தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் அறிமுகமான சமயத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவ்வளவாக படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மாபெரும் வெற்றிக் பிறகு அவர் இன்று வரை முன்னணி நாயகர்களின் வரிசையில் இணைந்து விட்டார்.
தற்போது வரை 15 படங்களில் கூட அவர் நடிக்கவில்லை. ஆனால் திறமையான கலைஞர்களுக்கு தன் தயாரிப்பில் வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
தன் தயாரிப்பு படங்கள் என்றாலும் அவர் அதில் நாயகனாக நடிக்கவில்லை.
கனா படத்தின் மூலம் தன் நண்பன் அருண்ராஜா காமராஜை இயக்குனராக்கி அழகு பார்த்தார்.
படம் மாபெரும் ஹிட்டடிக்க, 2வது படத்தை தயாரித்து வருகிறார்.
இதில் டிவி பிரபலம் ரியோ நாயகனாக நடிக்கிறார்.
அவருடன் ஷிரின், ராதாரவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
தற்போது படத்தின் சூட்டிங் முடிந்து டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.
இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார். இவருடன் பிளாக் ஷீப் யூடியூப் குழுவும் படத்தை இயக்கிவருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என படத்தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதே தலைப்பில் ராமராஜன் நடித்த படம் ஒன்று கடந்த 1991ல் வெளியானது.
இதில் ராமராஜன் உடன் ரூபினி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
Sivakarthikeyans production 2nd movie titled Nenjamundu Nermaiundu