‘மாநாடு’ இசை மேடையில் கண்ணீர் ஏன்.? மனம் திறந்தார் சிம்பு

‘மாநாடு’ இசை மேடையில் கண்ணீர் ஏன்.? மனம் திறந்தார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இந்த படம் வரும் 25ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஆகிய இரு மொழிகளில் ஒரே நாளில் ரிலீசாகிறது.

தெலுங்கில் ‘தி லூப்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

அண்மையில் சென்னையில் மாநாடு இசை வெளியீடு நடைபெற்றது.

தற்போது தெலுங்கு பட புரமோஷன்ஸ் நடைபெற்று வருகிறது. இதற்காக சிம்பு ஐதராபாத் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அப்போது சிம்பு பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது…

“ஓரிரு ஆண்டுகளுக்கு முன் மனதளவில் பாதிக்கப்பட்டேன். ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி தற்போது என் பழைய நிலைக்கு வந்துள்ளேன்.

சரக்கு அடிப்பதையும் அசைவ உணவுகளையும் நிறுத்திவிட்டேன். தற்போது 25 கிலோ வரை என் உடலை எடையை குறைத்துள்ளேன்.

சென்னையில் மாநாடு இசை விழாவில் பேசிய போது… எனக்கு சில வருடங்களாக நடந்த சம்பவங்கள் என் கண் முன்னாடி வந்தன. எனவே என்னை மீறி அப்போது கண் கலங்கிவிட்டேன்,” என பேசியுள்ளார் சிம்பு.

Reason behind STR’s emotion at Maanaadu audio launch

JUST IN கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று.; மருத்துவமனையில் அனுமதி

JUST IN கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று.; மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவல் இருந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியளவில் 10,488 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 313 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,45,10,413 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா சென்று வந்த கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவரே தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

“அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது.

பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.”

என பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

Actor Kamal Haasan tests positive for Covid-19

டிராக்கை மாற்றிய சிவகார்த்திகேயன் & சந்தானம்..; சக்ஸஸ் ரூட்டில் டாக்டர் சபாபதி

டிராக்கை மாற்றிய சிவகார்த்திகேயன் & சந்தானம்..; சக்ஸஸ் ரூட்டில் டாக்டர் சபாபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் சந்தானம் இருவருமே விஜய் டிவியில் தங்கள் கேரியரை தொடங்கினர். அதில் பல நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு படிப்படியாக தங்களை உயர்த்தி கொண்டனர்.

பின்னர் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தனர்.

இவர்கள் இருவருமே கவுண்டர் டைமிங் காமெடி கொடுப்பதில் வல்லவர்கள். மக்களும் இதனை மக்களும் அதிகம் ரசிக்கவே இருவரின் வளர்ச்சியும் அசுர வேகத்தில் உயர்ந்தது.

முதலில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் பல படங்களில் நடித்து தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

அதுபோல சிவகார்த்திகேயன் 3 படத்தில் சின்ன ரோலில் நடித்து தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார்.

இவர்கள் இருவருமே முதன்முறையாக தங்களது வழக்கமான காமெடி டிராக்கை மாற்றியுள்ளனர்.

நான் ஸ்டாப்பாக கலகலவெனும் பேசும் தங்களது டிரேட் மார்க்கை மாற்றி தங்களது புதிய படங்களில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.

டாக்டர் படத்தில் அதிகம் பேசவே மாட்டார் சிவகார்த்திகேயன். படம் சூப்பர் ஹிட்டாகி ரூ 100 கோடி வசூலை தாண்டியுள்ளது.

அதுபோல் சபாபதி படத்தில் திக்குவாய் என்பதால் அதிகம் பேசவில்லை சந்தானம். அவரின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.

இந்த இரு படங்களுமே தற்போது வெற்றிக்கரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள் டாக்டர் சபாபதி..

இருவரும் ஏதாவது ஒரு படத்திலாவது இணைந்து நடிப்பார்களா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Sivakarthikeyan and Santhanam changed their usual way

தமிழ்நாட்டை ஆள்வது முருகன்.. பில்கேட்ஸ் கிட்ட பேசிட்டேன்.. – விஜய்சேதுபதி

தமிழ்நாட்டை ஆள்வது முருகன்.. பில்கேட்ஸ் கிட்ட பேசிட்டேன்.. – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை மற்றும் குற்றமே தண்டனை உள்ளிட்ட தொடர் வெற்றிகளை கொடுத்தவர் இயக்குனர் மணிகண்டன்.

