‘பைரவா’ தமிழ் சொல் இல்லை; வரிவிலக்கு மறுப்பால் கோர்ட்டில் வழக்கு

‘பைரவா’ தமிழ் சொல் இல்லை; வரிவிலக்கு மறுப்பால் கோர்ட்டில் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Keerthy sureshபரதன் இயக்கத்தில் விஜய் நடித்து உருவான படம் பைரவா.

இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியானது.

இப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்திருந்தது. ஆனால் புதுச்சேரி அரசு வரிவிலக்கு தர மறுத்துவிட்டது.

‘பைரவா’ என்கிற சொல் தமிழ் வார்த்தை இல்லை என்பதால், வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டதாக புதுவை அரசின் பொழுது போக்குதுறை ஆணையகம் தெரிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு….

வரிச்சலுகை மறுக்கப்பட்டதால், புதுவை மாநில விநியோகஸ்தரான ஜி.ஆர்.துரைராஜ், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

எனவே, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி புதுவை மாநில உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பொழுது போக்குத் துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார்.

Puducherry govt refuse to give tax exemption to Bairavaa

“ரஜினி-விஜய் படங்களை விற்று தருகிறேன்…” ஞானவேல் ராஜா

“ரஜினி-விஜய் படங்களை விற்று தருகிறேன்…” ஞானவேல் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gnanavel rajaதயாரிப்பாளர் சங்கத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இதில் விஷால் அணி சார்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா போட்டியிடுகிறார்.

இது தொடர்பாக அவர் பேசும்போது தயாரிப்பாளர் தாணுவை கடுமையாக சாடினார்.

தாணு தயாரித்த ரஜினியின் கபாலி படம் ரிலீஸான அன்றே இணையத்தில் லைவ் ஆக வெளியானது.

அதை கண்டிக்க கூட இல்லை. ஆதங்கத்தையும் தெரிவிக்கவில்லை.

ஒரு தயாரிப்பாளராக எந்த நடவடிக்கையும் அவர் படத்திற்கே எடுக்கவில்லை.

இன்றுவரை கபாலி மற்றும் தெறி படத்தின் சாட்டிலைட் உரிமையை அவர் விற்கவில்லை.

நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் பதவியேற்ற உடன் விற்றுத் தருகிறேன்” என்று பேசினார்.

‘கபாலி யோகி’யை சரோஜா பிரேக் செய்வாள்… தன்ஷிகா

‘கபாலி யோகி’யை சரோஜா பிரேக் செய்வாள்… தன்ஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Dhansikaமீரா கதிரவன் தயாரித்து இயக்கியுள்ள விழித்திரு படம் மார்ச் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதில் விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா, வெங்கட்பிரபு நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகா பேசும்போது…

இப்படத்தில் நான் சரோஜா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன்.

இது கபாலி படத்தில் நான் நடித்த யோகி கேரக்டரை உடைக்கும்.

அந்தளவு இந்த கேரக்டர் பவர்புல். இயக்குனர் மீரா கதிரவனுக்கு நன்றி.” என்று பேசினார்

பட புரோமோஷனுக்கு அஜித் வரவேண்டும் – மீரா கதிரவன்

பட புரோமோஷனுக்கு அஜித் வரவேண்டும் – மீரா கதிரவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and meera kathiravanஅவள் பெயர் தமிழரசி என்ற தரமான படத்தை இயக்கியவர் மீரா கதிரவன்.

இவர் தயாரித்து இயக்கியுள்ள விழித்திரு படம் மார்ச் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதில் விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா, வெங்கட்பிரபு நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் பேசும்போது…

இந்த நிகழ்ச்சிக்கு விதார்த் வரவில்லை. முன்பு ஒருமுறை அஜித்தின் வீரம் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.

நான் இப்போது தயாரிப்பாளர் ஆகிவிட்டதால் தயாரிப்பாளரின் வலி அதிகமாக தெரிகிறது.

அஜித்துக்கு இமேஜ் இருக்கலாம். ஆனால் அவரும் படத்தின் ப்ரோமோஷனுக்கு வரவேண்டும்.

ஒரு படம் 3 நாட்கள் மட்டுமே ஓடுகிறது. எனவே நடிகர்கள் பட விளம்பரத்திற்கு வரவேண்டும். என்று பேசினார்

ரஜினி இடத்துக்கு ஆசைப்படுபவர்களுக்கு பாட்ஷா எச்சரிக்கை

ரஜினி இடத்துக்கு ஆசைப்படுபவர்களுக்கு பாட்ஷா எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baashhaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 160 படங்களில் நடித்துவிட்டார்.

