விதார்த் நடிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம் ஆரம்பம்

விதார்த் நடிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘யதார்த்த நாயகன்’ நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார்.

இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார்.

பின்னணியிசைக்கும் முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்காக ‘வலிமை’ படப் புகழ் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார்.

‘டான்’ பட புகழ் நாகூரான் ராமச்சந்திரன் பட தொகுப்பு பணிகளை கையாள, பிரமிப்பை உண்டாக்கும் சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைக்கிறார்.

ஒப்பனைக்காக தேசிய விருதுப்பெற்ற மூத்த கலைஞர் ‘பட்டணம்’ ரஷீத் இந்த படத்தில் சிறப்பு ஒப்பனைக்காக பிரத்யேகமாக பணியாற்றுகிறார்.

படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் வில்லன் நடிகருக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் இதில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய அளவிலான ( PAN INDIA ) திரைப்படங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரிடப்படாத முதல் படைப்பின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பட குழுவினருடன் நந்தகுமார் ஐ ஏ எஸ், இயக்குநர்கள் கார்த்திக் சுந்தர், சற்குணம், ராம்நாத் பழனிக்குமார் ‘டோரா’ தாஸ் ராமசாமி, ‘நெருப்பு டா’ அசோக்குமார், ‘மஞ்சப்பை’ என். ராகவன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இவ்விழாவில் www.greenativefilms.com என்ற இந்த குழுமத்தின் திரைப்படப்பிரிவிற்கென பிரத்யேக இணையத்தள சேவையும் தொடங்கப்பட்டது.

தமிழில் தயாராகும் காவல்துறையினரின் புலனாய்வு விசாரணை பாணியிலான சைக்கோ திரில்லர் திரைப்படம் இது என்பதால், தொடக்க விழாவின்போதே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Psycho thriller movie starring Vidharth begins

மாயம் செய்யும் மணிவண்ணா.. எதிர்பார்த்ததை விட வெற்றி.; தங்க சங்கிலி பரிசளித்த சிபிராஜ்

மாயம் செய்யும் மணிவண்ணா.. எதிர்பார்த்ததை விட வெற்றி.; தங்க சங்கிலி பரிசளித்த சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘மாயோன்’ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றிருக்கிறது.

இதனை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதன் போது படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு, படத்தின் நாயகனான சிபிராஜ் தங்க சங்கிலியொன்றை பரிசளித்தார்.

தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான திரைப்படம் ‘மாயோன்’.

எளிதில் யூகிக்க இயலாத திரைக்கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பரிபூரண ஒத்துழைப்பு, ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் வகையில் வித்தியாசமான விளம்பர உத்தி, திரையலக பிரபலங்களின் பாரட்டு.. என பலவித அம்சங்களால் ‘மாயோன்’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. தமிழகம் முழுவதும் ‘மாயோன்’ திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

மாயோன் விமர்சனம் 3.25/5.; மறையாத மர்மங்கள்

இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கின்றனர்.

எதிர்பார்த்ததை விட கூடுதல் வெற்றி, ‘மாயோன்’ திரைப்படத்திற்கு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர், பட குழுவினரை அலுவலகத்திற்கு வரவழைத்து, வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடினார்.

தமிழில் ‘மாயோன்’ திரைப்படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்ததால், ஜூலை ஏழாம் தேதியன்று தெலுங்கில் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

இதற்காக ஜுலை 1ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் நடைபெறும் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள்.

இவர்களுடன் ‘கட்டப்பா’ சத்யராஜ் உள்ளிட்ட ‘மாயோன்’ படக்குழுவினரும் கலந்துகொண்டு, தெலுங்கு ரசிகர்களுக்கு ‘மாயம் செய்யும் மணிவண்ணா..’வை அறிமுகப்படுத்துகிறார்கள்.

Sibiraj gifted gold chain to Maayon team

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடியன் வெங்கல் ராவ் ஹெல்த் அப்டேட்

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடியன் வெங்கல் ராவ் ஹெல்த் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் வெங்கல் ராவ்.

இவர் ஸ்டண்ட் நடிகர் என்றாலும் பெரும்பாலும் காமெடியான மொட்டை வேடங்களில் தோன்றுவார்

இவர் ஆந்திராவில் விஜயவாடாவுக்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவர்.

இவர் சினிமாவுக்குள் ஒரு ஃபைட்டராக நுழைந்தவர். ஆனால் சண்டைக் காட்சியின்போது நடந்த விபத்தால் காமெடி நடிகராக மாற்றிக்கொண்டார்.