இவரது படங்கள் ஒரு சமூக அக்கறையோடு பயணிப்பதால் இவரது படங்களுக்கு பெண்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் இவர் இயக்கியுள்ள அடுத்த படம் கடைசி விவசாயி.

ஆண்டவன் கட்டளை படத்தை தொடர்ந்து இதன் மூலம் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார் மணிகண்டன்.

முன்னணி கதாபாத்திரத்தை நல்லாண்டி எனும் முதியவர் ஏற்று நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்பட தொடக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்த நிலையில் சில காரணங்களால் அவர் விலக சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை சற்றுமுன் இப்பட டிரைலர் வெளியாகியுள்ளது.

இதில் விவசாயத்தை போற்றும் வகையில் காட்சிகள் உள்ளன. அதே சமயம் விவசாயி சிறைத்தண்டனை பெறும் காட்சிகளும் உள்ளன.

யானை பாகனாக நடித்துள்ளார் யோகிபாபு.

பில்கேட்ஸ் கிட்ட பேசினேன். அவர் இங்கிலீஷ்ல பேசினார். நான் தமிழில் பேசினேன் என்கிறார் விஜய்சேதுபதி.

இறுதியாக தமிழ்நாட்டை ஆள்வது முருகன் தான் என்கின்றனர். எப்போதுமே அவர் தான் நம்மை ஆள்கிறான் என்பதுடன் டிரைலர் முடிவடைகிறது.

Vijay Sethupathi dialogues in Kadaisi Vivasayi Trailer

வெறுப்பரசியல்.. பச்சைத் துரோகம்..: சூர்யா கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பிய எழுத்தாளர்

வெறுப்பரசியல்.. பச்சைத் துரோகம்..: சூர்யா கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பிய எழுத்தாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வஞ்சகரின்_காசை_வாங்கித்தான்… … …
#இந்தா_உன்_பணம்…. #எலிவேட்டையிலிருந்து_ஜெய்பீம்

#ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் திரு த.செ.ஞானவேல் மற்றும் 2D ENTERTAINMENT நிறுவனத்தார் அவர்களுக்கு…

விவசாயம், வேலை, எழுத்து என கிராமம் சூழ் வாழ்வியலில் இருப்பவன் நான். இச்சூழலில் வாசகராய் அறிமுகமாயிருந்த செந்தில் என்கிற தம்பி என்னை பார்க்க வருவதாய் (சுமார் இரண்டாண்டுகளுக்கு [சூலை 2019] முன்) சொல்லியிருந்தார்.

அதன்படிக்கு நான் வீட்டில் காத்திருந்த வேளையில் நாலைந்து பேர்களாய் நீங்கள் (த.செ.ஞானவேல்) என் இல்லம் (மணக்கொல்லை) வந்திருந்தீர்கள். உடன் வந்த செந்தில் தம்பி தங்களை ‘இயக்குநர்’ என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்.

எனது ‘அஞ்சலை’ நாவல் வாசிப்பின் மூலம் தொடங்கிய உரையாடல் மெல்ல தாங்கள் இயக்கவிருக்கும் திரைப்படம் பற்றி திரும்பியது. திரைப்படத்தின் கதையானது கம்மாபுரம் காவல்நிலையத்தில் வெகுசில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம். நானும் அதை கேள்விப்பட்டிருந்தேன்.

கதையின் களம் விருத்தாசலம், கம்மாபுரம் சார்ந்த பகுதி என்பதால் இங்கத்திய காட்சிகளில் வரும் உரையாடல் நடுநாட்டு வட்டார மொழியில் இருந்தால் சிறப்பாக இருக்குமென்றும் பிரதியில் மாற்றி உதவிட வேண்டுமெனவும் சொன்னீர்கள்.

எனக்கு திரைக்கதையாடல் பரிச்சயமில்லாத துறையென்பதால் சற்று தயங்கினேன். ஆனபோதும் ஊருக்கே வந்துவிட்டதில் என்னால் தட்ட முடியவில்லை.

