வில்லனாக கமல் நடிக்கும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ரூ 200 கோடி பட்ஜெட்.?!

வில்லனாக கமல் நடிக்கும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ரூ 200 கோடி பட்ஜெட்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’.

இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

10 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் முதல்தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் முக்கிய அங்கமாக இருப்பதால் கிராபிக்ஸுக்கு காட்சிகளுக்கு மட்டும் ரூ.200 கோடியை படக்குழு செலவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத தரத்துடன் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்க வேண்டும் என்பதில் படக்குழு தீர்மானமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கல்கி 2898 ஏடி

A budget of Rs 200 crore for vfx graphics scenes in ‘kalki 2898 AD’ movie

‘அலங்கு’ அப்டேட் : கேரளா அரசியல்வாதிகள் – தமிழக பழங்குடியின இளைஞர்கள் மோதல்

‘அலங்கு’ அப்டேட் : கேரளா அரசியல்வாதிகள் – தமிழக பழங்குடியின இளைஞர்கள் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்சன் டிராமாவாக உருவாகிய படம் ‘அலங்கு’.

கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும் , தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் , சரத் அப்பானி, அவர்களுடன் காளிவெங்கட் உடன் குணாநிதி கதை நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது .

இந்த திரைப்படத்தை S.P.சக்திவேல் இயக்குகிறார் , இவர் உறுமீன் , பயணிகள் கவனிக்கவும் என்ற இரு திரைப்படங்களை இயக்கியவர்.

மேலும் சமீபத்தில் வெற்றி பெற்ற குட்நைட் திரைப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.

இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த செல்ஃபி திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது

அலங்கு – என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்ததாகும். அத்துடன் ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும் , ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

ஆனால் கால போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும் மருவி வேறு இன பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் , நினைவூட்டலுக்கும் இந்த பெயர் மிகவும் பொருந்தி இருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க வனம் , வனம் சார்ந்த மக்கள் என படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு , கேரள மாநிலம் இடுக்கி , அட்டப்பாடி அதை தொடர்ந்து தேனி, கம்பம் , கோவை மாவட்டம் ஆனைகட்டி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக 52 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர் படக்குழு.

முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தின் அதிக அளவில் வன விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து இப்படம் திரைக்கு வரும் எனவும் படக்குழு தெரிவித்தது .

CAST & CREW
நடிகர்கள்:

குணாநிதி, செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, சௌந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர்.

படக் குழுவினர் ;
எழுத்து & இயக்கம் : SP. சக்திவேல்
ஒளிப்பதிவு : S.பாண்டிகுமார்
இசை : அஜீஷ்
கலை இயக்குனர் : P.A. ஆனந்த்
படத்தொகுப்பு : சான் லோகேஷ்
சண்டை பயிற்சி : தினேஷ் காசி
ஒலி வடிவம் : S.அழகியகூத்தன், சுரேன்.G
ஒலி கலவை : சுரேன்.G
நடனம் : அசார், தாஸ்தா
கூடுதல் கலை இயக்குனர் : தினேஷ் மோகன்
ஒப்பனை : ஷேக் பாஷா
விலங்கு பயிற்சி : செந்து மோகன்
ஆடை : T.பாண்டியன்
ஆடை வடிவமைப்பு : ஜோஸ்வா மாக்ஸ்வெல் J
பாடல் : மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன்
கிராபிக்ஸ் : அஜக்ஸ் மீடியா டெக்
கலரிஸ்ட் : ரங்கா
வண்ணம் : பிக்சல் லைட் ஸ்டூடியோ
தயாரிப்பு நிர்வாகி : S.முருகன்
தயாரிப்பு மேற்பார்வை : அருண் விச்சு
தயாரிப்பு மேலாளர் : RK.சேது
உதவி தயாரிப்பு மேலாளர் : சேட்டு போல்ட்
மக்கள் தொடர்பு : R.குமரேசன்
விளம்பர வடிவமைப்பு : தண்டோரா
விளம்பர ஸ்டில்ஸ் : R.மனோ, கமலேஷ் சத்தியன்
இயக்குனர் குழுவினர் : வீரா விஜயரங்கம், அருண் சிவசுப்ரமணியம், விஜய் சீனிவாசன், லியோ லோகன், அபிலாஷ் செல்வமணி, செபின் S, தேவதாஸ் ஜானகிராமன்
நிர்வாக தயாரிப்பு : D.சங்கர்பாலாஜி
தயாரிப்பாளர் : D.சபரீஷ், S.A. சங்கமித்ரா
தயாரிப்பு நிறுவனம் : DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS

