ஆடியில் வந்த தீபாவளி : ரஜினி இன்ட்ரோ சாங் இல்ல.. பன்ச் இல்ல.. ஊர் சுற்றி புரோமோ இல்ல.; நின்ற இடத்திலேயே ஜெயிச்ச ‘ஜெயிலர்’

ஆடியில் வந்த தீபாவளி : ரஜினி இன்ட்ரோ சாங் இல்ல.. பன்ச் இல்ல.. ஊர் சுற்றி புரோமோ இல்ல.; நின்ற இடத்திலேயே ஜெயிச்ச ‘ஜெயிலர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

••• ஜெயிலர் •••

பார்த்து சில நாட்கள் ஆகிறது ஆனால் இந்த படம் தந்த அனுபவம் விட்டு வெளியே வர முடியவில்லை…

படம் என்ன ஆல் டைம் கிளாசிக்கா… இதுவரை தமிழ் சினிமா பார்க்காத களமா… அப்படி எதுவும் இல்லை… ஆனால் இது ஒரு திரை அனுபவம்

ஒரு டிபிக்கல் 100% ரஜினி படம் என்றால் என்ன? அது ஒரு உணர்வு…. பேருந்து நெரிசலில் சட்டென நம்மை பார்க்கும் குழந்தை ஒன்று சிரித்தால் நமக்கு ஏற்படும் உணர்வு போல…சைக்கிளில் சென்று கொண்டு இருக்கும் ரெட்டை ஜடை காதலி சட்டென நம்மை திரும்பி பார்ப்பது போல… இதெல்லாம் யாரிடமும் விளக்க முடியாது…அது நம்முள் ஒட்டிக்கொள்ளும்… நம்மை தானாக சிரிக்க வைக்கும்… கொஞ்சம் கால் தரையில் படாமல் நடக்க வைக்கும்… புரிந்தவர்கள் க்கு அது மேஜிக்…. இந்த படம் அதை செய்கிறது…இது 100% ரஜினி படம்

இதெல்லாம் புரியாதவர்களை புரிய விரும்பாதவர்களை குறையா சொல்லவில்லை… புரிந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அவ்வளவே

ரஜினி இடத்தில் வேறு யார் இருந்தாலும் நெல்சனின் அந்த பயங்கர சறுக்கல் க்கு பிறகு இந்த படத்தை தொடர யோசித்து இருப்பார்கள்.. there were lot at stake… ஆனால் , படத்தை நிறுத்தினால் நெல்சன் வாழ்வில் அது மிகப்பெரிய அடியா இருக்கும் என சிந்தித்து (அதான் ரஜினி) , நெல்சன் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்தார் … அந்த நம்பிக்கைக்கு அப்படியே அசரவைக்கும் கைமாறு செய்து இருக்கிறார் நெல்சன்

ரஜினி என்கிற எமோஷனை உள்வாங்கி அப்படியே திரையில் ஒரு கொண்டாட்டமாக கொண்டு வந்திருக்கிறார் நெல்சன்…

மகனின் பிரச்சனையில் உள்ளே நுழைய அது பூதாகரமாக வெடிக்க அதை ஒரு ரிடையர்டு ஜெயிலர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை…

சாதாரண கதை அதற்குள் ஆங்காங்கே திருப்பங்கள் ஆனால் அதை சொன்ன விதம், ரஜினி என்கிற காந்தத்தை சரியாக எப்படி உபயோகிப்பது என்பதை நன்கு அறிந்து காய் நகர்த்திய நேர்த்தி இதுக்கெல்லாம் நெல்சன் க்கு தனி பாராட்டு

படத்தில் ரஜினி இன்ட்ரோ பாடல் இல்லை… தலைவர் பத்து பேர் அடிப்பது இருபது பேர் அடிப்பது போன்ற அதீதமான காட்சிகள் இல்லை… ஆனால் ஏகப்பட்ட காட்சிகளில் தியேட்டர் அலறுகிறது மாஸ் அள்ளுகிறது … இன்டர்வெல் ப்ளாக் எல்லாம் almost the roof gets blown away …

இன்டர்வெல் ப்ளாக் தான் பீக் என்று நினைத்து இருந்தால் அதன் பின் வரும் காட்சியும் பிறகு blockbuster climax என படத்தை வேறு ஒரு தளத்தில் கொண்டு வந்து முடிக்கிறார்..

மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப் – மூவர் பெயரும் போட்டு Guest Role க்கு நன்றி என்று ஆரம்பத்திலேயே card போடுகிறார்கள்… ஆனால் இவர்களின் பங்கு முக்கியமானது… குறிப்பாக மோகன்லால் மற்றும் சிவாண்ணா… இரண்டு காட்சிகளே என்றாலும் வேற லெவல் ஸ்க்ரீன் பிரசன்ஸ்.. மோகன்லால் நாம் அறிவோம்.. ஆனால் சிவாண்ணா நடித்த முதல் காட்சி திரையில் நான் இப்போது தான் பார்க்கிறேன்… இந்த மனிதனின் திரை ஆளுமை வேற லெவல்…

விநாயகன்…. படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம்… மனுசன் வாழ்ந்து இருக்கிறார்… அந்த உடல்மொழி டயலாக் இதெல்லாம் உண்மையில் பீதி கிளப்புபவை…. தமிழுக்கு ஒரு மிக குரூர வில்லன் கிடைத்து விட்டார்… பெரிய வலம் வருவார்

படத்துக்கு மிகப்பெரிய பலம் இருவர்

இசை அனிருத்… ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்

அனி பிச்சு உதறி இருக்கிறார்…. மாஸ் காட்சிகள் வேறு தளத்தில் பயணிப்பது க்கு முக்கிய காரணம் இவர்…. ஹுக்கும் பாடலை ப்ளேஸ் செய்த இடங்களுக்கு தனி பாராட்டு…

ஒளிப்பதிவு அசத்தல்…. காட்சிகள் ஃப்ரேம் டோன் அதுக்கான மெனக்கெடல் அபாரம்

படத்தில் குறைகள் இல்லையா என்றால் இருக்கிறது…. இரண்டாம் பாதி சுனில் தமன்னா காட்சிகள் கதை வேகத்தை குறைத்ததாக கருதுவேன்… அந்த ஒரு இருபது நிமிடங்கள் வேறு எதாவது யோசித்து இருக்கலாமோ என எனக்கு பட்டது (ஆனால் இதையும் ரசிக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்தேன்)… கொஞ்சம் blood shed வன்முறை அதிகமாக இருந்தது இது தலைவர் படங்களுக்கு புதுசு… கொஞ்சம் குறைத்து இருக்கலாம்…. ஏனெனில் பெண்கள் குழந்தைகள் எப்போதும் ரஜினி படங்கள் என்றால் விரும்பி பார்க்கும் வழக்கம் இருப்பதால்…

Last but not least..about the 72 வயது இளைஞர்

யோகி பாபுவுடன் அடிக்கும் ரகளை காட்சிகளாகட்டும், குடும்பத்துக்காக பதுங்கி போகும் இடங்கள் பின்பு பாயும் இடங்கள் …. அந்த இன்டர்வெல் , ப்ரீ க்ளைமாக்ஸ் , க்ளைமாக்ஸ் என அத்தனை உணர்வுகளையும் கொட்டி இருக்கிறார்…. இந்த வயதில் இத்தனை மிடுக்காக நடிக்க முடியும் என்பதே ஒரு தனி case study….and to bring such an aura on screen… something this world probably has never seen… and will never see…

திரையில் கடைசியாக நான் ஒரு படத்தை இவ்வளவு கொண்டாடி பார்த்து சில வருடங்கள் ஆகிறது… கவலைகள் இல்லா அந்த காலகட்டத்துக்கு ஒரு டைம் ட்ராவல் செய்தது போல ஒரு உணர்வு…

