தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக மக்களின் 20 வருட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார் ரஜினிகாந்த்.
அதுமுதல் தன் கட்சி தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். அப்போது பாபா முத்திரையுடன் இருந்த தாமரைப் பூவை அகற்றினார்.
பாஜக.வுக்கும் ரஜினிக்கும் தொடர்பு இருப்பதாக பலரும் விமர்சிக்க அந்த தாமரைப் பூ அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பாபா முத்திரையை சுற்றி உள்ள பாம்பு ராமாகிருஷ்ணா மடத்தின் லோகோவில் இருக்கும் பாம்பு போல் உள்ளது என்று தென்மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராக உள்ளது என பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.
அதனால் அந்த பாம்பு படமும் நீக்கப்பட்டு தற்போது ரஜினி மக்கள் மன்றம் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பாபா முத்திரை மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Rajini Makkal Mandram logo changed 3rd time