ஆரா சினிமாஸ் தயாரிப்பில் சிபி ராஜ் நடிக்கும் “ரேஞ்சர் “

ஆரா சினிமாஸ் தயாரிப்பில் சிபி ராஜ் நடிக்கும் “ரேஞ்சர் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)திரையுலகில் மதிக்கத்தக்க படைப்புகளை தயாரித்தும், விநியோகித்தும், நன்மதிப்பை பெற்ற நிறுவனமான ஆரா சினிமாஸ் தன் அடுத்த படைப்பை தொடங்கியுள்ளது. ஆரா சினிமாஸ் மகேஷ் ஜி தயாரிப்பில் சிபிராஜ் நடிப்பில் “ரேஞ்சர்” படம் விமரிசையாக தொடங்கப்பட்டுள்ளது.

“ஆவ்னி” எனும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்து சாப்பிட்ட சம்பவம் நாடு முழுதும் சர்ச்சையை கிளப்பியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவாத்மல் மாவட்டதில் நடைபெற்ற இந்த உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் தான் “ரேஞ்சர்”

“பர்மா” , “ராஜா ரங்குஷ்கி” “ஜாக்சன் துரை “ போன்ற கவனித்தக்க படங்களை உருவாக்கிய இயக்குநர் தரணிதரன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன், மது ஷாலினி ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள்.

தயாரிப்பாளர் ஆரா சினிமாஸ் மகேஷ் ஜி படம் பற்றி கூறியதாவது…
“ரேஞ்சர்” படத்தின் திரைக்கதை வியக்கத்தக்க வகையிலானது. இதுவரை நாம் மனிதர்களை தாக்கும் விலங்குகளை மையமாக கொண்ட படங்கள் நிறைய பார்த்திருப்போம். அவையாவும் கற்பனை களம்களை கொண்டது. ஆனால் ரேஞ்சர் அப்படியானது அல்ல. நம் நாட்டில் நடைபெற்ற நம்பமுடியாத உண்மை சம்பவத்தை, நம்மை பீதியில் ஆழ்த்தும் வகையிலான சம்பவத்தை அடிப்படையாக கொண்டது “ரேஞ்சர்”.

இயக்குநர் தரணிதரன் மிக வித்தியாசமான கதை சொல்லல் மூலம் ரசிகனை கட்டுக்குள் வைக்கும் வித்தை தெரிந்தவர். இப்படத்தில் மிகச்சரியான விதத்தில் திரில்லும், கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த திரைக்கதையை தந்துள்ளார்.
நடிகர் சிபிராஜ் இப்படத்தில் இணைந்தது இப்படத்திற்கு மேலும் ஒரு பலமாக அமைந்துள்ளது. மிகவும் தேர்ந்த கதைகளில் நடித்து வரும் சிபிராஜுக்கு இப்படமும் இன்னும் ஒரு படி மேலே அவரது உயரத்தை கூட்டும்.

இப்படம் ரசிகர்களுக்கு நேரடி பிரமிப்பு அனுபவம் தரும் வகையில் பிரமாண்டமாக தயாராகவுள்ளது. அடர்ந்த காட்டுக்குள் தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேஷ பகுதிகளில் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. நிறைய சிஜி, VFX காட்சிகள் படத்தில் இடம்பெறுவதால் அதைத் தத்ரூபமாக தர ஹாலிவுட் கலைஞர்கள் இப்படத்தில் பணிபுரிய உள்ளார்கள்.

சிபிராஜ், ரம்யா நம்பீசன், மது ஷாலினி தவிர்த்து மேலும் பல முக்கிய நடிகரகள் இப்படத்தில் பங்குபெற உள்ளார்கள். அதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பிரபல இசையமைப்பாளர் அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவை மேற்கொள்ள சிவா நந்தீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார்.

படத்தின் முன் தாயாரிப்பு பணிகள் தற்போது மிகத்திவீரமாக நடைபெற்று வருகிறது. மிகவிரைவில் படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.

மூன்று தலைமுறைகள் கடந்தும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டும் குடும்பத்தினர் !!

