விஸ்வாசம் படத்தில் டபுள் அஜித்; சிவா கொடுக்கும் சர்ப்ரைஸ்

விஸ்வாசம் படத்தில் டபுள் அஜித்; சிவா கொடுக்கும் சர்ப்ரைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viswasamஅஜித்-சிவா கூட்டணி இணையும் 4வது படம் விஸ்வாசம்,

சத்யஜோதி தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இமான் இசையக்கிறார்.

இப்படத்திற்காக அஜித் நீண்ட வெண் தாடியை வளர்த்து வருகிறார். எனவே இப்படத்தில் இதுதான் கெட்டப் என கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த கெட் அப்புடன் இன்னொரு கேரக்டரும் உள்ளதாம்.

ஒரு அஜித், வெள்ளை தாடி, வெள்ளை முடியுடனும், மற்றொரு அஜித் கருப்பு தலை முடியுடன் வருகிறாராம்.

துப்பறிவாளனுக்கும் இரும்புத்திரைக்கும் உள்ள வித்தியாசம் சொல்லும் விஷால்

துப்பறிவாளனுக்கும் இரும்புத்திரைக்கும் உள்ள வித்தியாசம் சொல்லும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalவிஷால் தயாரித்து நடித்துள்ள இரும்புத்திரை படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.

மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜீன், சமந்தா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து விஷால் கூறியுள்ளதாவது…

துப்பறிவாளன் படத்தில் டிடெக்டிவ். இரும்பு திரையில் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளேன்.

அதில் கோவத்தை வெளிக்காட்டாமல் இருக்கும் கதாப்பாத்திரம், இதில் சமூக பிரச்சனைகளை கோபத்தின் மூலம் வொளிப்படையாக காட்டும் கதாப்பாத்திரம்.

இந்த படத்தில் இருக்கும் கதாப்பாத்திரம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் சந்தித்த கதாப்பாத்திரமாக இருக்கும்.

துப்பறிவாளன் கதாப்பாத்திரத்தை எல்லோருமே பார்த்திருக்க மாட்டோம்.

இரும்புத்திரை உள்ள கதிரவன் கேரக்டர் அனைவருக்கும் நெருக்கமானது.

கமல்-விஜய்யை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்

கமல்-விஜய்யை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and mohan lalமலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் தமிழ் படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலையாள நடிகர்கள் அவ்வளவாக தமிழ் படங்களில் நடிப்பதில்லை.

அதற்கு முக்கிய காரணம், அவர்களது பெரும்பாலான படங்கள் இங்கு தோல்வியிலேயே முடிக்கின்றன.

ஆனால் மோகன்லால், மம்மூட்டி, ஜெயராமன் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களை மட்டுமே தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கமல் நடித்த உன்னை போல் ஒருவன் படத்தில் நடித்திருந்தார் மோகன்லால். இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சில ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் மோகன்லால். இதுவும் வெற்றிப் பெற்றது.

இப்போது கேவி. ஆனந்த் இயக்கும் படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மோகன்லால் உடன் நடிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி என சூர்யா தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் நேரிடையாக மோத தயாராகும் அமீர்

ரஜினியுடன் நேரிடையாக மோத தயாராகும் அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and ameerரஜினிகாந்த் நடிப்பில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் வரும் ஜூன் மாதம் 7 ம் தேதி லைகா வெளியீட திட்டமிட்டுள்ளப்படம் ‘காலா’.

இதன் இசை நேற்று வெளியானது.

பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைப்பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் அமீர் தயாரிப்பில் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த முத்துகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’ .

படத்தின் தலைப்பிற்கேற்றார் போல் தமிழகத்தில் உள்ள பல பிரச்சனைகளை மையைப்படுத்தியும் அதில் ஒரு பிரச்சனையை பிரதானாப்படுத்தியும் படம் தயாரிக்கப்பட்டுள்ளது,

இயக்குநர் அமீரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்,.

பொதுவாகவே பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும்போது சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள் காரணம் தியேட்டர் ஒதுக்கீடு பெரியதாக கிடைக்காது என்பதால், அந்த விசயங்களை பற்றி கவலை அடையாமல் தான் தயாரித்துள்ள படத்தை காலா வெளியாகும் அதே நாளில் வெளியிட தாயராகியுள்ளார் தயாரிப்பாளர்,.

இயக்குநர் அமீர், மக்கள் பிரச்சனையை மையப்படுத்தி எடுத்துள்ளதால் இப்படத்தை மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையே இப்படத்தை வெளியிட முதல் காரணமாம்.

தோழிகளிடம் சவால் விட்டு சாதித்து காட்டிய விஜய்யின் தீவிர ரசிகை

தோழிகளிடம் சவால் விட்டு சாதித்து காட்டிய விஜய்யின் தீவிர ரசிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay with diehard fanநடிகர் விஜய்க்கு தமிழகத்தை போல் கேரளாவிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

அவரின் தீவிர ரசிகர்கள் கேரளாவின் சில பகுதிகளில் விஜய்க்கு சிலையும் வைத்துள்ளனர்.

இதில் சரண்யா என்ற விஜய் ரசிகை தன் தோழிகளிடம் தான் விஜய் அண்ணாவை நேசிப்பதாக கூறியுள்ளார். அடிக்கடி அவர் விஜய்யை பற்றியே பேசிக் கொண்டிருப்பாராம்.

எப்படியாவது ஒருநாள் விஜய் அண்ணனுடன் நான் போட்டோ எடுத்துக்கொள்வேன் என்றும் கூறினாராம்.

அதெல்லாம் உன்னால சத்தியமா முடியாது. என தோழிகள் இவரை நக்கலடித்துள்ளனர்.

இந்நிலையில் இவர் போராடி விஜய்யுடன் ஒரு போட்டோவை ஒன்றை எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில்… விஜய் அண்ணாவை பார்த்தபோது ஒருநிமிடம் ஷாக் ஆகிவிட்டேன்.

அவர் என்னை அவர் அருகில் வரச் சொன்னார். பின்னர் அழகாக சிரித்துக் கொண்டே கேமராவிற்கு என்னை போஸ் கொடுக்கச் சொன்னார்.

அப்போது நான் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது” என பதிவிட்டுள்ளார்.

ஜெயிச்சாலும் தோத்தாலும் இனிமே அரசியல்தான்… : கமல்ஹாசன்

ஜெயிச்சாலும் தோத்தாலும் இனிமே அரசியல்தான்… : கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanஇந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டமைப்பு கூட்டத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது…

டாஸ்மாக் கடைகளை யார் வேண்டுமானாலும் நிர்வகிக்க முடியும்.

ஆனால் தொழில் நடத்தவும், நிர்வாகத்தை நிர்வகிக்கவும் தகுதி, திறன் வாய்ந்தவர்களால் தான் முடியும்.

பி.இ., பி.எச்.டி படித்தவர்கள் எல்லாம் விஏஒ., ஆக வேலை செய்யும் சூழல் உள்ளது. இந்த அவலநிலை மாற வேண்டும்.

நான் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அரசியலில் தொடர்வேன். காவிரி விவகாரம் எளிதில் தீர்க்கக்கூடியாது.

காவிரி பிரச்னையில் உரிமைக்காக நாம் போராடி ஆக வேண்டும். காவிரி விவகாரத்தில் அரசியல் உள்ளது.

அதை எதிர்த்து நிச்சயம் போராடுவோம். தமிழகத்தில் மழைநீர் அதிகளவு உள்ளது. அதனை நாம் சேகரித்து வைக்க வேண்டும்.

More Articles
Follows