தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா 70 வயது கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் ‘செம்பி’.
1980களில் கொடைக்கானலில் இருந்து 20 பயணிகளுடன் திண்டுக்கல் வரை செல்லும் பேருந்து ஒன்றில், வழியில் நடக்கும் சம்பவங்களே இப்பட கதைக்களம்.
இந்த பேருந்தில் பயணிக்கும் சிறுமி ஒருவரின் பெயரே ‘செம்பி’. அவினாசியைச் சேர்ந்த 10 வயதான நிலா என்ற சிறுமி, செம்பி ஆக நடித்துள்ளார்.
‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
‘கொக்கி’ பட ஒளிப்பதிவாளர் ஜீவன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். முதன்முறையாக இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் பிரபு சாலமன்.
இந்த படத்தை ட்ரைண்ட் ஆர்ட்ஸ் ரவி தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் கமல்ஹாசன், பாக்யராஜ், ஆர்வி. உதயகுமார், நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா, ஐசரி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது…
“சினிமாவில் என்னை விட திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கிறார்கள். அவர்கள் என் பொறாமையால் சென்றார்களா? என கண்ணாடியில் பார்ப்பேன். ரசனையால் தான் அது நடக்காமல் போகிறது.
ஒரு காடு உருவாக நான்தான் காரணம் என பறவைக்கு தெரியாது. அந்த காரணத்தினால்தான் நான் இங்கு வந்தேன். எனக்கு பிடித்தவர்கள் பலர் இந்த மேடையில் இருக்கிறார்கள்.
நடிப்பை என்னிடம் கற்றுக் கொள்ள சொன்னார்கள். அது வேண்டாம். என்னைவிட நிறைய திறமைசாலிகள் சினிமாவில் உள்ளனர். நிறைய டப்பிங் கலைஞர்களை பார்த்திருக்கிறேன். அவர்களிடம் கூட அப்படி ஒரு நடிப்பு திறமை இருக்கு.
45 வருடம் கழித்தும் 16 வயதினிலே படத்தை பேசுகிறோம். அதான் பெரிய படம். பிரம்மாண்ட படம் எடுத்தும் அந்த படம் பேர் கூட நினைவில்லை என்றால் அது சின்ன படம் தான் ஒரு படத்தின் வெற்றி தான் அது பெரிய படம் என்பதை தீர்மானிக்கிறது”
இவ்வாறு கமல்ஹாசன் மேடையில் பேசினார்.
மேலும் கோவை சரளாவை பற்றி பேசும்போது சரளா பாப்பா சரளா பாப்பா என்று அழைத்தே பேசினார்.