தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கிய மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
இந்த படத்தில் தனக்கு சம்பளம் ரூ. 15 கோடி பேசப்பட்டதாகவும் ஆனால் இன்னும் 4 கோடி பாக்கி உள்ளதாகவும் அதனை பெற்றுத் தர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தற்போது இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில்…
‘ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக 1 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அப்போது 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் 2013 ஆண்டில் செய்யப்பட்டது. அப்போது படம் எடுக்க முடியாத சூழ்நிலையால் மீண்டும் 2018-ம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டது.
சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.
ஆனால், ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அப்படத்தை இயக்குநர் ராஜேஷ்தான் இயக்க வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தினார்.
இதனால்தான் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்தால் எனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40 லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன், இரக்கமின்றி எனக்கு அழுத்தம் கொடுத்தார்.
‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், விநியோகஸ்தர்கள் பிரச்சினையில் சிக்க வைத்து விட வேண்டாம் என அப்போது சிவகார்த்திகேயனை தெரிவித்தார்.
ஆனால் தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்னர், உண்மைத் தகவல்களை மறைத்துள்ளார்.
எனவே அந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஞானவேல்ராஜா தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் இந்த பதில் மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
Producer Gnanavelraja accuses Sivakarthikeyan of suppressing facts