தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எவருமே எதிர்ப்பார்த்திடாத வகையில் கொரோனா வைரஸ் 2வது அலை மிக கொடூரமாகி வருகிறது.
இதனால் பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது உலகம்.
இந்தியாவிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
ஊரில் யாராவது இறந்தால் அது நமக்கு வெறும் செய்தி தான். ஆனால் நம் உறவினர் / நண்பர் இறந்தால்தான் நமக்கு அது மரணச் செய்தியாகும்.
இப்படி நினைக்கும் சிலரே அவ்வப்போது தங்கள் ஹீரோக்களின் சினிமா அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.
பிரபலங்களை கண்ட இடங்களில் எல்லாம் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்டது ஊரறிந்த விஷயம்தான்.
இந்த நிலையில் சிம்பு ரசிகர்களும் ‘மாநாடு’ பட அப்டேட் & சிங்கிள் ரிலீஸ் குறித்து கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
இதனையடுத்து மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் கூறியதாவது…
“பேரிடர் காலத்தில் தினமும் ஏதாவது இழப்புச் செய்தி காதில் விழுந்துகொண்டேயிருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை.
மருத்துவமனை வாசலிலும்.. கொரானா பயத்திலும் இருக்கும் இச்சூழல் இரக்கமற்று #மாநாடு படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும். 1/2
லாக்டௌன் முடியட்டும். கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். நண்பர்களே அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள். நன்றி @SilambarasanTR_ @vp_offl @Richardmnathan @johnmediamanagr #Maanaadu
இவ்வாறு கூறியுள்ளார்.
இனிமேலாவது கொரோனா லாக்டவுன் சூழ்நிலையை ரசிகர்கள் புரிந்துக் கொள்வார்கள் என நம்புவோம்..
Producer Suresh Kamatchi about Maanaadu update