தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மதுரை திருநகரைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். வயது 33.
திருமணமான இந்த இளைஞர் சில தினங்களுக்கு முன் சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் பயணம் செய்த போது, செங்கல்பட்டு அருகே படிக்கட்டிலிருந்து தவறி விழுந்ததில் பலத்த அடிபட்டார்.
விபத்து நடந்த இடத்திலேயே ஒரு கால் ரயில் சக்கரத்தில் மாட்டி துண்டிக்கப்பட்டுவிட்டது.
உடனடியாக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
மிகவும் அடிபட்டு குணப்படுத்த முடியாத நிலையில் இருந்த அவரது இன்னொரு காலும் அகற்றப்பட்டது.
இந்த விஷயம் தலைவர் ரஜினிகாந்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
விஷயம் அறிந்து மிகவும் வருந்திய ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரை தன் சார்பில் அனுப்பி வைத்தார்.
அவருடன் தென் சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணைச் செயலாளர் ராமதாசும் சென்றார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காசி விஸ்வநாதனை நேரில் சென்று சுதாகர் அவர்கள் பார்வையிட்டு மருத்துவரிடம் அவருடைய உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்.
அவரது பெற்றோர்கள், மனைவியிடம் ரஜினி சார்பில் நிதி உதவி வழங்கியதுடன், தனது தொலைபேசி எண்ணை அளித்து எந்நேரம் வேண்டுமாணாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
வரும் நாட்களில் காசி விஸ்வநாதன் மற்றும் அவரது குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் ரஜினி சார்பில் வாக்குறுதி அளித்துவிட்டு வந்தார் சுதாகர்.