டி ராஜேந்தர் குணமடைய சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் செய்த காரியத்தை பார்த்தீங்களா.?

டி ராஜேந்தர் குணமடைய சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் செய்த காரியத்தை பார்த்தீங்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன வேடம் தான் என்றாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் கூல் சுரேஷ்.

சில படங்களில் ரவுடியாகவும், வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்து இருப்பார் கூல் சுரேஷ்.

மேலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

எந்த படம் ரிலீஸ் இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விடுவார் கூல் சுரேஷ்.

அப்போதே எதையாவது பேசி அன்றைய தினத்தில் டிரெண்டிங்கில் இருப்பார்.

இவர் சிம்புவின் தீவிர ரசிகர் ஆவார். டி ராஜேந்தரின் விசுவாசியும் ஆவார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள டி ராஜேந்தர் விரைவில் நலம்பெற வேண்டும் என கடவுளை மனமுருகி நடிகர் கூல் சுரேஷ் வழிப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.

சினிமாவில் சகலகலா வல்லவரும் இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக சிம்பு வெளியிட்ட அறிக்கையில்…

அப்பாவுக்கு வயிற்றில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவர் சுயநினைவுடன் இருக்கிறார். உயர் சிகிச்சைக்காக அப்பாவை வெளிநாடு அழைத்து செல்ல இருக்கிறோம்” என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Did you see what Simbu fan cool Suresh did to heal D Rajender?

மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தும் நட்சத்திர தம்பதி குஷ்பூ சுந்தர்

மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தும் நட்சத்திர தம்பதி குஷ்பூ சுந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் தமிழகமெங்கும் ஒலித்த குரல் குஷ்பூ. இவருக்கென சினிமாவில் பாடல்களை கவிஞர்கள் எழுதினர்.

உலகத்தில் முதன்முறையாக நடிகை குஷ்பூக்கு கோயில் கட்டிய ரசிகர்களும் தமிழகத்தில் உள்ளனர்.

‘முறைமாமன்’ படத்தில் குஷ்பூவை நாயகியாக சுந்தர் சி இயக்கிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

அதன்படி காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தனது மூத்த மகள் நடிப்பு பயிற்சியை முடித்திருப்பதாக தெரிவித்துள்ளார் குஷ்பு.

இது தொடர்பான குஷ்பு பதிவில்…

“லண்டனில் பிரபல நடிப்புப் பள்ளி ஒன்றில் தனது நடிப்புப் படிப்பை முடித்துவிட்டாள் என் மூத்த மகள்.

அவளே இதை விரும்பி செய்து இருக்கிறார்.

அவளுடைய போராட்டம் இப்போது தொடங்குகிறது.

எனவே நாங்கள் அவளை அறிமுகப்படுத்தவோ அல்லது எங்கும் பரிந்துரைக்கவோ மாட்டோம். அவளுக்கு உங்கள் ஆசிகள் தேவை” என குறிப்பிட்டுள்ளார் குஷ்பூ.

The star couple Khushboo Sundar introduces their daughter in cinema

Top 10 PAN India Stars : முதலிடத்தில் விஜய்.; அஜித் சூர்யா பிரபாஸ் யஷ் – இருக்குற இடம் என்ன தெரியுமா.?

Top 10 PAN India Stars : முதலிடத்தில் விஜய்.; அஜித் சூர்யா பிரபாஸ் யஷ் – இருக்குற இடம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்மக்ஸ் மீடியா என்றொரு பிரபல நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனம் டாப் 10 இந்திய சினிமா பிரபல நடிகர்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியுள்ளது்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி ஆகிய மாநிலங்களில் உள்ள நடிகர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இதில் தமிழ் நடிகர் விஜய் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜுனியர் என்டிஆர் 2ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பான்-இந்தியா ஸ்டார் என்றழைக்கப்படும் பிரபாஸ் 3ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

4வது இடத்தில் அல்லு அர்ஜுன், 5வது இடத்தில் அக்ஷய்குமார் உள்ளனர்.

நடிகர் அஜித்திற்கு 6ம் இடம் தான் கிடைத்துள்ளது.

7வது இடத்தில் யஷ், 8வது இடத்தில் ராம் சரண் உள்ளனர்.

நடிகர் சூர்யா 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.

10வது இடத்தை மகேஷ் பாபு பிடித்துள்ளார்.

Ormax Media Survey – Top 10 PAN India male star

Vijay
Jr NTR
Prabhas
Allu Arjun
Akshay Kumar
Ajith Kumar
Yash
Ram Charan
Suriya
Mahesh Babu

கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார்.; ஸ்டாலின் – ரஜினி பங்கேற்பு

கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார்.; ஸ்டாலின் – ரஜினி பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறையும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக ஐம்பது வருடங்களாக பொறுப்பு வகித்தவர் கலைஞர்.