மூன்று தலைமுறைகள் கடந்தும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டும் குடும்பத்தினர் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான 45-வது துப்பாக்கி சுடுதல் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஆவாரங்குடிபட்டியில் உள்ள புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 29-ந் தேதி தொடங்கியது.

போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, பறந்து சென்ற தட்டுகளை துப்பாக்கி தோட்டாக்களால் சுட்டு வீழ்த்தினர். இதில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீத் மற்றும் மிக்ஸடு ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

பதக்கங்கள்-சான்றிதழ்கள்

இதில் சர்வதேச வீரரான பிரித்விராஜ் தொண்டைமான் சிங்கிள் டிராப் பிரிவில் 50 தோட்டாக்களுக்கு 49 தோட்டாக்கள் மூலம் பறக்கும் தட்டை சுட்டு வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இதேபோல டபுள் டிராப் பெண்கள் பிரிவில் புவனா ஸ்ரீ 60 தோட்டாக்களுக்கு 27 தோட்டாக்கள் மூலம் பறக்கும் தட்டை சுட்டு வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். மாநில அளவிலான இந்த போட்டியில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீத் ஆகிய 3 பிரிவுகளிலும் அதிக புள்ளிகளை பெற்று ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதேபோல ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தட்டிச் சென்றது. மிக்ஸடு பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று சென்னை ரைபிள் கிளப் சாம்பியன் பட்டத்தை பெற்றது.

போட்டிகள் முடிந்ததும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் தேசிய வீரரும், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகியும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவருமான டி.வி.சீதாராமராவ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தங்க பதக்கம், வெள்ளி பதக்கம், வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

சுழற்கோப்பை

மேலும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சிங்கிள் டிராப் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு சுழற்கோப்பையும், ஸ்கீத் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு டி.டி.அப்பாராவ் சுழற்கோப்பையும், டபுள் டிராப் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு நாமஸிகண்ணன் சுழற்கோப்பையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றதற்கு புதுக்கோட்டை மகாராஜா சுழற்கோப்பையும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் டி.வி.சீதாராமராவ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து வழங்கினார்கள்.

இதை ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் ராஜகோபால தொண்டைமான், பிரித்விராஜ் தொண்டைமான், ராதா நிரஞ்சனி ராஜாயி உள்ளிட்ட சக அணி வீரர், வீராங்கனைகள் இணைந்து பெற்று கொண்டனர். இதில் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜகோபால தொண்டைமான், பிரித்விராஜ் தொண்டைமான், ராதா நிரஞ்சனி ராஜாயி, திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், ஜமீல், பாகிம் மற்றும் ரைபிள் கிளப் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி இ ஓ-வான ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் குடும்பம் மூன்று தலைமுறைகளாக பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. அவரின் மனைவி சரண்யா ராஜசேகர், மகள்கள் அந்த்ரா ராஜசேகர், உத்ரா ராஜசேகர், அவரின் உறவினரான சம்யுக்தா , மற்றும் அவரின் தந்தை கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பதக்கங்களை வாங்கி இருக்கிறார்கள். மேலும் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியனும் இப்போட்டியில் கலந்துகொண்டு மெடல்கள் வாங்கி இருக்கிறார். இவர்களில் 11 வயதில் இருந்தே அந்த்ரா ராஜசேகர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் வெற்றிபெற்று மாநில அளவில் மெடல்களை வாங்கி இருக்கிறார். மூன்று தலைமுறைகள் கடந்தும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இக்குடும்பம் ஆர்வம் காட்டி வருவது ஆச்சர்யமளிக்கிறது.

துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை

துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)நடிகை ஸ்ரீதேவி மெழுகுச் சிலை, ஸ்ரீதேவி போனிகபூர், துசாட்ஸ் அருங்காட்சியகம் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை

எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி.

பின்னர் ரஜினி, கமல், சிரஞ்சீவி உள்ளிட்ட நாயகர்களுடன் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமானார்.

