தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ள படம் ‘ரன் பேபி ரன்’.
இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்துள்ளனர்.
ஜெயன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்ட நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது..
“ஒரு திரைப்படத்தின் வெற்றியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
எதிர்காலத்தில் இயந்திரங்கள் வருகை அதிகரிக்கும்.. அப்போது நிறைய பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிடும்.
எனவே இன்றைய இளைஞர்கள் இப்போதே அதிக நேரத்தைக் கொடுத்து அதிகளவில் உழைக்க வேண்டும்.
சமீபத்தில் ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டார். அதனை அறிந்து வருத்தமாக இருந்தது.
தியேட்டருக்கு சென்று படம் பாருங்கள்.. கருத்து சொல்லுங்கள்.. நன்றாக இருக்கிறதா? அதை ஏற்றுக் கொள்கிறோம். நன்றாக இல்லையா? அதையும் சொல்லுங்கள்.. கற்றுக் கொள்கிறோம்.
நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கிறீர்கள்.. காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம்.
பத்திரிகைகளும், ஊடகங்களும் இளைஞர்களை கொம்பு சீவி விடும் விஷயங்களை ரசிகர்களுக்கு கொடுக்காமல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
என் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளரின் லாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன்”
இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி பேசினார்.
‘ரன் பேபி ரன்’ திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
RJ Balaji open talk at Run baby Run Trailer launch