மேலும் (உண்மை நிகழ்வில் குறவராக இருந்தாலும்) ஆதுபாதற்ற வாயில்லா சமூகமாய் நைந்து கிடக்கும் சமவெளி பழங்குடியினரான இருளர்களின் வாழ்வை சொல்கிற படமென்பதால் வட்டார வழக்கு மாற்றத்திற்கு சம்மதித்தேன்.

எனக்கு காட்டப்பட்ட உரையாடல் பிரதியில் (திரைக்கதைப் பிரதி அல்ல) படத்தின் பெயர் இருளர்களின் தம் வாழ்வியலோடு கூடிய “எலி வேட்டை” என்றே இருந்தது.

இப்பகுதி சார்ந்த காட்சிகளின் உரையாடல்களும் சற்றேறக்குறைய இம் மக்களின் மொழிநடையாகவே இருந்ததில் சொற்ப இடங்களில்தான் மாற்றியமைக்குமாறு அமைந்தது.

மேலும் ஒட்டுமொத்த திரைக்கதையிலும் ஒன்றிரண்டு பெயர்கள் தவிர வேறெதும் சிக்கலாக தெரியவில்லை. அந்த பெயர்களையும் சரிசெய்து கொள்வதாகவும் உறுதியளித்தீர்கள்.

படம் ‘எலி வேட்டை’ என பரிதாபம் கொள்கிற தலைப்பாக இருந்ததால் அதற்குமேலும் அந்த பிரதியில் நான் ஊன்றி கவனம் செலுத்தவில்லை.

கூடுதலாய் ஒரு ஒப்பாரிப் பாடல் வேண்டுமென்றீர். நான் எழுதிக்கொடுத்ததை விடவும் இன்னும் ஆழமாக பாடலை எதிர்பார்க்கவும் நான் தவிர்த்துவிட்டேன்.

வட்டார உரையாடல் மாற்றம் தொடர்பான பணிக்கு தாங்களாகவே ரூ 50000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பணம் எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கச் செய்தீர்கள்.

இதனிடையில் கம்மாபுரம் பகுதி பச்சைப்பசேலென இருளர் வாழ்வியல் காட்சிக்கு பொருத்தமாக இராது என விழுப்புரம் பகுதியை தெரிவு செய்து படப்பிடிப்பை முடித்திருந்ததை அறிந்தேன்.

பிறகொருநாள் படம் திடுமென (எலி வேட்டை யிலிருந்து) பெயர்மாற்றம் பெற்று “ஜெய்பீம்” என இதழ்களில் விளம்பரம் கண்டேன்.

தொடர்ந்து ‘தலைப்பை மனமுவந்து கொடுத்ததிற்கான கதாநாயகரது நன்றி நவிலல்’ செய்தியையும் பார்த்தேன். அப்போதே எனக்குக் கொஞ்சம் யோசனைதான்.

அண்மையில் படத்தை பார்த்தவர்கள் எனது பெயர் நன்றி அறிவிப்பில் வந்தது கண்டு மகிழ்வோடு சொன்னார்கள். கூடவே வன்னியர்களின் அக்கினிக் கலச காலண்டர் வைத்த காவல் ஆய்வாளர் வீட்டுக் காட்சியையும் வருத்தத்தோடு பதிவு செய்தார்கள். எனக்கு பேரதிர்ச்சி.

என்னிடம் கொடுக்கப்பட்ட பிரதியில் வன்னியர் அக்கினிக் கலசம் போன்ற காட்சி குறியீடுகளெல்லாம் அப்போது அதில் இல்லை. மீறி இருந்திருந்தால் உண்மை நிகழ்விற்கு முற்றும் புறம்பான, தேவையில்லாத அந்த பகுதியை உங்களிடம் நீக்க சொல்லியிருப்பேன் அல்லது நான் வழக்குமொழியாக்க வேண்டுகோளை நிராகரித்திருப்பேன்.

எனது வழக்கு மொழியாக்கத்திற்குப் பிறகு அக்கினி கலசம், சாதிய பின்புல விவரிப்பு என எம் சமூகத்தை வன்முறையாளர்களாகவும் கொலையாளிகளாகவும் வலிந்து திணிக்கப்பட்ட வன்னியர் வெறுப்பரசியலை நீங்கள் கையிலெடுத்து திரைக்கதைப் பிரதியில் சேர்த்துவிட்ட குரூரம் குறித்து நெடும் பதிவொன்றை எனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தேன்.