பின்னர் ஹிந்தி திரையுலகில் நுழைந்து அங்கும் தன் வெற்றி கொடியை நாட்டி, தயாரிப்பாளர் போனீகபூரை மணந்து செட்டிலானார்.

பின்னர் அஜித்துடன் இங்கிலீஷ் விங்கீலீஷ், விஜய்யுடன் புலி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதன் பின்னர் கடந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக துபாயில் மரணமடைந்தார் ஸ்ரீதேவி.

அவரின் நினைவைப் போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலையை வடிவமைத்துள்ளது.

அந்த சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.

தல 60 படத்தை முடித்துவிட்டு மீண்டும் ரீமேக் படத்தில் அஜித்

தல 60 படத்தை முடித்துவிட்டு மீண்டும் ரீமேக் படத்தில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படம் கடந்த மாதம் வெளியானது. இது ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்.

இப்படத்தில் பெண் உரிமைக்காக போராடும் வக்கீல் வேடத்தில் நடித்திருந்தார் அஜித். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனையடுத்து அஜித் நடிக்கவுள்ள தல 60 படத்தையும் வினோத்தே இயக்க போனிகபூர் தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார் அஜித்.

இந்த நிலையில் அஜித்தின் தல 61 படத்தின் தகவல்களும் கிடைத்துள்ளன.

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் அஜித்.

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய படம் ஆர்டிகள்- 15 படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ரீமேக் உரிமையும் போனி கபூரே வாங்கியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

ரஜினி ஸ்டைலில் பால்காரனை பெருமைப்படுத்தும் ‘பெருநாளி’

ரஜினி ஸ்டைலில் பால்காரனை பெருமைப்படுத்தும் ‘பெருநாளி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor cum director Citizen Maniசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1992ஆம் ஆண்டு ஜீன் 27ஆம் தேதி வெளியான படம் அண்ணாமலை.

இந்த படத்திலிருந்து தான் ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு போடப்பட்டது. பால்காரனின் (மாடுகள்) பெருமை மற்றும் நட்பின் வலிமை குறித்து பேசிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது அதுபோல் பால்காரனின் பெருமையை பேசும் ஒரு படம் தற்போது உருவாகியுள்ளது.

அந்த படத்தின் பெயர் பெருநாளி. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த சிட்டிசன் மணி என்பவர் இயக்கியுள்ளார்.

ரோஷினி கிரியேஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மார்கிரேட் அந்தோணி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக ஜெயம் என்ற புதுமுகம் நடிக்க, ஹீரோயினாக மதுனிக்கா நடிக்கிறார். ஹீரோவின் நண்பராக கிரேன் மனோகர் முக்கிய வேடத்தில் நடிக்க, இவர்களுடன் சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

நாயகன் ஜெயம் படத்தில் பால்காரன் வேடத்தில் நடித்துள்ளார்.

தஷி இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பவர் சிவா நடனம் அமைக்க, தீப்பொறி நித்யா சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

படத்தில் 6 பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றிய பாடலாகும்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிசர் மனோகர், கூல் சுரேஷ், இசையமைப்பாளர் தஷி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Annamalai style movie Perunali audio launch news updates

கலைஞர்-ஜெ வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்.. : கராத்தே தியாகராஜன்

கலைஞர்-ஜெ வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்.. : கராத்தே தியாகராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karate R Thiagarajan talks about Rajinis political entryசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து 2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.

இதற்காக தன் ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, நிர்வாகிகளை பதவியில் அமர்த்தியுள்ளார்.
மேலும் மாவட்டம் தோறும் கட்சியில் உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.

விரைவில் கட்சி பற்றிய அறிவிப்பு வரும் என தமிழகமே எதிர்பார்த்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் அவர்கள் ரஜினி கட்சி பற்றி பேசியுள்ளார்.

அப்போது வருகிற. 2020 மார்ச் மாதத்திற்குள் ரஜினி கட்சியை ஆரம்பிப்பார்.

தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியை பற்றி சீமான் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளார் கராத்தே தியாகராஜன்.

Karate R Thiagarajan talks about Rajinis political entry

More Articles
Follows