தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட புரியாத புதிர் படத்தின் காலை காட்சிகள் ரத்தாகி விட்டது.திரைப்பட தொழிலாளர்களுக்கான சம்பள பாக்கி 22.13 லட்சம் ரூபாய் பாக்கி தயாரிப்பாளர் வைத்துள்ளதால் படத்துக்கு தடை விதிக்க கோரி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வழக்கு தொடுத்தது.
எனவே, அந்த தொகையை கொடுக்கும் வரை படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
ஆனாலும் திட்டமிட்டபடி படம் இன்று ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார் தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.
இந்த பிரச்சினையில் இழுபறி நிலையே நீடித்து வருகிறது.
எனவே எங்கும் இந்தப்படம் திரையிடப்படவில்லை.
எனவே விஜய்சேதுபதி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.