற வார்த்தையும் இடம் பெற்றிருக்கும்.

நேற்றை விவாகரத்து அறிக்கையில் கூட இறுதியாக SPREAD LOVE என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்.

SPREAD LOVE… SPREAD LOVE… என மூச்சுக்கு 300 முறை சொல்லும் நீங்கள் அதை பாஃலோ செய்யாமல் தானே இப்படி ஒரு விவாகரத்து உங்களுக்குள் நிகழ்ந்துள்ளது.

அப்படியென்றால் அதை மீண்டும் மீண்டும் நீங்கள் ஏன்? சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்..?

நீங்கள் சரியாக SPREAD LOVE செய்திருந்தால் உங்கள் விவகாரம் விவாகரத்து வரை வந்திருக்குமா? ப்ரோ..

எனவே அட்வைஸ் யாரு வேணாலும் செய்யலாம்.. ஆனால் அதை பாஃலோ செய்வது ரொம்ப கஷ்டம். மிஸ்டர் .டி.

எனவே இனிமேலாவது அதை தவிர்த்துவிடுங்கள் தனுஷ்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் …
சொல்லிய வண்ணம் செயல்

A common man doubt on Dhanush’s decision

EXCLUSIVE ஐஸ்வர்யா விவாகரத்து.: தனுஷை வெறுக்கும் ரஜினி ரசிகர்கள்.; ஏன்? ஓர் அலசல்

EXCLUSIVE ஐஸ்வர்யா விவாகரத்து.: தனுஷை வெறுக்கும் ரஜினி ரசிகர்கள்.; ஏன்? ஓர் அலசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் எப்போதும் பாசக்காரர்கள். சினிமாவை தாண்டியும் ரஜினி மீது தீவிர பக்தி கொண்டவர்கள்.

ஒரு சிலர் ரஜினியை தெய்வமாக வழிப்பட்டனர். எனவே தான் ரஜினி படங்கள் ரிலீசின் போது பால் அபிஷேகம் செய்கின்றனர்.

ரஜினி உடல்நலம் குன்றியபோது அவருக்காக மொட்டை போட்டு மண்சோறு சாப்பிட்டவர்கள் ஏராளம்.

ரஜினி மீது எந்தவொரு பிரபலம் பாசம் வைத்திருந்தாலும் அவரை கொண்டாடுவார்கள்.

அதே சமயம் ரஜினியை ஒருவர் திட்டினால் தங்கள் எதிரிகளாகவே நினைப்பர். பாபா பட ரிலீஸ் சமயத்தில் ஒரு கட்சிக்கும் ரஜினிக்கும் மோதல் முற்றியது நிலையில் அந்த கட்சியை தங்கள் ஜென்ம விரோதியாக எண்ணியது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் மோதல் முற்றி நிலையில் ரஜினிக்கு ஆதரவாகவே சில அதிமுகவினர் நின்றனர்.

அதுபோல் ரஜினி மீது வைத்திருக்கும் அன்பை ரஜினி மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா சௌந்தர்யா மீது வைத்திருந்தனர் ரசிகர்கள்.

மேலும் ரஜினி அண்ணன் சத்யநாராயண ராவ், ரஜினி ரசிகர் மன்ற முன்னாள் தலைவர் சத்யநாராயணா மற்றும் தற்போதைய தலைவர் சுதாகர் ஆகியோர் மீதும் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர்.

மற்றொரு நடிகர் படத்தில் ரஜினி பட காட்சிகளோ ரஜினி வசனங்களோ வந்தால் அதற்காகவே படத்தை பலமுறை பார்ப்பார்கள் ரஜினி ரசிகர்கள்.

இதனாலேயே விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்கள் ஆரம்ப கால படங்களில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை வைத்திருப்பார்கள்.

ஒரு கட்டத்தில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் துனுஷ் திருமணம் செய்தார். 2004ல் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

அப்போது முதலே ஒரு சில ரஜினி ரசிகர்கள் தனுஷை தங்கள் குடும்ப உறுப்பினர் போல நினைத்தனர்.

திருமணத்திற்கு பிறகும் தனுஷ் பற்றி சில கிசுகிசுக்கள் வந்தபோது கூட தனுஷை பிடிக்காத ரஜினி ரசிகர்கள் மௌனம் காத்தனர். அப்படியொரு பாசத்தை ரஜினி குடும்பத்தினர் மீது அவர்கள் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று 2022 ஜனவரி 17 இரவு 11 மணியளவில் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார் தனுஷ்.

இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரு மகன்கள் இருக்கும் நிலையில் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இவர்கள் பிரிவதாக அறிவித்தனர்.

மகள்களை பெற்ற ஒரு தந்தையின் வேதனையை புரிந்துக் கொண்டு ரஜினிக்கு ஆதரவாக ஆறுதலாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ரஜினியின் மருமகன் என்பதால் தனுஷை சிலர் இளைய சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். அப்போதே இது ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருந்தது. ஆனால் ரஜினிக்காக பொறுத்துக் கொண்டனர்.

