‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தை அடுத்து மீண்டும் இணைந்த சேரன் – ஸ்ரீபிரியங்கா

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தை அடுத்து மீண்டும் இணைந்த சேரன் – ஸ்ரீபிரியங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நந்தா பெரியசாமி இயக்கத்தில்
சேரன் கௌதம் சிவாத்மிகா வெண்பா சரவணன் மௌனிகா ஸ்ரீ பிரியங்கா ஆகியோர் நடித்துள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படம் டிசம்பர் 24ல் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் சேரன் – ஸ்ரீ பிரியங்கா இணைந்து மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளனர்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் துருவா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த புதிய படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், அமீர் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இசக்கி கார்வண்ணன் என்பவர் இயக்க, லட்சுமி கிரியேசன்ஸ் தயாரிக்க, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு ‘தமிழ்க்குடிமகன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‛‛உங்கள் அனைவரின் அன்போடு இன்று இனிய துவக்கம் என தெரிவித்துள்ளார் சேரன்.

Cheran and Sri Priyanka joins for a new film

எங்களை பார்த்து புதியவர்கள் வியக்க வேண்டாம்..– கமல்ஹாசன்

எங்களை பார்த்து புதியவர்கள் வியக்க வேண்டாம்..– கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், மணிகண்டன், அபி, நாசர், கேஎஸ்.ரவிக்குமார், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛‛சில நேரங்களில் சில மனிதர்கள்”.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துக் கொண்டார்.

அந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது…

எங்களை பார்த்து புதியவர்கள் வியக்க வேண்டாம். நாங்கள் செய்த தவறை நீங்கள் செய்யாமல் இருந்தால் போதும்.

சினிமாவுக்கு சாதி, மதம் கிடையாது. தியேட்டரில் விளக்கை அணைத்து விட்டால் அங்கு சாதி, மதம் இல்லை.

சினிமாவல் ஆர்வம், திறமை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.

இங்கு குப்பத்திலும், மழைநீரிலும் நான் நடந்து சென்றேன். அப்போது வராத கொரோனா நான் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் போய்விட்டு வந்த பின் வந்து விட்டது.

எனவே யாரும் அஜாக்கிரதையாக இருக்காதீர். முககவசம் நம் உயிரை காக்கும் கவசமாக மாறியுள்ளது. எனவே மறவாமல் அணிந்துக் கொள்ளுங்கள்”

இவ்வாறு கமல் பேசினார்.

Kamal Haasan speech at Sila Nerangalil Sila Manidhargal trailer launch

துபாயில் வேலை செய்த தருணங்கள்…; துபாய் நாட்டில் தன் நினைவுகளை பகிர்ந்த விஜய்சேதுபதி

துபாயில் வேலை செய்த தருணங்கள்…; துபாய் நாட்டில் தன் நினைவுகளை பகிர்ந்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எனக்கு நிறைய கடன்சுமை இருந்தது. எனவே நான் நிறைய சம்பாதிக்கவே சினிமாவிற்கு வந்தேன் என பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி.

இவர் நடிகராவதற்கு முன்பு துபாய் நாட்டில் 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அதன்பிறகே திருமணம் செய்துக்கொண்டார் . சினிமாவில் நடிக்க துவங்கினார்.

இவர் துபாய் தங்கியிருந்த போட்டோக்களை அடிக்கடி இணையத்தை காணலாம்.

இந்த நிலையில் இவர் தன் துபாய் நினைவுகளை துபாய் நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

துபாய் அமீரகத்தின் 50வது பொன்விழா விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார் விஜய்சேதுபதி.

அமீரகத்தில் வசிக்கும் ஆசிய நாடுகளை சேர்ந்த சிறந்த தொழில் அதிபர்கள், நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விஜய் சேதுபதி விருதுகளை வழங்கினார்.

பின்னர் செல்வாக்கு மிகுந்த நட்சத்திர விருதினை டாக்டர் மாஜித் பின் சயீத் அல் நுயைமி அவர்கள் விஜய்சேதுபதிக்கு அந்த விருதை வழங்கினார்.

விஜய்சேதுபதி பேசும்போது.. “நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். நான் கடந்த 2000ம் ஆண்டு துபாய்க்கு வந்தேன். 3 ஆண்டுகள் தங்கி வேலை பார்த்தேன்.

இங்குள்ள தெருக்களில் எனது கனவுகளுடன் நடந்தேன். இங்கு வந்தபிறகு இது வெளிநாடு என்ற உணர்வு இல்லாமல் எனது 2வது தாய்நாடு போல துபாய் நாட்டை உணர்ந்தேன்.” இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.

Vijay Sethupathi shares his working experience in Dubai

நடிகையை தன் 2வது மனைவியாக்கிய சுசீத்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக்

நடிகையை தன் 2வது மனைவியாக்கிய சுசீத்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அலைபாயுதே, தெய்வ திருமகள், வெப்பம், யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கார்த்திக் குமார்.

யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் முறைப் பையனாக நடித்திருப்பார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறையவே சினிமாவை விட்டு விலகினார்.

தற்போது மேடைகளில் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி கை நிறைய பணம் சம்பாதித்து வருகிறார்.

இவர் பாடகி சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த 2017ல் சுசித்ராவை விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் நடிகை அமிர்தா சீனிவாசன் என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார் கார்த்திக் குமார்.

மேயாத மான், தேவ் உள்ளிட்ட சில படங்களில் அமிர்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthik Kumar and Amrutha Srinivasan tie the knot

மகாத்மா சொன்னார்.. அஜித் செய்தார்.; மிரட்டலான ‘வலிமை’ மேக்கிங் வீடியோ.!

மகாத்மா சொன்னார்.. அஜித் செய்தார்.; மிரட்டலான ‘வலிமை’ மேக்கிங் வீடியோ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் – வினோத் – போனி கபூர் கூட்டணியில் உருவாகி உள்ள படம் வலிமை.

நாயகியாக ஹூமா குரேஷி, வில்லனாக கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அடுத்தாண்டு 2022 பொங்கல் வெளியீட்டிற்கு படம் தயாராகி வருகிறது.

ஏற்கனவே இப்பட டீசர், நாங்க வேற மாறி, அம்மா… ஆகிய பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது.. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது ஆகியவையும் இதில் குறிப்பிடப்பட்டது.

மேலும் பைக் வீலீங்.. ஆக்ஷன் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டன என்பதை விளக்கமாக இதில் அமைந்துள்ளது.

வீலீங் செய்யும்போது அஜித் தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னர் எழுந்து நிற்கிறார்.

வீழ்ந்தாலும் திரும்ப எழுவோம் என்பதை மகாத்மா காந்தி வரிகளுடன் காட்டியுள்ளனர்.

இந்த மேக்கிங் வீடிநோவை அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Valimai making..

Here comes the action-packed #ValimaiMakingVideo

அனைத்து துறைகளையும் அறிந்தவர் அல்லு அர்ஜூன்..; அசந்து நின்ற ‘அண்ணாத்த’ சிவா

அனைத்து துறைகளையும் அறிந்தவர் அல்லு அர்ஜூன்..; அசந்து நின்ற ‘அண்ணாத்த’ சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டின் எதிர்பார்ப்புமிக்க படங்களில் ஒன்றாக, ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படைப்பாக வெளிவரும் படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. ஸ்டைலிஷ் ஸ்டார்
அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து ‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 தயாரித்துள்ளனர்.

லைகா புரொடக்சன்ஸ் இப்படத்தை இணைந்து வழங்குகிறது. இத்திரைப்படத்தின் பெரும் பகுதி தமிழகத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த அகில இந்திய திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.

டிசம்பர் 17- ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்பதிப்பின் முன்வெளியீட்டுக்காக தமிழ் சினிமா பிரபலங்களுடன், நடிகர் அல்லு அர்ஜீன், உட்பட படக்குழுவினர் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

*ஸ்ரீ லட்சுமி மூவிஸ் திருப்பதி பிரசாத் பேசியதாவது…*

அல்லு அர்ஜூன், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், இயக்குநர் சுகுமார் அனைவருக்கும் வாழ்த்துகள். அல்லு அர்ஜூன் இங்கு சென்னையில் தி நகரில் தான் வளர்ந்தார்.

சின்னக் குழந்தையிலேயே ஒழுக்கத்தில் சிறந்தவராக இருந்தார். இந்தப்படம் காட்டுக்குள் அதிகம் படமாக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பா வெற்றிப்படமாக இப்படம் இருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும். எல்லோருக்கும் வாழ்த்துகள்.

*லைகா புரொடக்சன்ஸ் சார்பாக தமிழ்க்குமரன் பேசியதாவது…*

பிரமாண்ட படங்களை வழங்குவதில் லைகா புரடக்சன்ஸ் பெருமை கொள்கிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமான புஷ்பா படத்தை நாங்கள் வெளியிடுவது பெருமை. இது வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. படக்குழுவினருக்கு லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பாக வாழ்த்துகள்.

*பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது….*

புஷ்பா படத்தில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் ஆரம்பிக்கும்போது நான் நிறைய படங்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதனால் மறுத்தேன், ஆனால் மறுநாள் அல்லு அர்ஜூனே ஆள் அனுப்பி நான் தான் வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் அன்பால் தான் வேலை செய்ய ஆரம்பித்தேன்.