New action loaded Tamil film ALANGU updates

ஷாரூக் – அனிருத் – அட்லி கூட்டணியின் PARTY MOOD SONG

ஷாரூக் – அனிருத் – அட்லி கூட்டணியின் PARTY MOOD SONG

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்திய #AskSRK அமர்வு, ஷாருக்கானின் தீவிர ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, கிங்கான் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “ஜவான்” படத்தின் அடுத்த பாடலின் டீசரை தயாரிப்பாளர்கள் சார்பில் வெளியிட்டார்.

பெரும் காத்திருப்பிற்கு பிறகு தற்போது , ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜவான்

ஜவான் படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘நாட் ராமையா வஸ்தாவையா பாடல், பார்ட்டிக்கு அட்டகாசமான பாடலாக அமைந்துள்ளது.

SRK இன் மாயாஜால வசீகரம் பாடலை அழகாக்குகிறது. இளம் தலைமுறையினர் விரும்பும் வகையில் பாடலில் ட்ரெண்ட்செட்டர் நடன அசைவுகள் இடம் பெற்றிருக்கிறது.

மேலும், மூன்று வெவ்வேறு மொழிகளில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

பாடலின் இந்தி பதிப்பில், “நாட் ராமையா வஸ்தாவையா” என்ற பாடல் வரிகளை சமீபத்தில் பல வெற்றிப்பாடல்களை தந்த, மிக பிரபலமான பாடலாசிரியர் குமார் எழுதியுள்ளார்.

ஜவான்

அனிருத் ரவிச்சந்தர், விஷால் தத்லானி மற்றும் ஷில்பா ராவ் ஆகிய திறமையான இசை கலைஞர்கள் இப்பாடலுக்கு குரல் கொடுத்துள்ளனர், வைபவி மெர்ச்சன்ட் அழகாக நடனம் அமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

ஆஸ்கார் விருது பெற்ற, புகழ்மிக்க பாடலாசிரியர் சந்திரபோஸ் தெலுங்கு பாடலை எழுதியுள்ளார். ஸ்ரீராம சந்திரா, ரக்ஷிதா சுரேஷ் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் தெலுங்குப்பதிப்பை பாடியுள்ளனர்.

மேலும், “நாட் ராமையா வஸ்தாவையா” என்று ஆரம்பிக்கும் தமிழ் பதிப்பிற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை பிரபலமான பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு வைபவி மெர்ச்சன்ட் அழகாக நடனம் அமைத்துள்ளார்.

ஜவான்

“ஜவான்” படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார்.

கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

https://x.com/iamsrk/status/1696440949805863270?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

ஜவான்

ShahRukh sets dance floor on fire with Not Ramaiya Vastavaiya song

யார் சூப்பர் ஸ்டார்.? விஜய்யின் அரசியல்.; மிஷ்கின் பிரச்சனை.; கன்னியாஸ்திரி ஆசி – விஷால் விளக்கம்

யார் சூப்பர் ஸ்டார்.? விஜய்யின் அரசியல்.; மிஷ்கின் பிரச்சனை.; கன்னியாஸ்திரி ஆசி – விஷால் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஆகஸ்ட் 29ஆம் தேதி நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார் விஷால்.

“என் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்குவது எனக்கு மகிழ்ச்சி

பிறந்தநாளில் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் அவர்களை பராமரித்து வரும் கன்னியாஸ்திரிகளிடம் வாழ்த்து பெறுவது, கடவுளே வந்து வாழ்த்துவது போன்ற உணர்வை தருகிறது.

விரைவில் நடிகர் சங்க கட்டிடம் கட்டிமுடிக்கப்படும்.

மிஷ்கின் எழுதிய கதை திரைக்கதையை மாற்றி ‘துப்பறிவாளன் பார்ட் 2’ நான் தான் இயக்கு வருகிறேன்.