படம் ரீலீஸ் ஆகி ஆறாவது நாள் இதை நான் எழுதுகிறேன் ஆனால் அதற்குள் படம் ஏகப்பட்ட ரெகார்ட்ஸ் உடைத்து விட்டதாக சொல்கிறார்கள்…. இத்தனைக்கும் ஒரேயொரு ஆடியோ லாஞ்ச்… வேறு எங்கும் ரஜினி பேசவில்லை… டிவி டிவியாக சேனல் சேனலாக promotion நடக்கவில்லை.. ஊர் ஊராக சென்று படம் புரோமோஷன் இல்லை.. வலிந்து திணிக்கப்பட்ட promo இல்லை…. ஆனால் படம் மக்கள் மத்தியில் வேறு லெவல் ரீச் … அதான் ரஜினி

வெகு சிலர் படத்தை பற்றி தரக்குறைவாக பேசி எழுதி வந்தாலும் அதை எல்லாம் left handல் டீல் செய்து வருகிறார்கள் மக்கள் …
தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜெயிலர் கொண்டாடப்படுகிறது…

ஆந்திராவில் இதனுடன் ரிலீசான பெரிய படத்தை தூக்கிட்டு பல இடங்களில் ஜெயிலர் அதிக ஸ்க்ரீன் பெறுகிறது…கேரளா கர்நாடகா அதிரி புதிரி ஹிட்… இதுவரை வந்த தமிழ் படங்களில் பெஸ்ட் என்கிறார்கள்…அமெரிக்க நண்பர் ஒருவர் நேற்று தொடர்பு கொண்டு.. அமெரிக்கா வில் இப்படி ஒரு படம் கொண்டாடப்பட்டதில்லை..

குடும்பங்கள் ஆர்பரிக்கிறார்கள் என்றார்… கனடா நண்பர் ஒருவர் மைல் நீள க்யு வீடியோ அனுப்பினார்… ஜெயிலர் பார்க்க நின்ற கூட்டமாம்.. மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய் என கொண்டாடப்படுகிறது… … உலகம் முழுவதும் சாரை சாரையாக மக்கள் குவிகிறார்கள்

இந்திய சினிமா வில்…இதெல்லாம் ஒருத்தருக்கு நடக்க வேண்டும் என்றால் மறுபடியும் ரஜினி தான் பிறந்து வர வேண்டும்…

This movie is a celebration.. ரஜினி முழுவதும் பழைய ரஜினியாக இறங்கி பட்டைய கிளப்பி இருக்கும் படம்..

வரும் சனி ஞாயிறு கூட்டிட்டு போறேன் மா என்றதும் ஓரளவு சமாதானம் அடைந்து இருக்கிறார்கள் என் மகள்கள்… சீக்கிரம் கூட்டிக்கொண்டு போ என கேட்டபடியே இருக்கிறாள் என் தாய்…

ரஜினி ஒரு பெர்சனல் ஃபீலிங்..

இரண்டு நாட்களுக்கு முன் ஒருவரை சந்தித்தேன்… சில முறை பேசி இருக்கிறோம்… ஆனால் ஒரு முறை கூட ரஜினி பற்றி பேசியதில்லை… சினிமா பற்றி அவ்வளவு ஈடுபாடு காட்டாதவர்…

” ராஜகோபாலன்… ஜெயிலர் பாரத்துட்டீங்களா…. பார்த்துருப்பீங்க…. ப்பா…என்னமா இருக்காரு ங்க… எழுபத்தி ரெண்டு வயசாகுது ன்னு சொன்னா எவன் நம்புவான்… எனக்கு வயசெல்லாம் குறைஞ்ச மாதிரி இருக்கு ‌.. family எல்லோரும் என்ஜாய் செய்தோம்.. என் பொண்ணு நானும் ரெண்டு பேரும் சேர்ந்து கத்திட்டோம் சில சீனுக்கு..wife கூட ஆச்சரியபட்டா. (வெட்க படுகிறார்).. உங்கள இப்படி பார்த்தது இல்லை ன்னு சொல்றா…….. இன்னொரு வாட்டி போகணும்…”.. என பட படவென பொறிந்து விட்டார் மனுசன்…

