பெரிய ஸ்கீரினில் படு கவர்ச்சியான போட்டோ; டென்ஷனாகி வாக் அவுட் செய்த ஷாலு ஷம்மு.!

பெரிய ஸ்கீரினில் படு கவர்ச்சியான போட்டோ; டென்ஷனாகி வாக் அவுட் செய்த ஷாலு ஷம்மு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகி ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்தவர் ஷாலு ஷம்மு.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருப்பவர் ஷாலு ஷம்மு.

சில மாதங்களுக்கு முன் ஆண் நண்பருடன் படுகவர்ச்சியாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அப்போது முதலே இளைஞர்களின் கனவுக் கன்னி என்றால் ஷாலு தான்.

Actress Shalu Shamu hot photos

மேலும் பல்வேறு விதமான கவர்ச்சி புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இதனால் இவரின் போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது..

சமீபத்தில் ஷாலு ஷம்மு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி கேங்ஸ்டர் என்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

அப்போது ஷாலுவின் சில புகைப்படங்களை திரையில் காட்டியுள்ளனர்.

அதில் அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த புகைப்படத்தை (ரோஜாக்கள் மீது ஷாலு ஷம்மு படுத்திருந்தார். நம் தளத்திலும் அதை சில தினங்களுக்கு முன் பதிவிட்டு இருந்தோம்) காட்டியதால் டென்ஷன் ஆன ஷாலு ஷம்மு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
shalu shamu hot

அஜித் ஜோடியாக காலா நாயகி; வில்லனாக தெலுங்கு நடிகர்!

அஜித் ஜோடியாக காலா நாயகி; வில்லனாக தெலுங்கு நடிகர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai ajithபோனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

இதுவரை 40% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

ஆனால் பட நாயகி & வில்லன் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தற்போது காலா பட ஹீரோயின் ஹியூமா குரோஷி நாயகியாக நடித்து வருவது உறுதியாகியுள்ளது.

3 பேர் வில்லன்களாக நடிப்பதால் வில்லன்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.

இதில் மெயின் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஒப்பந்தம்

மனிதமே பெரியது; 3 மதங்களுக்கும் ஒரே ஆலயம் கட்டும் லாரன்ஸ்!

மனிதமே பெரியது; 3 மதங்களுக்கும் ஒரே ஆலயம் கட்டும் லாரன்ஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrenceமூன்று மதங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு அசாத்திய விசயத்தை கையில் எடுத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

சமூகம் சார்ந்த சிந்தனைகளையும் சமூக சேவைகளையும் மேலும் அவர் தனது அறக்கட்டளையின் மூலமாக எத்தனையோ உதவிகளையும் செய்து வருகிறார்.

இப்போது அவர் மத வேறுபாடுகளை கடந்து மனிதம் தான் பெரிது என்பதை உணர்த்தும் வகையில் இந்து கிறிஸ்டின், முஸ்லீம் ஆகிய மூன்று மதத்தினரும் வந்து வழிபடும் படி ஓர் ஆலயம் அமைக்க இருக்கிறார். மதங்களாலும் சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள் அதனால் தான் இந்த முயற்சி.

நெருப்பிற்கும் பசிக்கும் சாதி மதம் தெரியாது அந்த வகையில் அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அண்ணதான கூடம் அமைக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானமும் வழங்க இருக்கிறார்.

இந்த அறப்பணி இதுவரை யாருமே சிந்தித்திராத முயற்சி. ராகவேந்திரர் சுவாமியின் பிறந்த நாளான இன்று இதை அறிவித்துள்ளார்.

இந்தப்பணிகளை மிகச்சிறப்பாக விரைவில் துவங்க இருக்கிறார்.

ரசிகர்கள் இல்லாமல் ‘மாஸ்டர்’ இசை வெளியீடு..? அரசியல் காரணமா.?

ரசிகர்கள் இல்லாமல் ‘மாஸ்டர்’ இசை வெளியீடு..? அரசியல் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Master Audio launch and Political issue updates சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இதில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பட சூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு விஜய்சேதுபதி முத்தம் கொடுத்துள்ளார்.
அந்த படத்தை வெளியிட்டு மாஸ்டர் சூட்டிங் முடிவடைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் மாஸ்டர் படம் தொடர்பான அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஒரு குட்டி கதை பாடல் வெளியான நிலையில் இரண்டாவது பாடலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அனிருத் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை அடுத்த மாதம் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மார்ச் 15-ம் தேதி இசை வெளியீட்டு விழாவை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ளனர்

மெர்சல், பிகில், சர்கார் உள்ளிட்ட படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் ரசிகர்கள் பங்கேற்றனர். அப்போது விஜய் அரசியல் பற்றி பேசினார்.

அண்மையில் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை வேற நடைபெற்றது.

எனவே சர்ச்சைகளை தவிர்க்க விஜய் விரும்புகிறார் எனவும் எனவே தான் ரசிகர்கள் இல்லாமல் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் இசைவெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijays Master Audio launch and Political issue updates

இந்தியன் 2 விபத்து.; நாளை ஆஜராக கமலுக்கு சம்மன் அனுப்பிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

இந்தியன் 2 விபத்து.; நாளை ஆஜராக கமலுக்கு சம்மன் அனுப்பிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indian 2 accident issue Police to summon Actor Kamalகடந்த பிப். 19- ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

கமல்ஹாசன், காஜல் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகிய மூவரும் நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல் வெளியானது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

இயக்குநர் ஷங்கர் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில், இப்போது, கமல்ஹாசனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சம்மனை ஏற்று, கமல் நாளை மார்ச் 3 – ம் தேதி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என கூறப்படுகிறது.

Indian 2 accident issue Police to summon Actor Kamal

திருநங்கைகளுக்கு வீடு கட்டும் லாரன்ஸ்; அக்‌ஷய்குமார் 1.5 கோடி நிதியுதவி

திருநங்கைகளுக்கு வீடு கட்டும் லாரன்ஸ்; அக்‌ஷய்குமார் 1.5 கோடி நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akshay Kumar donates One and half crores for Lawrance Trust நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக கொண்டர் ராகவா லாரன்ஸ்.

இவையில்லாமல் எண்ணற்ற ஆதரவற்றவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, பண வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு மருத்துவம், கல்வி வசதிகள் செய்தி தருவது உள்ளிட்ட சமூகநலத்திட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக அறக்கட்டளையும் நடத்தி வருகிறார்.

அந்த அறக்கட்டளை தற்போது 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த நிலையில் திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் பணியை தொடங்கியிருக்கிறாராம்.

இதற்காக நடிகர் அக்‌ஷய்குமாரிடம் தனது முயற்சியை தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். உடனே ரூ.1.5 கோடி நிதி கொடுப்பதாக அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.

லாரன்ஸ் இயக்கிய முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011-ம் ஆண்டு வெளியான படம் காஞ்சனா.

இதன் இந்தி ரீமேக் லக்‌ஷ்மி பாம் என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தையும் லாரன்ஸ் இயக்கி வருகிறார்.

அக்‌ஷய்குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார்.

Akshay Kumar donates One and half crores for Lawrance Trust

More Articles
Follows