வாசு இயக்கி பிரபு நடித்த ‘கட்டுமரக்காரன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

நடிகர் வடிவேலு சினிமாவிலிருந்து விலகியிருந்த காலத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.

தற்போது வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் வெங்கல் ராவ்.

இந்த நிலையில், கல்லீரல் கோளாறு காரணமாக ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த காமெடி நடிகர் வெஙகல் ராவ் நலமுடன் வீடு திரும்பினார்.

Health Update of Comedian Vengal Rao admitted to Government Hospital

கமல் ரஜினி விஜய் படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்தவரும் ஜாகுவார் தங்கத்தின் மாமனாருமான டி.எஸ்.ராஜா காலமானார்

கமல் ரஜினி விஜய் படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்தவரும் ஜாகுவார் தங்கத்தின் மாமனாருமான டி.எஸ்.ராஜா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் , சண்டைக் கலைஞரும், எம்.ஜி.ஆர். நகர் தி.மு.கவின் முன்னாள் வட்ட செயலாளருமான டி. எஸ்.ராஜா (வயது 88) உடல்நல குறைவால் இன்று காலை காலமானார்.

டி.எஸ். ராஜா பற்றிய குறிப்பு :- இவர்,காலம் சென்ற எம்.ஜி.ஆர்.அவர்களிடம் நீண்ட காலம் உடனிருந்தவர்.

கமல் , ரஜினி, விஜய், படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்தவர்.

என்.டி.ஆர். அமிதாப், ஜித்தேந்திரா, தர்மேந்திரா, பிரான். ரஞ்சித் ஆகியோருக்கு டூப் கலைஞராகவும் நடித்தவர்.

கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் அன்பு பாராட்டியவர்.

சென்னையில் எம்.ஜி.ஆர்.நகரின் 113வது வட்ட தி.மு.க.செயலாளராகவும் இருந்தவர்.

ஸ்டண்ட் யூனியன் துவக்குவதற்கு முனைப்பாக செயல்பட்டவர்.

ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் யூனியன் துவக்கிய முன்னோடிகளில் இவர் முதன்மையாக செயல்பட்டவர்.

அதிக திரைப்படங்களில் நடித்தவர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 32 வருடங்கள் செயற்குழு உறுப்பினராக பணியாற்றியவர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் ( பெப்சி) செயலாளராகவும் இருந்தவர்.

நடிகரும், தயாரிப்பாளரும், கில்டு தலைவருமான ஜாகுவார் தங்கத்தின் மாமனரான இவரது இறுதி சடங்கு இன்று (30.6.2022 வியாழன்) மாலை 4 மணிக்கு
எண்:- 67,
அழகிரி தெரு
எம்.ஜி.ஆர்.நகர்
சென்னை 600078ல் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

பின்னர்
நெசப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 32 ஆண்டுகள் செயற்குழு உறுப்பினராக பணியாற்றிய சங்க முன்னோடியும், எம்.ஜி.ஆர். நகர் தி. மு.க. முன்னாள் வட்ட செயலாளரும், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் அவர்களின் மாமனாருமான மூத்த நடிகர், சண்டைக் கலைஞர் டி.எஸ்.ராஜா அவர்கள் இன்று காலை காலமானார்.

அவரது உடலுக்கு திமுக தலைமை நிலைய செயலாளரும் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவருமான பூச்சி எஸ்.முருகன் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவரும் திமுக செயற்குழு உறுப்பினருமான க. தனசேகரன் உடன் இருந்தார்.

DS Raja father-in-law of Jaguar Thangam who played stunt actor in Kamal Rajini Vijay films has passed away

‘ஆரிராரோ…’ பாடல் பாடிய யேசுதாஸையே அழவைத்த ‘ஜோதி’ பட இசையமைப்பாளர்

‘ஆரிராரோ…’ பாடல் பாடிய யேசுதாஸையே அழவைத்த ‘ஜோதி’ பட இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“ஜோதி” திரைப்படத்தின் “ஆரிராரோ” என்ற இரண்டாம் பாடல் வெளியீட்டின் சிறப்பு நிகழ்ச்சிக்காக Radio City FMல் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

அப்போது அங்கு வந்திருந்த காவல்துறை DSP அய்யா, காவல் துறைக்கே சவாலான கடலூரில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவமாகிய குழந்தை திருட்டை வைத்து, அதை முழுநீள திரைப்படமாக எடுத்ததிற்கு படக்குழுவினரை மிகவும் பாராட்டி மேலும் இதுபோன்ற உண்மை சம்பவங்களை சமூக விழிப்புணர்வுக்காக மேலும் பலபடங்கள் எடுக்க வேண்டும் என்று ஊக்குவித்தார்.