காட்டுக்குள் அவர்கள் இப்படத்தை எடுத்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது. ஆக்சன் காட்சிகள் எல்லாம் அத்தனை அற்புதமாக வந்திருக்கிறது. அல்லு ஆர்ஜுன் முழுப்படத்திலும் அவருக்கென பிரத்யேகமான உடல்மொழியை பின்பற்றியிருக்கிறார் அது பார்க்க நன்றாக இருக்கிறது. ஒரு நேரடி தமிழ் படம் பார்க்கும் உணர்வை இப்படம் கொண்டுவரும்படி உழைத்திருக்கிறோம்.

தமிழில் நாயகனுக்கு ‘ரா’ வராமல் இருந்தால் எப்படி இருக்கும் என புதிதாக முயற்சித்தோம். சேகர் அதை அட்டகாசமாக பேசியுள்ளார். சுகுமார் மிக அழகாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

எல்லோருக்கும் வாழ்த்துகள். கண்டிப்பாக இப்படம் பெரிய வெற்றியை பெறும். ராஷ்மிகா சின்ன சின்ன முகபாவனைகளிலும் அசத்தியிருக்கிறார். பகத் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும். படம் வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி.

*இயக்குநர் சிறுத்தை சிவா பேசியதாவது….*

சினிமா பற்றி அனைத்து துறையும் தெரிந்து வைத்திருக்கிறார் அல்லு அர்ஜூன், அவரை சந்தித்தது மிக சிறந்த அனுபவமாக இருந்தது. அவரோடு பேச பேச சினிமா பற்றி அவர் சொன்னது பிரமிப்பாக இருந்தது. பாடல்கள் எல்லாம் மிக அற்புதமாக வந்திருக்கிறது. தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் அசத்தியிருக்கிறார்.

பாடல் கேட்க அவ்வளவு நன்றாக இருந்தது. டிரெய்லர் எல்லாம் சூப்பராக இருந்தது. படக் காட்சிகள் பார்க்கும் போதே வெற்றி உறுதியாக தெரிகிறது. அல்லு அர்ஜூனுக்கு தமிழில் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் வாழ்த்துகள்.

*தயாரிப்பாளர் RB சௌத்திரி பேசியதாவது…*

அல்லு அர்ஜூனை முதலில் பார்த்த போது என்னடா உயரம் இல்லையே எப்படி இந்தப் பையன் ஜெயிப்பான் என நினைத்தேன். ஆனால் இப்போது அவரது வளர்ச்சியை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. தெலுங்கை தாண்டி, வடக்கிலும், மலையாளத்திலும் மிகப்பெரும் பிஸினஸ் வைத்திருக்கிறார். படம் டிரெய்லர் பார்க்கவே பிரமாண்டமாக இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். வாழ்த்துகள்

*தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…*

டீசர் பார்க்கிறேன், பாடல் பார்க்கிறேன் இப்படிப்பட்ட படத்தை நான் தயாரிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான் தோன்றியது. அப்படி பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள். அல்லு அர்ஜூன் தெலுங்கு ஹீரோ என்றாலும் தமிழ் பையன், தமிழால் வளர்ந்த பையன். பாடலில் தேவிஶ்ரீபிரசாத் இசை, குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும். அல்லு அர்ஜூனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் தமிழில் இருக்கிறது. தமிழுக்கு வாருங்கள் என் வரவேற்று வாழ்த்துகிறேன் நன்றி

*இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் பேசியதாவது…*

எல்லோரையும் விட எனக்கு சந்தோஷம் என்னவென்றால் அல்லு அர்ஜூன் தமிழில் வருவது தான். நாங்க சென்னையில் வளர்ந்த பசங்க, எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கு, அல்லுக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்று தெரியும். அவர் தமிழில் இந்தப்படம் செய்வது எனக்கு தான் அதிக சந்தோஷம்.

இந்தப்படம் தெலுங்கில் எடுத்து தமிழில் டப் செய்வதாக நினைப்பீர்கள், ஆனால் கதை கேட்ட அன்றே, நான் இது தமிழ் படம் நீங்கள் தெலுங்கில் எடுக்கிறீர்கள் என்று சொன்னேன். படத்தின் கதையின் உயிர் எல்லாம் தமிழில் பொருந்தி போகும். அல்லு அர்ஜூன் மிகச்சிறந்த உழைப்பாளி. இயக்குநர் சுகுமாருக்கு வாழ்த்துகள். வேலை பார்த்த நாங்களே ஆச்சர்யப்படும்படி படத்தை செய்துள்ளார்கள். படத்தில் ஒரு ஃபைட் செய்துள்ளார்கள் அதை எப்படி சொல்வது என தெரியவில்லை, அதை ஃபைட் என்றே சொல்ல முடியாது சினிமாவில் மிகச்சிறந்த ஆக்சன் காட்சியாக அது இருக்கும்.