The Phenomenon Called RAJINI

ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் கவர்கிறார்.. அதான் #தலைவர்

வேறு பல பட்டங்கள் தமிழ் சினிமாவில் இருந்தும் #SuperStar என்கிற பட்டத்துக்கு மட்டும் போட்டி இருப்பது போன்ற ஒரு பிம்பம் ஏன் கட்டப்படுகிறது… ஏனெனில் எந்த பட்டம் என்பது இங்கே முக்கியமில்லை அதை யார் சுமக்கிறார் என்பதே முக்கியம்…

உண்மையில் சில பல நாட்களாக உடலாலும் மனதாலும் wasn’t feeling well.. still so.. ஆனால் தலைவர் படம் என்பது ஒரு therapy session…a physical and mental rejuvenation… எனக்கு அப்படியே இருந்தது…. பிணிகள் கவலைகள் மறக்க செய்த ஒரு திரை அனுபவம்

Thank you #Rajinikanth

#Jailer an Entertainer of the decade for most…

ஆடியில் வந்திருக்கும் தீபாவளி

நன்றி – இரா. இராஜகோபாலன்

Reasons behind success of Rajinikanth Jailer

மாமா எனக்கு டெலிவரி ஆகல.; மண்சோறு சாப்பிடும் ரசிகர்கள்.; ரஜினியை கிண்டலடித்த ‘படையப்பா’ பட நடிகர்

மாமா எனக்கு டெலிவரி ஆகல.; மண்சோறு சாப்பிடும் ரசிகர்கள்.; ரஜினியை கிண்டலடித்த ‘படையப்பா’ பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.

இந்தப் படத்திற்கு குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை அனைவரும் மாபெரும் வரவேற்பை கொடுத்துள்ளனர்.

படமும் இதுவரை ரூ. 450 கோடிக்கு மேல் உலகளவில் வசூலித்து வேட்டை ஆடி வருகிறது. இதுவரை தமிழ் சினிமா படைக்காத சாதனைகளை எல்லாம் ரஜினியின் ஜெயிலர் படம் ஒரு வாரத்தில் படைத்து வருகிறது.

இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினியின் அடுத்த பட கதை எற கிண்டல் அடித்து நடிகர் அனு மோகன் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு இதோ…

நீங்க அடுத்து எந்தப் படத்துல நடிக்கிறீங்க ரஜினி ஜி?

என்னோட அடுத்த படத்தோட கதை என்னன்னா,

ஆஸ்பத்திரியில் இருந்து என்னுடைய பேரக் குழந்தையை யாரோ கடத்திட்டாங்கன்னு எனக்கு தகவல் வருது.

எங்க வீட்ல இருந்து 150 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற ஒரு பண்ணையில் லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டு நைட் வாட்ச்மேனா இருக்குற நான் திடீர்னு புது அவதாரம் எடுக்கிறேன்.

என் பேரக் குழந்தையை கடத்தியது யாரு? எதுக்காக கடத்தினாங்கன்னு விதவிதமா டிரஸ் போட்டுக்கிட்டு துப்பு துலக்குறேன்.

அப்போ என்னோடு 100 பேர். அவங்க யாருன்னு தெரியாது. ஆனா அவங்களும் கூட வர்ராங்க.

எதிரி யாருன்னு தெரியாம மனசு கலங்கி போயி குற்றால மலை மேல சுத்திக்கிட்டு இருக்கும் போது ஒரு சாது வந்து,

உனக்கு எதிரா எவனெல்லாம் வர்றானோ அவன் எல்லாம் உன் எதிரி தான்னு அருள்வாக்கு சொல்றாரு.

