எட்டு வருடங்களில் மூன்றே படம் இயக்கி இந்தியளவில் பிரகாசிக்கும் பிரஷாந்த் நீல்

எட்டு வருடங்களில் மூன்றே படம் இயக்கி இந்தியளவில் பிரகாசிக்கும் பிரஷாந்த் நீல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவின் டாப் டென் இயக்குநர்களில் தவிர்க்க முடியாத பெயர் பிரஷாந்த் நீல்.

இந்த ஒரே காரணத்துக்காக இன்றைய அவரது 41வது பிறந்த நாளை சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்து மழைகளால் பொழிந்துகொண்டிருக்கின்றனர்.

1980 ஜூன் 4ம் தேதி பிறந்த பிரஷாந்த் நீல் இன்று எட்டிப் பிடித்திருக்கும் வெறுமனே மூன்றே படங்களில் நிகழ்ந்தது என்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும்.

அவரது முதல் படமான ‘உக்கிரம்’ வெளியான ஆண்டு 2014. அதுவே மாபெரும் ஹிட் அடித்த நிலையில்தான் அவரை இந்தியா முழுக்க பேச வைத்த ‘கேஜிஎஃப்’ படத்தை 2018ல் இயக்கினார்.

அடுத்து சுமார் 50 தினங்களுக்கு முன்பு வெளியாகி அகில உலகத்தையும் அதிர வைத்த ‘கேஜி எஃப்’ 2’வின் வெற்றியும் அது ஈட்டிய 1200 கோடி தாண்டிய வசூலையும் இன்னும் வியந்துகொண்டே இருக்கிறோம்.

அடுத்து அவரது இயக்கத்தில் தயாராகும் ‘சலார்’படத்துக்கும் விண்ணைத் தொடும் எதிர்பார்ப்பு உள்ளது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு நடிக்கும் இந்த படமும் பெரும் பொருட்செலவில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் டீஸர் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகவிருக்கிறது.

இவரது முதல் மூன்று படங்களையும் தாண்டிய சவாலான படமாக இப்படத்தை இயக்கி வருவதாக படக்குழுவினர் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.

Prashant Neil who has directed three films in eight years is shining in India

2D இணையத் தொடரின் பாடலுக்கு கை கொடுத்த நடிகர் பிரேம்ஜி

2D இணையத் தொடரின் பாடலுக்கு கை கொடுத்த நடிகர் பிரேம்ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2D என்ற இணைய தொடரின் முதல் பாடல் வெளியாகிவுள்ளது.

இதனை நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்பாடலுக்கு இசையமைத்தவர் ஆதித்யா ஸ்ரீராம்.. எழுதியவர் ஹரிஹரன்… பாடியவர் ஸ்வஸ்திகா.. இதனை DJ என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த இணைய தொடர் வருகின்ற ஜுன் 10 Moviewood OTT தளத்தில் வெளியாக உள்ளது என படகுழு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே ட்ரைலர் வெளியாகிருந்த நிலையில் தற்போது முதல் பாடல் வெளியாகியுள்ளது.

2D web series single track release in Humun Music You tube Channel
Music : Adithya sriram Lyric : Hariharan singer : swastika
direction : DJ

Premji releases new song from web series 2D

வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் : மொத்தம் 3 பாகம்.. ஆனா முதலில் வருவது 2ம் பாகம்.!

வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் : மொத்தம் 3 பாகம்.. ஆனா முதலில் வருவது 2ம் பாகம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சார்க் பின் ஸ்டுடியோஸ் (Shark Fin Sttudios) நிறுவனம் சார்பில் ஸ்ரீ தயாரித்திருக்கும் படம் ’புரொஜக்ட் சி – சாப்டர் 2’ (Project C – Chapter 2). 2018 ஆம் ஆண்டு வெளியான ‘மங்கை மான்விழி அம்புகள்’ என்ற படத்தை இயக்கிய வினோ இயக்கும் இரண்டாவது படமான இப்படத்தில் ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி, கோவை குருமூர்த்தி ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

ரம்மி போன்ற விளையாட்டு போல் நகரும் இப்படத்தின் கதையில் இடம் பெறும் ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒவ்வொருவரும் ஒரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு இடையே நடைபெறும் இந்த விளையாட்டில் யார் ஜெயிப்பார்கள் என்பது படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதோடு, இவர்களிடம் இருக்கும் போட்டி குணம் படம் பார்ப்பவர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் அளவுக்கு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவராத ஒரு புதிய முயற்சியோடு வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் திரைக்கதையும், படத்தில் வரும் முதன்மை கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் இதுவரை எந்த ஒரு படத்திலும் பார்த்திராத வித்தியாசமாக இருப்பதோடு, பேசப்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் மூன்று பாகங்களாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’ தான் முதலில் வெளியாக உள்ளது.

