உதயநிதியின் கடைசி பட விழாவில் கமல் – ரஜினி பங்கேற்பு.!?

உதயநிதியின் கடைசி பட விழாவில் கமல் – ரஜினி பங்கேற்பு.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் உதயநிதியின் கடைசி படம் என்று அவரே கூறியுள்ளார்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீடு குறித்து தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது.

‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 1ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கிறது.

இந்நிலையில், உதயநிதியின் கடைசிப் படமான இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Rajini Kamal participation in maamannan audio launch

ஆம் ஆத்மி MP உடன் திருமண நிச்சயதார்த்தம் செய்த ப்ரீனிதி சோப்ரா

ஆம் ஆத்மி MP உடன் திருமண நிச்சயதார்த்தம் செய்த ப்ரீனிதி சோப்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா இருவரும் நீண்டகாலம் காதலித்து வந்தனர்.

இந்த ஜோடி லண்டனில் ஒன்றாக படிக்கும் போது இருந்தே நீண்டகால நண்பர்களாக இருந்தனர்.

தங்களது காதலை வெளியுலகுக்கு அவர்கள் இருவரும் உறுதிப்படுத்தவில்லை.

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்ஜீவ் அரோரா, இருவரின் புகைப்படங்களை கடந்த மார்ச்சில் பகிர்ந்து, தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் ஒன்றாக காணப்பட்டார்கள்.

இந்நிலையில், இந்த ஜோடி திருமணம் உறுதிப்படுத்த நேற்று (13.05.2023) நிச்சயதார்த்தம், டெல்லியில் உள்ள கபுர்தலா மகாராஜாவின் முன்னாள் இல்லமான கபுர்தலா இல்லத்தில் நடைபெற்றது.

மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில் திருமண தம்பதிகளின் நண்பர்கள் மற்றும், குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 150 பேர் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.

இதற்காக அமெரிக்காவில் செட்டிலான பிரியங்கா சோப்ரா டெல்லிக்கு வந்து கபுர்தலா இல்லத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், முன்னாள் மராட்டிய முதலமைச்சர் ஆதித்ய தாக்கரே, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் பிற தலைவர்கள் நேரில் வந்து கலந்து கொண்டார்கள்.

பரினீதி சோப்ரா நண்பர்களான ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா, பூமி பட்னாகர், நேஹா தூபியா, கனிகா கபூர், மணீஷ் மல்கோத்ரா, கபில் சர்மா உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

மேலும், இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அந்த ஜோடி தங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

actress Parineeti Chopra Engaged To mp Raghav Chadha

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான விஜய் பட நடிகை.; வைரலாகும் போட்டோ ஷூட்.!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான விஜய் பட நடிகை.; வைரலாகும் போட்டோ ஷூட்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இலியானா.

தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

அதன்பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

நடிகை இலியானா புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரோ நீபோன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் திடீரென அவரை பிரிந்ததாகவும் கூறப்பட்டது.

நடிகை இலியானா தற்போது பாலிவுட் நடிகை காத்ரினா கைஃப் சகோதரருடன் அவர் தற்போது டேட்டிங்கில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் இருவரும் அதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில்,முதல் முறையாக அவர் கர்ப்பமாக இருக்கும் பேபிபம்ப் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும், நடிகை இலியானா தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் இன்னும் ஆறு அல்லது ஏழு மாதத்தில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே இலியானா கர்ப்பமானதை அடுத்து அவரது கர்ப்பத்திற்கு யார் காரணம்? அவரது காதலர் யார்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ileana of Pregnant before marriage

காதர் பாட்ஷா & மார்க் ஆண்டனி வர்றாங்க.; ஜூனில் ஆர்யா.. ஜூலையில் விஷால்.!

காதர் பாட்ஷா & மார்க் ஆண்டனி வர்றாங்க.; ஜூனில் ஆர்யா.. ஜூலையில் விஷால்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் அடுத்த மாதம் ஜூன் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது போல விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி்’ படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு படங்கள் குறித்த விவரங்களை பார்ப்போம்..