அதுபோல் ரஜினியின் சூப்பர் ஹிட் படப் பெயர்களை தொடர்ந்து தன் படத்திற்கு பயன்படுத்தி வந்தார் தனுஷ். படிக்காதவன், பொல்லாதவன், மாப்பிள்ளை என பல படப்பெயர்களை வைத்துக் கொண்டார். இதுவும் ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டனர்.

தற்போது ரஜினி மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் விவாகரத்து செய்வதாக அறிவித்துவிட்டதால் தனுஷை வெறுப்பதாக பதிவிட்டு வருகின்றனர் சில ரஜினி ரசிகர்கள்.

தலைவா நாங்க இருக்கோம் என ரஜினிக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் சொல்லி வருகின்றனர். ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் தனுஷை பாலோ செய்த ரஜினி ரசிகர்கள் அன் பாலோ UNFOLLOW செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யாவும் முதல் கணவர் அஸ்வினை பிரிந்து நடிகர் விசாகன் என்பவரை 2வது திருமணம் செய்துக் கொண்டார்.

அதுவே ரஜினிக்கு பெரிய இடியாக இருந்த நிலையில் தற்போது மூத்த மகள் ஐஸவர்யாவின் திருமண வாழ்வும் இப்படியாகி விட்டதே என ரஜினிக்காக வருந்துகின்றனர் ரஜினி ரசிகர்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

ட்விட்டர் பேஸ்புக் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் STAY STRONG THALAIVAA… என்றென்றும் நாங்க இருப்போம் உன்னோடு தலைவா என தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

– ராஜேஷ்…

Aishwarya Dhanush Divorce Rajinikanth fans reaction

BREAKING ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து தனுஷ் அறிக்கை.; ரஜினி குடும்பத்தில் அடுத்த டைவர்ஸ்

BREAKING ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து தனுஷ் அறிக்கை.; ரஜினி குடும்பத்தில் அடுத்த டைவர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ல் திருமணம் செய்துக் கொண்டார் நடிகர் தனுஷ்.

17 வயதில் சினிமாவில் அறிமுகமான தனுஷ் 22 வயதில் திருமணம் செய்தார்.

அப்போது நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனுக்கு கூட திருமணம் நடக்கவில்லை என்பதும் தனுஷை விட ஐஸ்வர்யா மூத்தவர் என்பது சலசலப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்தின் இல்ல திருமண விழா என்பதால் அப்போது கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் இந்த திருமண விழாவில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என பெயரிட்டனர். இவர்கள் தாத்தா ரஜினி மீது பாசமாக இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது 18 வருட மணவாழ்க்கைக்கு பிறகு தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

தனுஷ் அறிக்கையில்…
18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம்.

மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதே குறிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஐஸ்வர்யா தனுஷ், “கேப்ஷன் தேவையில்லை என நினைக்கிறேன். உங்கள் அனைவரின் புரிதலும், அன்பும்தான் மிக தேவையானது” என குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும் அஸ்வின் என்ற கணவரை விவாகரத்து செய்தார். 2010ல் திருமணம் செய்து 2017ல் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் பிறந்தான்.

2019 முதல் தற்போது 2வது கணவர் விசாகனுடன் வாழ்ந்து வருகிறார் சௌந்தர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush announces separation from wife Aishwarya after 18 years

‘மாநாடு’ படத்தை அடுத்து ‘மன்மத லீலை’க்கு தாவிய வெங்கட்பிரபு

‘மாநாடு’ படத்தை அடுத்து ‘மன்மத லீலை’க்கு தாவிய வெங்கட்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புவை வைத்து மாநாடு படம் இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்தார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இதனையடுத்து வெங்கட் பிரபுவின் அடுத்த படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இவரின் அடுத்த படம் அடல்ட் காமெடி திரைப்படமாக உருவாகவுள்ளதாம்.

வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனரான மணிவண்ணன் எழுதியுள்ளார்.

ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களை இந்த படம் பேசும் என்கின்றனர்.

பாக்யராஜின் ‘சின்ன வீடு’ திரைப்பட பாணியில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ‘மன்மத லீலை’ என்று பெயரிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்ய வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

Director Venkat Prabhu’s next film is announced

பிணவறை ரகசியங்களை உடைக்க வரும் RK சுரேஷ் – ஆனந்தி ஜோடி

பிணவறை ரகசியங்களை உடைக்க வரும் RK சுரேஷ் – ஆனந்தி ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.கே. சுரேஷ் தயாரித்து நடித்து வரும் புதிய படம் ‘ ஒயிட் ரோஸ்’.

இப்பட டைட்டில் பொங்கல் தினத்தில் வெளியானது. மற்றொரு நாயகனாக ரூசோ நடிக்கிறார்.

இந்தப் படத்தை ஆர். கே. சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோவின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதில் நாயகியாக கயல்’ ஆனந்தி நடிக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் ராஜசேகரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் சுசிகணேசனிடம் சினிமா பயின்றவர்.

மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.

சைக்கோ திரில்லர் படமான இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது.

இப்பட டைட்டில் அறிவிப்பை நடிகர் எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

RK Suresh and Anandhi joins for a new film

More Articles
Follows