பொதுவாக பல பாகங்களாக வெளியாகும் படங்கள் முதல் பாகம் வெளியான பிறகு தான் அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும்.

ஆனால், இப்படக்குழு சற்று வித்தியாசமாக முதலில் இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறார்கள்.

இது குறித்து தயாரிப்பாளரும், படத்தின் ஹீரோவுமான ஸ்ரீயிடம் கேட்ட போது….

”டிரமாட்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்ததில்லை, என்று சொல்லும் அளவுக்கு படத்தை வித்தியாசமான முறையில் எடுத்துள்ளோம்.

இப்படம் போலவே படத்தின் வெளியீடும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தான் முதலில் இரண்டாம் பாகத்தையும் வெளியிடுகிறோம்.

இரண்டாம் பாகத்தை பார்க்கும் போது, முதல் பாகத்தில் என்ன நடந்திருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்படுவதோடு, அதன் தொடர்ச்சி மிக எளிமையாக புரியும்படியும் இருக்கும்.” என்றார்.

இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் வசுதா கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே ‘சிஸ்டர்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்திருக்கிறார்.

அப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதும் அவர் வென்றிருக்கிறார். அதேபோல், படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று இல்லாமல், ஐந்து கதாப்பாத்திரங்களுக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளாதாம்.

இப்படத்திற்கு சிபு சுகுமாரன் இசையமைத்துள்ளார். இவர் சுமார் 12 மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தமிழில் இது தான் முதல் படம். சதிஷ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ‘அடங்க மறு’, ‘அண்ணாதுரை’ போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

தினேஷ் காந்தி படத்தொகுப்பு செய்துள்ளார். சித்தின் கும்புக்காடு டிஐ செய்துள்ளார்.

படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் உள்ளது. மூன்று பாடல்களும் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக உருவாகியிருப்பதோடு, படத்தின் பீஜியமும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் விதத்தில் அமைந்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் வெளியிட்டார். அதேபோல், மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்.

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் ஈடுபட்டுள்ள படக்குழ் விரைவில் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

அதை தொடர்ந்து ஜூன் அல்லது ஜூலை மாதம் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இப்படத்தை மூன்று பாகங்களாக தயாரிப்பதோடு, மேலும் மூன்று படங்களை சார்க் பின் ஸ்டுடியோஸ் சார்பில் ஸ்ரீ தயாரிக்க உள்ளார். அப்படங்களுக்கான கதை தேர்வு முடிவடைந்த நிலையில், தற்போது லொக்கேஷன் தேர்வு நடைபெற்று வருகிறது.

அப்படங்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், சார்க் பின் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கும் படங்கள் அனைத்தும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படங்களாக மட்டுமே இருக்கும் என்றும் தயாரிப்பாளர் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Strange suspense thriller: Total 3 parts .. but first comes the 2nd part.!

Water Falls – Snow World..; சென்னை தீவுத்திடலில் கோடையை கொண்டாடுங்க

Water Falls – Snow World..; சென்னை தீவுத்திடலில் கோடையை கொண்டாடுங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுத்திடல் பொருட்காட்சி மைதானத்தில் (அண்ணா சாலை பகுதி) M/s Folks World என்ற நிறுவனம் மூலம் நடைபெறும் “கோடை கொண்டாட்டம்-2022” என்ற நிகழ்ச்சியை மாண்புமிகு ராஜ்யசபா எம்.பி வில்சன் அமைச்சர் மற்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி நேற்று ஜூன் 2ம் தேதி வியாழக்கிழமை மாலை 5.௦௦ மணியளவில் தொடங்கி வைத்தனர் .

இந்த பொருட்காட்சி நிகழ்வில் சென்னை மக்களின் கோடை விடுமுறையை குடும்பத்துடன் குளிர்ச்சியாக கொண்டாடும் வகையில் “குற்றால அருவி – Water Falls”, “பனிக்கட்டி உலகம்-Snow World”, 15க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்களுடன் பொழுதுபோக்கு வளாகம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ கார்னிவல் விளையாட்டுகள் (கார்னிவல் Games), 10க்கும் மேற்பட்ட புதுமையான நிகழ்ச்சிகள் (Special Shows) மற்றும் வசந்த் & கோ, ஆச்சி மாசாலா போன்ற வணிக அரங்குகளுடன் மிக பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது.