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ இந்த படம் உலகமெங்கும் வரும் ஜுன் 2-ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் ஆர்யா. நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க்வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ் ஜே சூர்யா நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் டைம் டிராவல் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Arya and Vishal films to release in June and July

மாணவி லக்‌ஷயாஸ்ரீ-க்கு பாராட்டு.; அரசியலில் குதிக்கும் நடிகர் தாடி பாலாஜி

மாணவி லக்‌ஷயாஸ்ரீ-க்கு பாராட்டு.; அரசியலில் குதிக்கும் நடிகர் தாடி பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வில் நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இவரைப் போல தமிழ் பாடத்தில் லக்‌ஷயாஸ்ரீ என்ற மாணவி 100/100 மதிப்பெண் பெற்று பலரது கவனத்தை ஈர்த்தார்.

இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தனம் பச்சையப்பன் மெட்ரிக் பள்ளியில் படித்தவர்.

லக்‌ஷயாஸ்ரீக்கு பலரும் பாராட்டு வகையில் KPY நடிகர் தாடி பாலாஜி மாணவியின் இல்லத்திற்கு சென்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பாலாஜி பேசும்போது… “மாணவியின் பெயரிலேயே லட்சியம் இருக்கு. எனவே அவரது லட்சியம் நிறைவேறும். அவரது மேற்படிப்புக்கு நான் உதவி செய்வதாக சொல்லியிருக்கிறேன்.

அப்போது அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

“நான் முன்பு சொன்னது போல விரைவில் அரசியலுக்கு வருவேன். வந்தால் நல்லது பண்ணுவேன்.

ஆனால் தனிக்கட்சி ஆரம்பிக்கும் ஐடியா இல்லை. எனக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கும் கட்சியில் இணைந்து பணியாற்ற தயார்” என்றார்.

விரைவில் அவர் திமுக கட்சியில் இணைவார் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

கூடுதல் தகவல்கள்…

மேலும் திருவள்ளூர் மாவட்டம் அருகே பழங்குடியினர் வசிக்கும் பகுதி அருகே பென்னாலூர்பேட்டை பயிற்சி காவல் துறை உதவி ஆய்வாளர் பரமசிவம் என்பவரை சமீபத்தில் பாராட்டியிருந்தார் பாலாஜி.

பரமசிவம் தன் பகுதி பழங்குடியினத்தவரின் பகுதிகளுக்கு சென்று கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார்.

அங்கு வசிக்கும் மக்களிடம்.. “உங்கள் காலில் விழுகிறேன் உங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள்” என கெஞ்சி பேசி இருந்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி நித்யா உடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்கிறார் நடிகர் பாலாஜி. அண்மையில் பாஜகவில் இணைந்தார் நித்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Kudos to student Lakshayashree.; Actor Thaadi Balaji enters into politics

சிக்கலில் சித்தப்பு.; பிச்சை எடுக்குற மாதிரிருந்த சரவணனுக்கு சோறு போட்டேன் – முதல் மனைவி சூர்யாஸ்ரீ

சிக்கலில் சித்தப்பு.; பிச்சை எடுக்குற மாதிரிருந்த சரவணனுக்கு சோறு போட்டேன் – முதல் மனைவி சூர்யாஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990 களில் வெளியான ‘பார்வதி என்னை பாரடி’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தவர் சரவணன்.

அதன் பின்னர் படங்களே இல்லாமல் இருந்த அவருக்கு கார்த்தி நடித்த ‘பருத்திவீரன்’ பட பெரும் பெயரை பெற்று தந்தது. அதில் அவர் ஏற்ற சித்தப்பு கேரக்டர் இன்றளவும் பிரபலமாக உள்ளது.

பின்னர் சில படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.

சமீபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய நடித்த ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் கௌதம் கார்த்திக் – வெண்பா நடித்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் இவர்களின் தந்தையாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் தன் குடும்ப விவகாரம் குறித்து புகார் மனு அளித்திருந்தார் நடிகர் சரவணன்.