இயக்குநராக நான் ரசிக்கும் ஒருவர் மிஷ்கின். எனக்கு அண்ணன் ஸ்தானத்தில் அவர் இருப்பார்.

ஆனால் நான் ஒரு தயாரிப்பாளராக அப்படி பார்க்கமுடியாது.

தேசிய விருது தேர்வு குறித்த கேள்விக்கு.. “4 பேர் அமர்ந்து கொண்டு, விருதாளர்களை தேர்வு செய்வதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் ஆதரவே மகத்தான விருது.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய் வந்தால் அவரை வாழ்த்துவேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்” என்றார்.

ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து கேட்டதற்கு… “ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் 45 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் இந்த வயதிலும் அவர் திரைத் துறையில் சாதனை படைத்து வருகிறார். மக்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்” என பேசினார் விஷால்.

Vishal open talk about Rajini Vijay and Mysskkin

லாட்ஜில் பர்ஸ்ட் நைட்.. 7 முறை அபார்ஷன்.. துணைவியாக கயல்விழி.; சீமான் மீது விஜயலட்சுமியின் புகார் முழு விவரம்

லாட்ஜில் பர்ஸ்ட் நைட்.. 7 முறை அபார்ஷன்.. துணைவியாக கயல்விழி.; சீமான் மீது விஜயலட்சுமியின் புகார் முழு விவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் இயக்குனரும் அரசியல்வாதியுமான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல புகார்களை தெரிவித்த வண்ணம் உள்ளார். இவர்களின் மோதல் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அவ்வப்போது வெளியே வரும்.

இந்த நிலையில் தற்போது ஓரிரு தினங்களாக சீமான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வீசி காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.

அதன் முழு விவரம் இதோ…

தேதி 28 – 08 – 2023

*நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகார்*

விடுநர்

சா விஜயலட்சுமி த/பெ சண்முகசுந்தரம் பிள்ளை.

நம்பர் 354,கதவு எண் 41.

நான்காவது மாடி, RHCS பிரிவு, அன்னபூர்னேஸ்வரி நகர்,

ஸ்ரீ கந்த காவல், நாகர் பாடி,

பெங்களூர், கர்நாடகா மாநிலம்-50009

பெறுநர்

உயர்திரு காவல் ஆணையர் அவர்கள்! சென்னை பெருநகர காவல் ஆணையரகம்.

மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.

நான் தற்போது என் சகோதரி உஷா தேவி அவர்களுடன் மேற்கண்ட விலாசத்தில் வசித்து கொண்டு வருகிறேன். 2007 ஆம் வருடம் வாழ்த்துக்கள் திரைப்படத்தில் சீமான் இயக்கத்தில் நான் நடித்தேன்.

இந்த திரைப்படத்தின் மூலம் எனக்கு சீமான் அறிமுகமானார். அப்பொழுது என் அக்கா உஷா தேவி அவர்கள் மகன் பிள்ளை (8வயது) அக்காவின் கணவர் ராஜ்பாபு தூக்கி கொண்டு சென்றார் அப்போது 2008ல் என் அக்கா தி.நகர் காவல் நிலையத்தில், என் அக்கா கணவர் மீது புகார் கொடுத்தோம் என் அக்காவின் கணவர் ராஜ்பாபு அரசியல் பிரபலத்தில் இருப்பதால் நான் சீமான் அவர்களிடம் உதவி கேட்டோம். ஆனாலும் சீமான் அவர்கள் சட்ட ரீதியாக எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.

என்னுடைய அக்காவின் கணவர் என் குடும்பத்தில் எந்த ஒரு ஆண் துணையும் இல்லாததால் என் அக்காவின் கணவர் திடீர் திடீர் என்று எங்களை சண்டை போடுவதாலும் உடமைகளை தாக்கியதாலும் அக்காவை தாக்கியதாலும் நானும் என் வயதான தாயும் என் அக்காவும் நிலை குலைந்து இருந்தோம்.