கோடை கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள்:
* சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளித்து மகிழும்
வகையில் “சென்னையில் குற்றால அருவி”
கோடை விடுமுறையை குளிர்ச்சியாக்க பனிக்கட்டி உலகம் மற்றும்
DJ Sound System with Stage
* குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்திட Giant Wheel, Tora Tora, Peacock, Watter Roller, Techno Jump,
போன்ற 15க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்களுடன் பொழுதுபோக்கு வளாகம்
* 3D தியேட்டர், கடல்வாழ் மீன்கள் காட்சியகம், பறவைகள் காட்சி, கண்ணாடி மாளிகை, பேய் வீடு, மேஜிக் ஷோ போன்ற பல்வேறு ஸ்பெஷல் ஷோ
* குழந்தைகளை குதுகலப்படுத்த புதுமையான தொழில்நுட்பங்களுடன்
Augmented Reality Show
* வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மலிவு விலையில் வாங்கி
மகிழ 50க்கும் மேற்பட்ட சிறிய கடைகள்

டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம்ஸ் மற்றும் பிரியாணி போன்ற உணவு அரங்குகள்

ஏசி, வாஷிங் மெஷின், கிரைண்டர், டி.வி., போன்ற இதர வீட்டு உபயோகப்
பொருட்கள் (Home Appliances) அனைத்தையும் சலுகை விலையில்
வாங்கிட வசந்த் & கோ அரங்கம்

மகளிர் மனம் மகிழ சமையலுக்கு தேவையான அனைத்து மசாலாக்கள்
வாங்கிட ஏதுவாக ஆச்சி மசாலா (Aachi Masala) அரங்கு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியானது இன்று முதல் 45 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு
தேவையான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக சென்னை நகரின் முக்கிய பகுதிகளிலிருந்து அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொருட்காட்சியின் (வரிகள் உட்பட) நுழைவுக் கட்டணம் ரூபாய் ரூ.60/- அறுபது மட்டும்) பொருட்காட்சி நேரம் -திங்கள் முதல் சனிக்கிழமை வரை:
|மாலை 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
|ஞாயிற்று கிழமைகளில் 😐 காலை 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட
தீவுத்திடலுக்கு வாங்க ..!..
சந்தோஷமாக போங்க .!..

Water Falls – Snow World ..; Celebrate summer at Chennai Island

டி ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லும் சிம்பு

டி ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாக தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து டி ஆரின் மகனும் நடிகருமான சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்….

”எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான நண்பர்களுக்கும் வணக்கம்.

எனது தந்தை குறித்துத் தொடர்ந்து பரவும் வதந்திகள் எதையும் யாரும் நம்ப வேண்டாம். என் தந்தை மிக நலமாக உள்ளார்.

எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.

பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்.

அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்திருந்தார்.

டி ராஜேந்தர் குணமடைய சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் செய்த காரியத்தை பார்த்தீங்களா.?

இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக 2 நாட்களில் டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Simbu takes T Rajender to US for medical treatment

அட்லீ – ஷாரூக் – அனிருத் கூட்டணி.; டைட்டிலுடன் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு

அட்லீ – ஷாரூக் – அனிருத் கூட்டணி.; டைட்டிலுடன் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ராஜா ராணி்’ படத்தின் வெற்றி மூலம் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் டைரக்டர் அட்லீ.

அதன்பின் விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களை இயக்கினார். இவை சூப்பர் ஹிட்டானதால் ஹிந்தியில் வாய்ப்பை பெற்றார் அட்லீ.

இதனையடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இயக்கி வருகிறார் அட்லீ.

இதன் மூலம் நயன்தாரா முதன்முறையாக பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் ஷாருக்கான் இரட்டை வேடத்திலும்
நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் தலைப்பு ‘லயன்’ என கூறப்பட்டது.

ஆனால் அந்த தலைப்பு இல்லை என தெரிகிறது.

தற்போது இந்தப் படத்திற்கு ‘ஜவான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் சரியாக ஒரு வருடம் கழித்து 5 மொழிகளில் 2023 ஜூன் 2ல் ரீலீசாகவுள்ளது.

Atlee – Shah Rukh Khan – Anirudh joins for a new film Jawan

More Articles
Follows