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..

“எனக்கு இரு மனைவிகள். முதல் மனைவியிடம் எனக்கு குழந்தை இல்லை என்பதால் 2015 இல் நான் மறுமணம் செய்தேன்.

சென்னை – போரூர் முகலிவாக்கத்தில் 2014 இல் லேக்வியூ அபார்ட்மென்டில் செண்பகராமன் என்பவரிடம் இரு பிளாட்களை வாங்கினேன். இதை எனக்கு முடித்துக் கொடுத்தவர் புரோக்கர் ராமமூர்த்தி.

4 பிளாக்குகளில் தலா 4 வீடுகள் இருந்தன. நான் இரு வீடுகளை வாங்கியதால் எனக்கு 2 கார் பார்க்கிங் கொடுக்கப்பட்டது.

இரு வீட்டின் யூடிஎஸ் எனக்கு 700 அல்லது 800 சதுர அடி வரும்.

இரண்டாவது மனைவி வந்த பிறகு முதல் மனைவியுடன் எனக்கு தகராறு ஏற்பட்டதால் இந்த வீட்டுக்கே நான் வருவதை நிறுத்திக் கொண்டேன்.

நான் இங்கு இல்லாததை பயன்படுத்தி ராமமூர்ததி என்பவர் கார் பார்க்கிங்கில் ஒரு கடையை கட்டி அதற்கு மின் இணைப்புடன் அந்த இடத்திற்கு வரி கட்டி விட்டதாகவும் கூறியிருந்தார். இப்படியாக என்னை ஏமாற்றி வந்தார்.

ராமமூர்த்தியின் மனைவி என் இடத்தில் இருந்து கொண்டு என்னை வெட்டுவேன் குத்துவேன் என்கிறார். ராமமூர்த்தி & அவரது மனைவி ஜெயமணி ஆகியோர் பெயரில் புகார் கொடுத்துள்ளேன்.

இந்த பிரச்சினை குறித்து அமைச்சர் தாமோ அன்பரசன் அவரிடம் மனு கொடுத்தேன்.” என்றார்.

நடிகர் சரவணனின் மனைவி சூர்யாஸ்ரீ, ராமமூர்த்தி, மனைவி ஜெயமணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்…

“நான் சரவணனின் மனைவி சூர்யாஸ்ரீ. அவர் சொல்வதில் எதுவுமே உண்மை இல்லை.

என்னை காதலித்து கல்யாணம் செய்து ஏமாற்றிவிட்டார்,

ஒரு பெண்ணை வீட்டோட வைத்துக் கொண்டு என்னை டென்ஷன் செய்கிறார்.

எனக்கு விவாகரத்தே கொடுக்கவில்லை சரவணன். அப்புறம் எப்படி அவருக்கு 2வது மனைவி வருவாங்க.

அவர் அந்த பெண்ணை கீப் வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் சொன்ன முகலிவாக்கம் இடத்தில் அவருக்கு எந்த பங்கும் இல்லை.

அந்த வீட்டை நான் காசு கொடுத்து வாங்கினேன். நான் சம்பாதித்த காசில் அவர் பெயரில் நான் வாங்கினேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு.

ரூ. 12 லட்சம் ரூபாய் நான் கட்டினேன். மீதமுள்ள 36 லட்சம் பணத்திற்கு லோன் போட்டுள்ளேன். அதற்கு EMI நான்தான் கட்டி வருகிறேன்.

‘பருத்தி வீரன்’ படத்திற்கு பிறகு சினிமா சான்ஸ் இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தார். நான்தான் அவருக்கு சோறு போட்டேன். இதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அவர் கூறியிருக்கிறார்.”

இவ்வாறு சரவணன் மனைவி சூர்யாஸ்ரீ தெரிவித்துள்ளார்.

I provided food to Saravanan who pretended to beg – First wife Suryashri

More Articles
Follows