உடன் ‘பீரியட் படம் என்பதால் ஆர்ட் சைடில் தவறுதலாக வைத்துவிட்டார்களெனவும் அதற்கு உள்நோக்கம் எதுவும் இல்லையென்றும் அப்படியிருந்தால் உங்கள் வீடுதேடி வந்திருக்க மாட்டேன், குறிப்பாக என்மீது வருத்தம் வேண்டாமெனவும் சர்ச்சைக்குரிய அந்த காலண்டர் படத்தை நீக்கச்செய்து விட்டதாகவும்’ சொன்னீர்கள்.

அதுபோலவே காலண்டர் காட்சியில் திருத்தம் செய்திருந்தாலும் பல இடங்களில் ஒட்டுமொத்த வன்னிய சமூகத்தையே கொலையாளிகளாக சித்தரித்தக் கொடூரத்தையும் வன்மத்தையும் என்னாலும் அதைப் பார்த்த எம் மக்களாலும் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

நிலைமையின் தீவிரமுணர்ந்து எங்கள் அன்புமணி அண்ணன் கேட்ட நியாயக் கேள்விகளுக்கு பதிலேதும் சொல்லாமல் “உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்” எனும் படியாய் பிரச்சினையை திசைமாற்றிய உங்கள் நடிகர் சூர்யாவின் தெனாவட்டு விளக்கத்தை எம்மால் சற்றும் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.

படைப்பாளி, கலைஞன் எனச் சொல்லிக் கொள்வோர்க்கெல்லாம் ஒரு நேர்மை வேண்டும். ‘எலிவேட்டை’ என என்னிடம் காட்டி ‘ஜெய்பீம்’ என நீங்கள் மாற்றுவது உங்களுக்கு சாதாரணமாகக் கொள்ளலாம்.

ஆனால் எலிவேட்டை என்கிற தலைப்பில் இருக்கிற அதே சாதாரண உரையாடல், பெயர்கள், ஜெய்பீம் என அக்கினிக் கலச குறியீடுகளோடு வருகிறபோது உக்கிரம் கூடி வேறொரு குரூர ரூபம் கொள்கிறது.

ஒட்டுமொத்தமாய் ஒரு பொய்த் தலைப்பை வைத்து என்னை வட்டார உரையாடலை எழுதச்சொல்லி பிறகு அவற்றை மாற்றிவிட்டு எனக்கு பச்சைத் துரோகம் இழைத்துவிட்டீர்.

கூடுதலாய் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திற்கு என் பெயரையும் வைத்து இழிவுபடுத்திவிட்டீர்.

‘JAIBHIM’ பட வெளியிடு OTT தளம் என்கிற திமிரில் தெரிந்தே அக்கினி கலசக் குறியீடுகள், சாதியப் பின்புல விவரிப்புகள் என வைத்துவிட்டு அந்த தவறின் விளைவுகளை சற்றும் பொருட்படுத்தாமல் இரு சமூகங்களுக்கிடையே பெரும் பகையுணர்வை தூண்டும் விதமாக அணிதிரட்டி அதனால் காசு சம்பாரிக்க நாளும் அறிக்கை விடுகிற அற்ப வேலையை செய்து வருகிறார் தங்களின் நடிகர்.

மறைந்த எம் மாவீரன் காடுவெட்டியார் அவர்களையும் ராசாக்கண்ணு கொலைக்கு நீதிகேட்டு நெடுங்காலம் போராடிய என் சமூகத்தாரையும் சிறுமைப்படுத்தி மற்றும் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திற்கு என் பெயரை வைத்துத் தாழ்த்தியும் உண்மைக்கு புறம்பான சித்தரிப்புக்கு விளக்கம் கேட்ட அண்ணன் அன்புமணியின் கேள்விகளை புறந்தள்ளியுமாய் மௌனம் காக்கும் நீங்களும் உங்கள் நடிகர் சூர்யாவின் செய்கைகளும் என்னைப் பெரும் மனஉளைச்சலாக்குகின்றன.