திடீர்னு எனக்குள்ளே ஒரு புது சக்தி கிளம்புது.

உடனே அருவா கடப்பாறை வேல் கம்பு துப்பாக்கின்னு என்னென்ன ஆயுதம் கிடைக்குதோ அதையெல்லாம் எடுத்து எதிரே வர்றவனை எல்லாம் போட்டு தள்ளுறேன்.

நான் எத்தனை பேரை கொன்னாலும் போலீஸ் எதையும் கண்டுக்காம போயிடறாங்க.

கடைசியில பிச்சைக்காரன் மாதிரி இருக்கிற ஒருத்தன் ஒரு குழந்தையை கையில் வச்சிருக்கான். அந்த குழந்தை என்னை பார்த்ததும் சிரிக்க ஆரம்பிக்குது.

உடனே எனக்கு புரிஞ்சு போச்சு. இதுதான் என்னோட பேரக் குழந்தைன்னு.

குழந்தையை கொடுன்னு நான் அன்பா கேட்டுப் பார்க்கிறேன். முடியாதுடா இது என் குழந்தைன்னு சொல்லி கொடுக்க மாட்டேன்கிறான்.

உடனே எனக்கு கோபம் எரிமலையா வந்து ஒரே அடியில சாகுற பிச்சைக்காரன அரை மணி நேரமா அடிச்சு துவைச்சு கொன்னு அந்த குழந்தையை எடுத்துக்கிட்டுப் போய் என் மருமகள் கிட்ட கொடுக்கிறேன்.

அந்தக் குழந்தையைப் பார்த்ததும் என் மருமகள் கதறி அழுது என் காலை பிடிச்சுக்கிட்டு வசனம் பேசுகிறா…

மாமா… எனக்கு இன்னும் டெலிவரியே ஆகலையே! இது யாரோட குழந்தை?

உடனே ஆஸ்பத்திரில இருக்கிற ஊசி போடுற ரூமுக்குள்ளே போய் கதவை பூட்டிக்கிட்டு கண்ணை மூடிக்கிறேன்.

இது யாருடைய குழந்தை? யாருடைய குழந்தைன்னு நூத்துக்கணக்கான குரல்கள் என் காதுக்குள்ள கேக்குது.

அந்த குழந்தை யாருடைய குழந்தைன்னு நான் கண்டுபிடிக்கிறதை அந்த படத்தோட பார்ட் டூ ல எடுக்கப் போறோம்.

இந்த படம் வெற்றி பெற…

மண் சோறு சாப்பிடுறதுக்கு, மொட்டை போடுறதுக்கு, அலகு குத்துறதுக்கு, பறவை காவடி எடுக்குறதுக்கு, அக்கினி சட்டி எடுக்குறதுக்குன்னு ரசிகர்களை ரெடி பண்ணனும். நிறைய வேலை இருக்கு சார்.

என்னோட வயசுக்கு ஏத்த கதாபாத்திரம்ன்றதுனால தான் இந்தப் படத்துக்கு நான் ஒத்துக்கிட்டேன்.

மத்தபடி பணம் மனுஷனுக்கு சந்தோஷத்தைத் தராதுன்ற தத்துவத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணும். ரசிகர்களும் தெரிஞ்சுக்கணும்.