நிகழ்ச்சியின்போது இயக்குனர் “AV கிருஷ்ண பரமாத்மா” கூறியதாவது…

“சென்ற வாரம் “போவதெங்கே” என்ற காதல் பாடல் வெளியானது.

அதை தொடர்ந்து “ஆரிராரோ” என்ற அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை சொல்லும் விதமாக அமைந்துள்ள இரண்டாம் பாடலை இப்போது வெளியிடுகிறோம்.

இப்பாடல், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையாலும் கார்த்திக் நேத்தா வரிகளாலும், பல்ராம் சாரோட குரலாலும் மிகவும் அழகாக வந்திருக்கிறது.

குழந்தைகளை பெற்ற அப்பாக்களும், அப்பாக்களை போற்றும் குழந்தைகளுக்கும் இப்பாடல் திரும்ப திரும்ப கேட்க கூடியதாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூக பிரச்சனைக்கு தீர்வாகவும், ரொம்ப எமோஷனலாகவும், திரில்லராகவும் வந்திருக்கிறது.

முன்காண் காட்சியை பார்த்தவர்கள் அனைவரும் கண்கலங்கி இப்படியொரு படம் வருவது பெரியவிசியம் என பாராட்டினர். இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கு நிச்சயம் வெற்றி பெரும்” என கூறினார்.

இசையமைப்பாளர் “ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்” கூறியதாவது…

“இதுவரைக்கும் நான் மியூசிக் பண்ண படங்கள் எல்லாத்துக்கும் பின்னணி இசை மட்டுந்தான் பண்ணிருக்கேன். முதன்முறையாக ஜோதி படத்துலதான் பின்னணி இசையோடு சேர்த்து முழு ஆல்பம் பண்ணிருக்கேன்.

முதலில் பாடலே இல்லாமல்தான் படம் என்னிடம் வந்தது. படத்தை பார்த்தபின் இயக்குனர் மிகவும் உணர்வுபூர்வமாக படத்தை எடுத்திருக்கிறார் என்று எண்ணினேன். அந்த உணர்வை சிலவற்றை பாடல் மூலம் கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து சொன்னேன்.

தயாரிப்பாளரும் செலவை பொருட்படுத்தாமல் ஒத்துக்கிட்டார். அனைத்து பாடலுக்கும் லைவ் எடுத்தோம், கிளைமேக்ஸ்ல வரும் பாடலை யேசுதாஸ்சார் பாடியிருக்கார்.

பாடும்போது அவருக்கே கண்கலங்கிவிட்டது, பாடல் ரொம்ப நல்லா இருக்கு, நீண்ட நாள் கழிச்சி ஒரு நல்ல பாடல் பாடியிருக்கேன்னு சொன்னாரு. அவர் அப்படி சொன்னது எங்களுக்கு வரபிரசாதமாக அமைஞ்சிருக்கு.

அந்த பாடலுக்கு ட்யூன் போடும்போது எனக்கே மனசு ஒருமாதிரி ஆயிடுச்சி.அதன் தாக்கம் அப்படியே இருந்தது, அதுல இருந்து மீண்டு வரதுக்கே ரொம்ப நாளாச்சி” என கூறினார்.

நடிகர் “வெற்றி” கூறியதாவது….

“இந்தப் படம் 8 தோட்டாக்கள் படத்தின் நீட்சி என்றே சொல்லலாம். காரணம், அந்த படத்துல என் பொருளான துப்பாக்கியை தொலைத்துவிட்டு அதை கண்டுபிடிக்க தேடி அலைவேன்.

இந்த படத்துல ஒரு கர்ப்பிணி பெண்ணிடமிருந்து திருடப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க தேடி அலைவேன்.

இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் கேட்டவுடன் ஸ்கிரிப்ட் நல்லாருக்கு, ஆனா புது teamமா இருக்கு எப்படி பண்ணபோறாங்கனு நெனைச்சேன், சூட்டிங் ஸ்பாட்டுக்குபோய் அவுங்க மேக்கிங் ஸ்டைலை பார்த்ததும் மிரண்டுவிட்டேன்.