அவரின் 40 ஆண்டு கால சினிமா கேரியரில் எவராலும் மறக்க முடியாத படம் ‘பாட்ஷா’.

அதுபோன்ற படத்தை தன்னால் இனி தரமுடியாது என்று ரஜினியே அடிக்கடி கூறிவருகிறார்.

இப்படம் 22 வருடங்களுக்கு பிறகு தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஓரிரு தினங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது.

இதே படம் முதல் முறை வெளியான சமயத்தில் எப்படி ஒரு பரபரப்பு கொண்டாட்டம் இருந்தத்தோ, அதுபோல் தற்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ஓப்பனிங் வசூலில் மற்ற புதிய படங்களுக்கு சவால் விட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் 110 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் ரூ.40,16,000 வசூல் செய்துள்ளதாம். இது கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகமே பார்த்த ஒரு திரைப்படம் பாட்ஷா.

22 வருடங்களுக்கு பின்பு வந்தும், இப்படி வசூல் வேட்டை செய்து வருவதால், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுபவர்களுக்கு இது பாட்ஷா தரும் எச்சரிக்கை பாடம் என கோலிவுட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘விஷாலே.. உன் விஷமத்தனத்தை நிறுத்து…’ தாணு ஆவேசம்

‘விஷாலே.. உன் விஷமத்தனத்தை நிறுத்து…’ தாணு ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal Producer Thanuதயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தற்போது தாணு இருக்கிறார்.

வருகிற தேர்தலில் அப்பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார்.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்புகளில் தயாரிப்பாளர்கள் குறித்து தரக்குறைவாக விஷால் பேசியதாகக் கூறி, இன்று நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டனர் தயாரிப்பாளர்கள்.

கலைப்புலி தாணு, ராதாகிருஷ்ணன், டி சிவா, ஜேஎஸ்கே, சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது விஷாலின் நடவடிக்கைகள், பேச்சுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த முன்னணி தயாரிப்பாளரும், இப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான கலைப்புலி தாணு, விஷால் இத்துடன் தனது விஷமத்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

அவர் பேசுகையில், ‘தம்பி விஷால்…. தயாரிப்பாளர்களை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்… அவர்களை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது?

1200 உறுப்பினர்களுடன் மிக மரியாதைக்குரிய அமைப்பாக உள்ள தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சிக்க நீ யார்? என்ன தகுதி இருக்கிறது?

உன்னால் உன் தந்தை தயாரிப்பாளர் ஜிகே ரெட்டிக்கே அவமானம். உன்னால் எத்தனை தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள்… நினைத்துப் பார்த்ததுண்டா?

யாரிடமும் கை நீட்டி நிற்காத செல்லமே தயாரிப்பாளர் உன்னால் பட்ட கஷ்டங்கள் நினைவில்லையா? மத கஜ ராஜா என்ற படத்தை எடுத்துவிட்டு நடுத் தெருவுக்கு வந்துவிட்ட ஜெமினி நிறுவனத்தை நினைத்துப் பார்…

இளையதளபதி என விஜய்க்குப் பட்டம் சூட்டினால், நீ புரட்சித் தளபதி என்று போட்டுக் கொள்கிறாய்… அவர் புலி என்று படமெடுத்தால், நீ பாயும் புலி என்று படமெடுக்கிறாய்.. அவ்வளவு விஷமத்தனம்… கெட்டம் எண்ணம்.

கண்ணியமான மனிதர் நாசர் அவர்களே… இந்த விஷால் மீது நடவடிக்கை எடுங்கள். அல்லது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இந்தத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்படும் நாளன்று தெரியும், இந்த விஷாலின் லட்சணம் என்ன என்பது.

அவருக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற நப்பாசை. மக்கள் உங்களை ஓட ஓட விரட்டியடிப்பாரகள்,” என்றார்.

பிரகாஷ் ராஜ் பற்றிக் கூறுகையில், “தயாரிப்பாளர்களைப் பற்றிப் பேசும் தகுதியே இல்லாதவர் பிரகாஷ்ராஜ். இவரால் எத்தனை தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என ஒரு லிஸ்டே போடலாம்.

தெலுங்கில் எத்தனை முறை இவருக்கு தடைப் போட்டிருக்கிறார்கள்? தமிழ் பேசிவிட்டால், தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை கண்டபடி பேச உரிமை வந்துவிடுமா? இவருக்கு பிரச்சினை என்று வந்தபோது அதைத் தீர்க்க முன்வந்தது இதே தயாரிப்பாளர் சங்கம்தான்” என்றார்.

More Articles
Follows