தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கர்நாடகாவில் ஒரு பேருந்தில் நடத்துனராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி இன்று இந்தியாவே போற்றும் அளவுக்கு ஒரு மாபெரும் மனிதராக வளர்ந்து இருக்கிறார்.
1968ஆம் ஆண்டுகளில் ரஜினியுடன் சேர்ந்து போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்தவர் ராஜ்பகதூர்.
இன்றுவரை இவர்களது நட்பு தொடந்துக் கொண்ருக்கிறது.
புகழின் உச்சிக்கே போனாலும் இன்றும் மாறாத நட்பை அவர் மீது கொண்டிருப்பவர் ரஜினி.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நண்பர் ராஜ்பகதூர்தன் அண்மையில் பேட்டியில் கூறியதாவது…
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழகம் மற்றும் மக்களின் எதிர்காலம் குறித்து அடிக்கடி ரஜினி பேசுவார்.
அவர் அரசியலுக்கு வர வேண்டும் என மக்களும் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன் ஒரு விழாவில் ரஜினியை சந்தித்தேன். அப்போது பதட்டமாக இருந்தார்.
என்னெவென்று கேட்டபோது, அரசியலில் ஈடுபடுவது குறித்து பேசினார்.
அவர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.
Rajini in Immense Pressure To Join Politics says his friend Raj Bahadur