ரொம்ப experience டீம்ன்னு தெரிஞ்சிது. டீம் மேல முழு நம்பிக்கை வந்துடுச்சி. முப்பது நாள் இரவு பகலா ஒரே SCHEDULE லில் எடுத்து முடித்துவிட்டனர். அதுலாம் டீமோட ஆசாத்தியமான விசியம். தயாரிப்பாளர் அனுப்பிய ஆடியன்ஸ் review வீடியோவை பார்த்தேன் .

நா நெனைச்ச மாதிரியே படம் நல்லா வந்திருக்கு. இந்த படம் பட்டித்தொட்டியெங்கும் சென்று எனக்கு தாய்மார்களின் அன்பை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்.” என கூறினார்.

பாடலாசிரியர் “கார்த்தி நேத்தா” கூறியதாவது…

“முதன் முதலில் இயக்குனர் என்னிடம் கதையை சொன்னவுடனே நான் மிரண்டுவிட்டேன். அவர் சொன்ன அதே உணர்வில் எனக்கு மெட்டுகளும் வந்ததால் பத்தே நிமிடத்தில் பாடலை எழுதி முடித்துவிட்டேன்.

இந்த படத்துல மூனு பாடலை எழுதியிருக்கிறேன். இந்த “ஆரிராரோ” பாடலில் வரும் அப்பா கதாப்பாத்திரம் போன்றுதான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

இந்த பாடலை எழுத கொடுத்த நேரத்தில் எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதமாகி இருந்தது. அந்த நேரத்தில் என் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இப்பாட்டின் சூழல் இருந்ததால் என் குழந்தைக்கு எழுதுவதாகவே நினைத்து இப்பாடலை எழுதினேன். மிகவும் அழகாகவும், ஆழமான வரிகளாகவும் வந்துள்ளது.” என கூறினார்.

தயாரிப்பாளர் “SPராஜாசேதுபதி” கூறியதாவது…

“எனது சொந்த ஊரான கடலூரில் நடந்த உண்மை சம்பவந்தான் இந்த படத்தின் கரு. அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தையும், இதன் பின்னணியும் ஆராயும்போது மனசு ரொம்ப பாதிச்சிது. திரைப்படக் கல்லூரியில் படித்த AV கிருஷ்ண பரமாத்மா எமோஷனல் சார்ந்த ஸ்கிரிப்டை சிறப்பாக handle பண்ணுவார்.

அவரு இயக்கிய குறும்படத்தில் அதை பாத்திருக்கேன். அதனால் இந்த சம்பவத்தை படமாக்க இவர் சரியாக என்று நம்பினேன். DSP சாந்தி அவர்களை சந்தித்து இதை சார்ந்த தரவுகளை ஆராய்ந்து விறுவிறுவென வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் என்ன விறுவிறுப்பு இருந்ததோ அதே விறுவிறுப்பை கமர்ஷியலாக முழுநீள திரைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்காண் காட்சியில் படத்தை பார்த்த பார்வையாளர்களுக்கு இந்த சம்பவத்தின் தாக்கம் அப்படியே சென்றடைந்திருக்கிறது. இதுபோன்ற படங்கள் அதிகமாக வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

நான் படத்தொகுப்பாளராக பணியாற்றிய முதல் படம் சதுரங்க வேட்டை படத்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் மேற்கோள் காட்டி ஒரு வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதனால் இதுபோன்று சமூக பிரச்சனை சார்ந்த படங்கள்தான் எடுக்க வேண்டும் என தீர்க்கமாக இருந்த எனக்கு பார்வையாளர்கள் இப்படி சொன்னது எனக்கு மனநிறைவளிக்கிறது.

‘ஜோதி” படம் வரும் ஜூலையில் வெளியாக இருக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்து திரையரங்குகளில் பார்த்து எங்களுக்கு பேராதரவு கொடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

2nd Single Aariraaro https://youtu.be/f5dB4Lubwuc

ஆரிராரோ

The “Jothi” team attended a special event on Radio City FM for the second song “Ariro” release

திரைப்பட விநியோகத்தில் வியக்க வைக்கும் இளம் விநியோகஸ்தர் சாய்கார்த்திக்

திரைப்பட விநியோகத்தில் வியக்க வைக்கும் இளம் விநியோகஸ்தர் சாய்கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தெலுங்கு இயக்குனர் நட்டிகுமாரிடம் திரைப்பட வணிகத் திறனைக் கற்றவர் சாய் கார்த்திக் கவுட்.

தன் இளம் வயதிலேயே பல படங்களை விநியோகித்து, தற்போது டோலிவுட்டின் இளைய விநியோகஸ்தரானார்.