அரசியல் மட்டுமின்றி, திரைப்பட வசனகர்த்தா, கதை, கவிதை நாடகம் என கால் பதித்த அனைத்துத் துறைகளிலும் தனி முத்திரை பதித்தவர்.

70 ஆண்டுகளாக “உடன்பிறப்பே” எனும் தன் காந்தக் குரலால், தமிழக மக்களை கட்டிப்போட்டவர்.

எனவே மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 16 அடி உயரத்திலான முழு உருவ வெண்கலச் சிலை, 12 அடி உயரத்திலான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையை போன்றே தத்ரூபமாக சிலையை வடித்துள்ளார் மீஞ்சூர் சிற்பி தீனதயாளன்.

முழுவதும் வெண்கலத்தால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. சிலை வைக்கும் இடத்தை சுற்றி சுமார் 5,250 சதுர அடியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அழகிய பூங்கா, வண்ண விளக்குகள் போன்ற வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், சினிமா உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். கவிஞர் வைரமுத்துவும் பங்கேற்றார். இருவரும் மேடை கீழே முதல் வரிசையில் அருகருகே அமர்ந்து இருந்தனர். இவர்களுடன் அரசியல் கட்சி தலைவர் ப. சிதம்பரம், வைகோ உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக எம். பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ரஜினி பங்கேற்ற படத்தை அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

கருணாநிதி சிலை

The statue of Karunanidhi was unveiled by the Vice President of India

ஐபிஎல் பைனல் மேட்ச்.; நரேந்திர மோடி மைதானத்தில் ஏஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி

ஐபிஎல் பைனல் மேட்ச்.; நரேந்திர மோடி மைதானத்தில் ஏஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2008ல் ஆரம்பமானது.

கடந்த 15 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இந்த வருட ஐபிஎல் போட்டி, கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது.

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் நாளை (29-05-22) நடக்கவிருக்கிறது.

இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் பைனல் மேட்ச் நடக்கிறது.

இந்த ஆண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட இரண்டு அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் ஆண்டிலேயே இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

நாளை இறுதி ஆட்டத்திற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகள் வழக்கம்போல நடைபெற உள்ளன.

இதில் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்றை ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

கடந்த 75 வருடங்களாக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

எனவே அதனைப் பெருமைப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி அமைய உள்ளது என ஏஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரலையிலும் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

IPL Final Match; AR Rahman Music Concert at Narendra Modi stadium

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண இடம் மாற்றம்.; ஒளிப்பரப்பு ஓடிடி-க்கு விற்பனை

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண இடம் மாற்றம்.; ஒளிப்பரப்பு ஓடிடி-க்கு விற்பனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

2015ல் வெளியான இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க அனிருத் இசையமைத்து இருந்தார்.

இந்த பட சூட்டிங் சமயத்தின் போதே நயன் & விக்கி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர்.

இருவரும் எங்கும் சென்றாலும் இணைந்தே சென்றனர். சமூக வலைத்தளங்களில் ஜோடியாக போட்டோ போட்டு அசத்துவார்கள்.

இருவரும் அடிக்கடி அனைத்து மத வழிப்பாட்டு தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

அண்மைக்காலமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி பல படங்களை தயாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு மேலாக இவர்கள் காதலித்துக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு எப்போது திருமணமாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறும் என தகவல் வெளியானது.

ஆனால் அவர்கள் இருவரும் இது குறித்து இதுவரை பேசவில்லை.

இதனிடையில் விக்னேஷ் சிவனின் குலத்தெய்வ கோயிலில் நயன்தாரா வழிபாடு செய்துள்ளார்.

கணவன் மனைவியா ஒற்றுமையா வாழனும்.; விக்னேஷ் சிவன் குலதெய்வ கோயிலில் நயன்தாரா வேண்டுதல்

தஞ்சாவூர்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள மேலவழுத்தூர் கிராமத்தில், ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலத்தெய்வக் கோயில் எனச் சொல்லப்படுகிறது.

இந்த கோயிலில் இருவரும் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

கணவன், மனைவி ஒற்றுமையாக வாழ வழிப்பாடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ள இடம் மட்டும் மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமண வைபவத்திற்கு 150 விருந்தினர்கள் வரை மட்டுமே கலந்து கொள்ள அனுமதியாம்.

எனவே நயன் – விக்கி உறவினர்களுக்கு இந்த நிபந்தனையில் திருப்தி இல்லையாம்.

அதனால் சென்னை ஈசிஆர் மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு பெரிய ரிசார்ட் ஒன்றில் அதே ஜூன் 9-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

மேலும் இந்த காதல் திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாம்.

Nayanthara – Vignesh Shivan Wedding Venue Changed

More Articles
Follows