செய்த தவறை ஒத்துக்கொள்ள மனிதனாக இருந்தால் போதும். அந்த மனிதத் தன்மை இல்லாமல் கலை, கலைஞன், மயிரு மட்டை என என்ன வேண்டிக் கிடக்கிறது.

இருபத்திஐந்து ஆண்டுகாலம் எனது எழுத்தில் தவழ்ந்த எம் நடுநாட்டு மொழியை எம் இனத்திற்கு எதிராக என்னாலேயே திருப்ப செய்துவிட்ட உங்கள் ஏமாற்றுத் துரோகம் இனி எந்த படைப்பாளிக்கும் வரவே கூடாது.

உங்களால் எனக்கும் எம் இனத்திற்குமாய் சுமத்தப்பட்ட இத்தனை இழிவுகளையும் தாண்டி உங்கள் இழிசெயலால் சம்பாரிக்கிற வருமானத்திலிருந்து நான் பெற்ற அந்த பாவத்தின் சம்பளத்தை வைத்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு கணமும் குற்ற உணர்வில் துடித்துக் கொண்டிருக்கிறேன்.

எனவே வட்டார மொழிமாற்ற பணிக்காக தாங்கள் அனுப்பி வைத்தத் தொகை ரூ 50000/-ஐ (ரூபாய் ஐம்பதாயிரம்) தங்களுக்கே திருப்பும் விதமாக அதற்கான காசோலையினை இக்கடிதத்தில் இணைத்துள்ளேள்.

என் படைப்பை படித்தவர்கள் ஒருபோதும் எனக்கு பழியை நினைக்கமாட்டார்களென நம்பி ஏமாந்துவிட்டேன். இனிவரும் காலங்களில் இதுபோன்று தூக்கிவிட்டு குலையில் குத்துகிற வஞ்சகர்களை வாழ்வில் ஒருபோதும் சந்திக்காத வண்ணம் என் குலதெய்வம் ‘முதனை செம்பையனார்’ எனக்கு வழிநெடுகத் துணைநிற்க வேண்டும்.

(கண்மணி குணசேகரன்)

#குறிப்பு: இந்த கடித நகலும் ரூ50,000க்கான காசோலையும் 2D Entertainment நிறுவன முகவரிக்கு பதிவு அஞ்சலில் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல் :
தமிழகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் கண்மணி குணசேகரன்.. இவர் கவிதை, சிறுகதை, நாவல் என படைப்புகளின் உறவுக்காரர்.
இவரது பல படைப்புகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளன. இவர்தான் சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்கு வசனகர்த்தாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jaibhim dialogue writer Kanmani Gunasekaran returned his payment

‘அண்ணாத்த’ பாணியில் அடுத்த படம்..; விமல்-அனிதா சம்பத் கூட்டணி

‘அண்ணாத்த’ பாணியில் அடுத்த படம்..; விமல்-அனிதா சம்பத் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதய் புரோடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் விமல்

இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் புதிய படம் உருவாகி கொண்டிருக்கிறது.

இது அண்ணாத்த பாணியில் அண்ணன் தங்கை சென்டிமெண்ட் மற்றும் குடும்ப உறவுகளையும் மையப்படுத்தி உருவாகியுள்ளது.

இப்படத்தில் பாண்டியராஜன் விமலின் தந்தையாக நடிக்கிறார். விமலின் தங்கையாக அனிதா சம்பத் நடிக்கிறார்.

டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்துக் கொண்டார். அண்மையில் வெளியான ஜாங்கோ என்ற படத்தில் நாயகியின் தோழியாக நடித்திருந்தார் அனிதா என்பது குறிப்பிடத்தக்கது.

தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்: விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், வத்சன், வீரமணி , ஆடுகளம் நரேன், பாலசரவணன் தீபா நேகா ஜா.

இயக்குனர் : மார்ட்டின் நிர்மல் குமார்.

திரைக்கதை: மார்ட்டின் நிர்மல் குமார் மற்றும் வத்சன் வீரமணி

ஒளிப்பதிவு: கமில் ஜே அலெக்ஸ்

இசையமைப்பாளர் : காட்வின்

TV fame Anitha Sambath joins the set of Vemal movie

More Articles
Follows