தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் நாடக அரங்கேற்றம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசினார் ராதாரவி.
“எனக்கு திமிரு என்பது உள்ளேயே இருக்கிறது ஆரம்பகாலத்திலிருந்து சொல்கிறேன்.
நல்ல நாடகங்களை போடுகிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தில் முதல் முறையாக பாஜக அரசு ஒரு தமிழரை பதவியில் அமர்த்தியுள்ளது.
ஒய்.ஜி மகேந்திரனின் நாடகக் கதையை கதையை பலர் திருடிவிட்டனர்.
டைரக்டர் ஷங்கரும் கதையை திருடி விட்டார்.
‘ரூபாய்க்கு மூணு கொலை’ என்ற நாடகத்தின் போது ஓரமாக அமர்ந்திருப்பார்.
அந்த நாடகங்களைப் பார்த்து அதிலிருந்து தான் இரட்டை வேடங்களில் உள்ள கதையை எடுத்துள்ளார் என அடித்துச் சொல்வேன்” என ராதாரவி கூறினார்.