தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழாவில் கழுகு – காக்கா கதை குறித்து பேசி இருந்தார் ரஜினிகாந்த்.
என்னதான் காக்கா கழுகை தொந்தரவு செய்தாலும் எதையும் கண்டுகொள்ளாத கழுகு மேலே உயர பறந்து கொண்டே இருக்கும் என்றார். இதனால் ரஜினிகாந்த் தன்னை கழுகாகவும் அவர் காக்கா என்று குறிப்பிட்டது நடிகர் விஜய் சொன்னதாகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை உருவானது.
அதே சமயம் காக்கா என்பது கூடி வாழும்.. கழுகு எப்போதும் தனித்து தான் நிற்கும்.. என்றும் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.
அதன் பின்னர் ஜெயிலர் படம் வெளியாகி உலக அளவில் 700 கோடிக்கு மேல் வசூலித்தது.
ரஜினியின் இந்த பேச்சுக்கு ‘லியோ’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ‘லியோ’ படத்தின் இசை விழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் நேற்று விஜய் நடித்த ‘லியோ’ படம் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் கழுகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. விஜய்யை லியோ-தாஸ் என அது அடையாளப்படுத்தும்.
கழுகை காட்டும்போது போது தியேட்டரில் கரகோஷம் எழுந்தது. அது ரஜினியை குறிப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘கழுகு’ படத்தையும் லியோ படத்துடன் ஒப்பிட்டு வருகின்றனர்.
ரஜினி நடித்த ‘கழுகு’ படத்தில் வில்லன் நரபலி கொடுப்பார்.்அதை ரஜனி தடுப்பதும் கதைக்களமாக இருந்தது.
அதே பழைய கதையை லியோ-வில் வில்லன் கேரக்டராக வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனை ரஜினிகாந்த் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
மேலும் ‘லியோ’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியின் ‘பொல்லாதவன்’ படத்தில் இடம்பெற்ற ‘நான் பொல்லாதவன்.. பொய் சொல்லாதவன்.. நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்..” என்ற பாடல் ஒலிக்கும். இந்த காட்சியையும் ரசிகர்கள் குறிப்பிட்டு விஜய் ரசிகர்களை வச்சி செய்து வருகின்றனர்.
Rajini fans trolls Vijays Leo with Kazhugu movie story