விஜய் – லோகேஷ் படத்தில் இரண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள்..!?

விஜய் – லோகேஷ் படத்தில் இரண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள்..!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் பொங்கலுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே ஜனவரி 11ம் வெளியாகும் என கூறப்படுகிறது.

அடுத்ததாக, விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் ‘தளபதி 67’. விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் ‘பிக் பாஸ் 5யின்’ டைட்டில் வின்னர் ராஜு மற்றும் ‘பிக் பாஸ் 6’ மைனா நந்தினி இருவரும் நடிகையுள்ளார்கள்.

raju and myna nandhini

raju and myna nandhini joining vijay’s thalapathy67

BREAKING என்னிடம் நடிப்பை கற்றுக் கொள்ள வேண்டாம்..; ‘செம்பி’ இசை விழாவில் கமல் பேச்சு

BREAKING என்னிடம் நடிப்பை கற்றுக் கொள்ள வேண்டாம்..; ‘செம்பி’ இசை விழாவில் கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா 70 வயது கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் ‘செம்பி’.

1980களில் கொடைக்கானலில் இருந்து 20 பயணிகளுடன் திண்டுக்கல் வரை செல்லும் பேருந்து ஒன்றில், வழியில் நடக்கும் சம்பவங்களே இப்பட கதைக்களம்.

இந்த பேருந்தில் பயணிக்கும் சிறுமி ஒருவரின் பெயரே ‘செம்பி’. அவினாசியைச் சேர்ந்த 10 வயதான நிலா என்ற சிறுமி, செம்பி ஆக நடித்துள்ளார்.

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

‘கொக்கி’ பட ஒளிப்பதிவாளர் ஜீவன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். முதன்முறையாக இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் பிரபு சாலமன்.

இந்த படத்தை ட்ரைண்ட் ஆர்ட்ஸ் ரவி தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் கமல்ஹாசன், பாக்யராஜ், ஆர்வி. உதயகுமார், நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா, ஐசரி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது…

“சினிமாவில் என்னை விட திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கிறார்கள். அவர்கள் என் பொறாமையால் சென்றார்களா? என கண்ணாடியில் பார்ப்பேன். ரசனையால் தான் அது நடக்காமல் போகிறது.

ஒரு காடு உருவாக நான்தான் காரணம் என பறவைக்கு தெரியாது. அந்த காரணத்தினால்தான் நான் இங்கு வந்தேன். எனக்கு பிடித்தவர்கள் பலர் இந்த மேடையில் இருக்கிறார்கள்.

நடிப்பை என்னிடம் கற்றுக் கொள்ள சொன்னார்கள். அது வேண்டாம். என்னைவிட நிறைய திறமைசாலிகள் சினிமாவில் உள்ளனர். நிறைய டப்பிங் கலைஞர்களை பார்த்திருக்கிறேன். அவர்களிடம் கூட அப்படி ஒரு நடிப்பு திறமை இருக்கு.

45 வருடம் கழித்தும் 16 வயதினிலே படத்தை பேசுகிறோம். அதான் பெரிய படம். பிரம்மாண்ட படம் எடுத்தும் அந்த படம் பேர் கூட நினைவில்லை என்றால் அது சின்ன படம் தான் ஒரு படத்தின் வெற்றி தான் அது பெரிய படம் என்பதை தீர்மானிக்கிறது”

இவ்வாறு கமல்ஹாசன் மேடையில் பேசினார்.

மேலும் கோவை சரளாவை பற்றி பேசும்போது சரளா பாப்பா சரளா பாப்பா என்று அழைத்தே பேசினார்.

Ashwin Kumar

JUST IN சிவாஜியையே ஃபீல் பண்ண வச்சவரு கமல்.. – ஆர்வி. உதயகுமார்

JUST IN சிவாஜியையே ஃபீல் பண்ண வச்சவரு கமல்.. – ஆர்வி. உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா 70 வயது கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் ‘செம்பி’.

1980களில் கொடைக்கானலில் இருந்து 20 பயணிகளுடன் திண்டுக்கல் வரை செல்லும் பேருந்து ஒன்றில், வழியில் நடக்கும் சம்பவங்களே இப்பட கதைக்களம்.

இந்த பேருந்தில் பயணிக்கும் சிறுமி ஒருவரின் பெயரே ‘செம்பி’. அவினாசியைச் சேர்ந்த 10 வயதான நிலா என்ற சிறுமி, செம்பி ஆக நடித்துள்ளார்.

