தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது டைரக்டர் ஷங்கர் தான்.
இவரது படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசானாலும் இவர் நேரிடையாக மற்ற மொழி படங்களை இயக்கவில்லை.
(ஹிந்தியில் மட்டும் ஒரு படம்)
தற்போது முதன்முறையாக தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்திற்கு தமன் இசையமைக்க, கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்பட படப்பிடிப்பை செப்டம்பர் 10 முதல் ஆரம்பிக்க இருந்தனர்.
ஆனால் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் விடுப்பட்ட காட்சிகளை ராம் சரணை வைத்து 3 வாரங்கள் எடுக்கவுள்ளாராம் ராஜமவுலி.
மேலும் ‘ஆச்சார்யா’ படத்திலும் ராம் சரண் நடிக்க வேண்டி காட்சிகள் மீதம் உள்ளதாம்.
எனவே அந்த இரு படங்களையும் முடித்துவிட்டு வாருங்கள் என ராம்சரணிடம் சொல்லிவிட்டாராம் ஷங்கர்.
அதன்படி தற்போது அக்டோபர் மாதம் முதல் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.
Ram Charan – Shankar film gets delayed