*😆😆😆படித்தில் பிடித்தது 😂😂😂*

இந்தப் பதிவை கே கே சினிமா குரூப் என்ற வாட்ஸ்அப் குரூப்பில் நடிகர் அனு மோகன் பதிவிட்டுள்ளார். (நானும் அதே குரூப்பில் இருப்பதால் அதை எடுத்து செய்தியாக பதிவிட்டு இருக்கோம்) இவர் படையப்பா படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். அந்தப் படத்தில் ரஜினி எப்படி பாம்பு புத்துக்குள் கையை விட்டு பிடித்தார்? என இவர் அடிக்கடி கேள்வி எதுக்கு கேட்பது போல காட்சிகள் அமைந்திருக்கும் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Actor Any mohan trolls Rajini movie and fans

திருக்கடையூர் கோயிலில் தந்தை தியாகராஜன் மகன் பிரசாந்த் சாமி தரிசனம்

திருக்கடையூர் கோயிலில் தந்தை தியாகராஜன் மகன் பிரசாந்த் சாமி தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் அழகும் திறமையும் நிறைந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் பிரசாந்த்.

இவர் அறிமுகமான காலகட்டங்களில் தனது திறமைகளை காட்டி முன்னணி நடிகராக உயர்ந்தார்.

அதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் திடீரென சில காரணங்களால் படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்தார்.

ஆனால் இன்றளவிலும் நடிகர் பிரசாந்த்துக்கு என மிகப் பெரிய ரசிகைகள் பட்டாளம் நிறையவே உண்டு.

இவரது தந்தையும் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் இருவரும் சில படங்களில் இணைந்து நடித்தும் உள்ளனர்.

தியாகராஜன் இயக்கிய ‘பொன்னர் சங்கர்’ படத்தில் பிரசாந்த் நடித்துள்ளார்.

விரைவில் வெளியாக உள்ள ‘அந்தகன்’ படத்தை தியாகராஜன் இயக்க பிரசாந்த் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தந்தை மகன் ஆகிய இருவரும் மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்த நட்சத்திரங்களை கண்ட பக்தர்கள் ஆர்வமுடன் அவர்களிடம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த வீடியோக்கள் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரசாந்த்

Thiagarajan and Prashanth visited Thirukadaiyur temple

‘லியோ’ படத்தில் விஜய் பாடிய பாடல் படைத்த மெகா சாதனை

‘லியோ’ படத்தில் விஜய் பாடிய பாடல் படைத்த மெகா சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’.

இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லியோ’ படத்தில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

‘லியோ’ படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் யூ டியூபில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

லியோ

Naa Ready song from vijay’s ‘Leo’ crosses 100 million views in youtube

நான்தான் இங்க KING..; ஒரே வாரத்தில் ரூ. 500 கோடியை அள்ளிய ‘ஜெயிலர்’

நான்தான் இங்க KING..; ஒரே வாரத்தில் ரூ. 500 கோடியை அள்ளிய ‘ஜெயிலர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியான நாள் முதலே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு நடிகர்கள் விஜய், கமல்ஹாசன், முதலமைச்சர் மு.கஸ்டாலின் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 6 நாட்களை கடந்த நிலையில் இதன் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் 6 நாட்களில் ரூ.400 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும், இன்னும் ஓரிரு தினங்களில் ரூ 500 கோடி வசூலை ‘ஜெயிலர்’ படம் வசூலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயிலர்

rajini’s ‘Jailer’ In one week Rs. 500 Crore collection reached

நீ தங்குவியா இந்த வூட்டுல.? சிவகார்த்திகேயன் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து

நீ தங்குவியா இந்த வூட்டுல.? சிவகார்த்திகேயன் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மாவீரன்’.

இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், ‘மாவீரன்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “இப்பொழுதுதான் ‘மாவீரன்’ படம் பார்த்தேன். மக்களை வேறு இடங்களுக்கு குடியமர்த்துவதில் உள்ள அரசியலை, நல்ல முறையில் படமாக எடுத்துள்ளீர்கள். படத்தின் கற்பனை பகுதி அருமையாக இருந்தது, அரசியல் தாக்கமாக இருந்தது. நீ தங்குவியா இந்த வூட்டுல? படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Karthik Subbaraj tweet and wishes for Sivakarthikeyan’s maaveeran movie

More Articles
Follows