தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதர்ஷ் குரானா இயக்கத்தில் டாப்ஸி நாயகியாக நடித்துள்ள ஹிந்தி படம் ‘ராஷ்மி ராக்கெட்’.
ஓட்டப்பந்தய வீராங்கனை பற்றிய இந்தப் படத்தின் கதையை தமிழ் திரைப்பட இயக்குனரான நந்தா பெரியசாமி எழுதியிருந்தார்.
இந்த ஹிந்திப் படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்தப் படத்தை ஹிந்தி திரைப்பட பத்திரிகை விமர்சகர்களும் ஊடகங்களும் பாராட்டி வருகின்றன.
ஆனால், இந்தப் படம் குறித்து தமிழ் பத்திரிகைகள் எதையும் குறிப்பிடவில்லை என வேதனையுடன் நந்தா பெரிய சாமி தன் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘வெண்பாவுக்காக காத்திருக்கும் சிவப்புக் கம்பளம்..; நந்தா பெரியசாமியின் பெரிய மனசு’
அதில்… “ராஷ்மி ராக்கெட் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சிக்காக அந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னை மும்பை அழைத்திருக்கிறார்கள்.
ஆனால் இங்கே சினிமாக்காரர்கள் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. எந்த ஒரு மீடியாவும் ஒரு பேட்டியும் எடுக்கவில்லை.
கதையில் ராஷ்மிக்கு இழைக்கப்பட்ட அநீதி நிஜத்தில் படத்தின் கதாசிரியருக்கும் நடந்திருக்கிறது. வாழ்க தமிழ்… வேதனையுடன் நந்தா பெரியசாமி,” என அவர் பதிவிட்டுள்ளார்.
தற்போது தமிழில் சேரன், கௌதம் கார்த்திக், வெண்பா, சிவாத்மிகா, சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தை இயக்கி முடித்துள்ளார் நந்தா பெரியசாமி.
இந்த படம் தீபாவளிக்கு பிறகு தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.
Director Nandha Periyasamy’s sad post on facebook