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

‘கொக்கி’ பட ஒளிப்பதிவாளர் ஜீவன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். முதன்முறையாக இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் பிரபு சாலமன்.

இந்த படத்தை ட்ரைண்ட் ஆர்ட்ஸ் ரவி தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் கமல்ஹாசன், பாக்யராஜ், ஆர்வி. உதயகுமார், கே.எஸ். ரவிகுமார், நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா, ஐசரி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

ஆர்வி. உதயகுமார் பேசியதாவது…

நான் சிவாஜி அவர்களுக்கு ஒரு கதை வைத்திருந்தேன். மிலிட்டரியில் 2 கால்களை இழந்த ஒருவர் தன் மகனுக்காக வாழ்கிறார்.

ஒரு கட்டத்தில் மகனுக்கு பிரச்சினை வருகிறது. அந்த பிரச்சனையை மகனை வைத்தே வில்லனை பழிவாங்குகிறார்.

இந்த கதை சிவாஜிக்கு பிடித்தது. அப்போது கமல் பற்றி பேசினோம். அப்போது கமல் நடிப்பை புகழ்ந்து தள்ளினார்.

என்னய்யா கமல் இப்படி நடிக்கிறான்.”

என மேடையில் பேசி ‘செம்பி’ படக்குழுவை வாழ்த்தினார் ஆர்வி. உதயகுமார்.

கூத்தடிப்பது பிடிக்கல.; பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கண்டிசன் போடும் மன்சூர் அலிகான்

கூத்தடிப்பது பிடிக்கல.; பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கண்டிசன் போடும் மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் மன்சூர் அலிகான்.

இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசியதாவது…

“பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், ‘நான் தான் பிக்பாஸாக இருப்பேன்’ என நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்!

மேலும்… “பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், ‘விவசாயத்திற்கு முக்கியத்துவம்’ கொடுக்கும் நிகழ்ச்சியாக, தான் பிக்பாஸாக இருந்து நடத்துவேன் என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட விதவை பெண்ணுக்கு உதவிய தயாரிப்பாளர் தாணு

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட விதவை பெண்ணுக்கு உதவிய தயாரிப்பாளர் தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான கலைப்புலி எஸ் தாணு.

கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த இரண்டு வருடங்களாக இடைநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அவரது நுரையீரலில் காயங்களை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அவர் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். மேலும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் (TRANSTAN) பதிவும் செய்யப்பட்டு இருக்கிறார்.

தயாரிப்பாளர் வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு, நோயாளியின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் காவேரி மருத்துவமனையின் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன் ஆகியோர், நோயாளியின் குடும்பத்தினர் சார்பாக இந்த தொகையை பெற்றுக்கொண்டதோடு, அவரது உன்னத செயலுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

காவேரி மருத்துவமனை இந்த மாற்று அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவை மானியமாக வழங்கியுள்ளதுடன் மேலும் பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது.

வாய் பேசாத காது கேளாத நடிகையை திருமணம் செய்யும் விஷால்.?!

வாய் பேசாத காது கேளாத நடிகையை திருமணம் செய்யும் விஷால்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

45 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டி முடித்த பின் தான் தனது திருமணம் என சபதம் எடுத்தவர் இவர்.

நடிகர் சங்க கட்டிடமும் முடிந்தபாடில்லை.. விஷால் கல்யாணமும் முடிந்தபாடில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் சரத்குமார் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால் இவர்கள் உறவில் பிரச்சினை வந்ததால் இருவரும் பிரிந்தனர்.

அதன்பின்னர் ஒரு தொழிலதிபரின் பெண் அனீஷா என்பவரை நிச்சயதார்த்தம் செய்தார். அந்த திருமணமும் நடைபெற வில்லை.

இந்த நிலையில் தற்போது நடிகை அபிநயா என்பவரை விஷால் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஈசன், நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபிநயா. குற்றம் 23 படத்தில் அருண் விஜய்க்கு அண்ணியாக நடித்து பாராட்டுகளையும் பெற்றார். அழகும் திறமையும் நிறைந்தவர் இவர்.

அதே சமயம் அபிநயா காது கேளாதவர் மற்றும் வாய் பேச முடியாதவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுபற்றி நாம் விசாரித்த வரையில் இது உறுதியான தகவல் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

nadodigal-abinaya-stills-pics

Actor Vishal marriage news updates

More Articles
Follows