இண்டஸ்ட்ரியில் அனைவராலும் கார்த்திக் ஜாடி என்று அன்புடன் அழைக்கப்படும் சாய்கார்த்திக், படிப்படியாக வளர்ந்து சமீபகாலமாக தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.

பிரகாசம் மாவட்ட சாய் கார்த்திக்கின் மகனான சாய் கார்த்திக், 1993 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி பிரகாசம் மாவட்டம் கிடலூரில் ஜே.வி.பிரசாத் கவுட்-பீவி சுப்பம்மாவுக்கு மகனாகப் பிறந்தார்.

பிரகாசம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சாய் கார்த்திக், கர்னூல் மாவட்டத்தில் தனது கல்வியை முடித்ததே பெரிய காரியம்.

ஸ்ரீசைலத்தில் உள்ள ஜிபிஎச்எஸ் பள்ளியில் 10ம் வகுப்பையும், கர்னூலில் உள்ள வித்யா விகாஸ் ஜூனியர் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் முடித்தார்.

அதன் பின்னர் உயர்கல்விக்காக ஹைதராபாத் சென்று பாக்யாநகரில் பிஎன்ஏ படிப்பை முடித்துள்ளார்.

நட்டிகுமாரிடம் பயிற்சி பெற்றதால், திரைப்படங்களில் ஆர்வம் கொண்டு பிரபல இயக்குனர்-தயாரிப்பாளரான நத்திகுமார் வடாவின் சீடரானார்.

ஏறக்குறைய 8 ஆண்டுகள் நட்டிகுமாருடன் பணியாற்றிய சாய்கார்த்திக் அவரிடம் பல திறமைகளை கற்றுக் கொண்டிருக்கிறார்.

விநியோகத் துறையில் எப்படி வெற்றி பெறுவது?, எந்தச் சிரமங்களைச் சமாளிப்பது? என்பது குறித்து தனது வழிகாட்டியான நட்டி குமாரிடம் கற்றுக்கொண்டதாக சாய்கார்த்திக் தெரிவித்துள்ளார்.

விநியோகஸ்தராக இருந்து பல படங்களை தயாரித்து இளைய விநியோகஸ்தராக நற்பெயர் பெற்றதற்கு நட்டிகுமார் தான் காரணம் எனவும் சாய்கார்த்திக் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

குணாஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தலைவராக .. சாய் கார்த்திக் முதல் நாடிஸ் என்டர்டெயின்மென்ட்ஸ், க்விடிஸ் என்டர்டெயின்மென்ட்ஸ், விசாகா டாக்கீஸ், எல்கா மீடியா அட்வர்டைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், விநியோகஸ்தராக முழு அனுபவத்தைப் பெற்று தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்.

குணாஸ் தனது முத்தம் என்ற பெயரில் என்டர்டெயின்மென்ட்டை நிறுவினார்.

அனைத்து தென் மொழிகளிலும் விநியோகம் சாய்கார்த்திக் செய்கிறார்.

தயாரிப்பாளராக நட்டிகுமார் இயக்கத்தில் விநியோகஸ்தராக பல படங்களை விநியோகம் செய்த சாய்கார்த்திக் சமீபத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார்.

பத்மஜா ஃபிலிம் ஃபேக்டரி புரொடக்ஷன்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் வீவி ருஷிகாவை வைத்து பல படங்களை செய்து வருகிறார்.

ருஷிகா தனக்கு ஒரு சகோதரியாக நிறைய உதவுவதாகவும், இருவரும் தொடர்ச்சியாக பல படங்களில் இணைந்து நடித்து வருவதாகவும் சாய்கார்த்திக் கூறினார்.

ருஷிகா இயக்கிய இக்ஷூவை சாய்கார்த்திக் இணைத் தயாரிப்பாளராகவும் மற்றும் கைத்தறிகளின் வாழ்க்கையைப் பற்றிய விஜய்குமார் படுகுவின் தமசோமா ஜோதிர்கமயா படத்தைத் தயாரித்து விநியோகிக்கிறார்.

#SaiKarthik #Sai #Karthik #சாய்_கார்த்திக் #சாய்கார்த்திக்

@jadisaikarthik @saikarthikjadi
Instagram: @saikarthikjadi
Twitter : @jadisaikarthik

Sai Karthik Sai Karthik சாய் கார்த்திக் சாய்கார்த்திக்

Saikarthik is an amazing young distributor in film distribution

More Articles
Follows