இந்தப்படம் அல்லு அர்ஜூனை இந்திய நட்சத்திரமாக மாற்றும், இந்தப்படத்தில் அல்லு அர்ஜூன் தேசிய விருதை வெல்வார். சுகுமாரும் வெல்வார் இருவருக்கும் வாழ்த்துகள். பாடர்கள், பாடலாசிரியர்கள் அனைனவருக்கும் நன்றி. ஆண்ட்ரியாவுக்கு ஸ்பெஷல் நன்றி. புஷ்பா உங்கள் எல்லோரையும் கவரும் நன்றி.

*நடிகர் அல்லு அர்ஜுன் பேசியதாவது…*

மன்னிக்கனும் நான் தமிழ் பேசும்போது தமிழ்ல தப்பு இருக்கும் நிறைய வருஷம் ஆச்சு. தமிழ்ல பேசி, ஆனாலும் தமிழில் தான் பேச
போறேன். முதலில் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி. மதன் கார்கிக்கு முதலில் மிகப்பெரிய நன்றி. தேவி இந்தப்படத்தை கேட்டு இந்தப்படம் தமிழ் மாதிரியே இருக்கே என்றார் நானே தமிழ் தானே என்றேன். சௌத்திரி சார் வட இந்தியாவில் என்னை பற்றி பேசினார்கள் என்றார், ஆனால் நம்ம ஊரில் நம்மை பேசவில்லையே என ஏக்கம் இருந்தது. அதை இப்படம் போக்கும். இது தமிழில் அப்படியே பொருந்தும். இப்படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி தந்ததில் மிக முக்கிய பங்காற்றிய மதன் கார்க்கி சாருக்கு நன்றி. சுகுமார் சாருக்கு நன்றி.

நான் ஹீரோவா மாறினது ஆர்யா படத்தில் தான். அப்போதிருந்தே அவரிடம் கேட்டேன், நாம் எப்போது படம் செய்யலாம் என்று, ஆனால் நாம் சேர்ந்தால் நல்ல படமாக இருக்கனும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இந்தப்படம் அந்தளவு ஈஸி இல்லை. புஷ்பா படம் செய்வது, நாலு படத்தை செய்வது போன்றது. ஆனால் சுகுமார் மிக கடுமையாக உழைத்திருக்கிறார்.

மொத்த குழுவுமே காட்டுக்குள் மிகக்கடினமாக உழைத்திருக்கிறார்கள். தமிழில் ஜெயிக்க வேண்டும் என்பது எனது கனவு. இங்கு பாட்டு ஹிட் ஆனவுடன் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். தமிழில் ஜெயித்தால் தான் வாழ்வு முழுமையாகும், இங்கிருந்து என்னை பாராட்டினால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். புஷ்பா அதை செய்யும். ஐகான் ஸ்டார் சுகுமார் சார் தான் தந்தார். ஸ்டைலீஷ் ஸ்டார் அவர் தான் தந்தார் நான் வேலை செய்யும் போது யோசிக்கமாட்டேன் அது ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன் அவ்வளவு தான்.

தமிழில் படம் செய்ய வேண்டும், தமிழ் இயக்குநர்களிடம் கேளுங்கள் நான் நடிக்க ரெடி. இந்தப்படம் சந்தன மரக்கடத்தலின் பின்னணியில் நடக்கும் புஷ்பாவின் கதை, அவ்வளவு தான்.

இதில் அரசியல் எல்லாம் இல்லை. படம் நல்லா வரணும் என்று நினைத்து தான் நான் டப்பிங் பேசவில்லை. இந்தப்பட கேரக்டருக்கு மாறியது சவாலாக இருந்தது.

லுக் செட் பண்ணவே எங்களுக்கு 4 மாதம் ஆனது. படம் வெளியான பிறகு இன்னும் நிறைய பேசலாம். இந்தப்படத்தில் அத்தனை விசயம் இருக்கிறது. ஷீட்டிங் ஸ்பாட் போகவே 2 மணி நேரம் ஆகும், அங்கு லைட் இருக்காது காட்டுக்குள் நிறைய கஷ்டங்கள் இருக்கும்.

எல்லாவற்றையும் கடந்து தான் படமாக்கியுள்ளோம். ராஷ்மிகா வித்தியாசமா பண்ணிருக்காங்க, பெரிய பெரிய நட்சத்திரங்கள் வித்தியாசமான லுக்கில் அட்டகாசமா பண்ணிருக்காங்க. முக்கியமா பகத் பாசில் அவர் நடிப்பதை பார்த்து ரசித்தேன். தமிழில் படம் ஓடினா என் வாழ்க்கை கம்ப்ளீட் ஆகும், நீங்கள் அனைவரும் கொண்டாடும் படமாக இது இருக்கும் நன்றி.

அல்லு அர்ஜுனின் நடிப்பில் முதல் அகில இந்திய திரைப்படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Director Siva praises Allu Arjun at Pushpa press meet

More Articles
Follows