இந்த நிலையில் சீமான் அவர்கள் தன்னுடைய நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் எங்களை வரவைத்து எனக்கு என்றும் யாரும் கிடையாது, எமக்கு திருமணமாகவில்லை எனக்கு எந்த ஒரு வரதட்சனை கொடுக்க வேண்டாம் திருமண செலவை நானே செய்து கொள்கிறேன் உங்களைப் போன்று ஈழத் தமிழர் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்ததே போதுமானது என்பது, எனது மன நிறைவாகும் என்று சீமான் என்னிடம் கூறினார். நான் என் தாய் விஜயா சண்முகசுந்தரம் பிள்ளை அவர்களுக்காகவும் என் உடன் பிறந்த சகோதரி உஷா தேவிக்காகவும் மட்டுமே என் வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்கிறேன் அவர்களுக்காகவே என் வாழ்க்கை என்று சீமானிடம் கூறினேன் என் அக்கா என் தாய் சம்மதித்தால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினேன்.

பிறகு சீமான் அவர்கள் என் தாய் என் அக்கா அவர்களிடம் நான் உங்களுக்கு மகனாய் இருப்பேன்.உங்கள், மகள் விஜயலட்சுமி அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். எனக்கும் விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று என் தாயாரிடம் கூறினார்.

என் தாய், எங்கள் உறவினர்களிடம் கலந்து பேசிவிட்டு கூறுகிறேன் என்று சொல்லிவிட்டார். அந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர் சம்பந்தமான போராட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டு மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. சீமான் அவர்கள் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஸ்டார் தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

அப்பொழுது என்னுடைய கைப்பேசி எண்ணுக்கு சீமான் அவர்கள் கைபேசியில் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு எனக்கு யாரும் இல்லை என்ற மனநிலை தோன்றுகிறது. எனக்கு யாரும் இல்லை என்ற சிந்தனை தோன்றுகிறது.

அதனால் எனக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளது என்று கூறினார் எனக்கு வழக்கு சம்பந்தமாகவும் எமக்கு ஆதரவு சொல்லவும் யாரும் இல்லை என்று வருத்தப்பட்டார். எனக்கு மனைவியாக வேண்டிய நீங்கள் என் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறி என்னோடு இருந்தால் எனக்கு பக்கபலமாக இருக்கும் என்று கூறினார்.

என் தாயாரிடம்மும் இதையே கூறினார். பின்பு என் தாய் சம்மதத்தோடு சீமான் அவர்கள் ஏற்பாடு செய்த விமானம் மூலம் நான் சீமான் தங்கியிருந்த விடுவிக்கு சென்றேன். பின்பு அவரின் வழக்கு சம்பந்தமான பணிகளையும் செலவினங்களையும் நானே பார்த்தேன் என்னை சீமானும் அவரின் ஆட்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்கள். அப்போது தாலி மற்றும் மலர் மாலைகளுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்தார்கள் பிறகு கோவிலுக்கு வெளியே நானும் சீமானும் மாலையை மாற்றிக்கொண்டோம்.

பிறகு அங்கிருந்து அவர்கள் மாங்கல்யம் கட்ட சொல்லும்போது சீமான் அவர்கள் நான் பெரியார் கொள்கை பின்பற்றுபவன் மற்றும் நான் கிறிஸ்தவர் என்பதால் என்னுடைய கலாச்சாரத்திற்கு கொள்கைக்கும் எதிரானது என்று மாங்கல்யம் கட்ட மறுத்து மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். அன்றில் இருந்து சீமான் அவர்களை நான் கணவராக ஏற்று நாங்கள் கணவன் மனைவியாக வாழ தொடங்கினோம்.

பின்பு நமது திருமணம் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் உலகம் போற்றும் வகையில் நாம் நடத்த வேண்டும் அது வரையில் இந்த திருமணத்தை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார்.

அன்றைய தினத்தில் எனக்கும் சீமான் அவர்களுக்கு அந்த விடுதியில் சாந்திமுகூர்த்தம் நடந்தது. அந்த சாந்திமுகூர்த்தம் பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடும் உறவினர்களின் ஆசிர்வாதத்தோடும் நடைபெற்றது.

பின்பு நான் சென்னையிலிருந்து மதுரைக்கு நான்கு முறை சென்று, சென்று வந்தேன் பின்பு கடைசியாக மதுரை இருந்து சென்னைக்கு விமானம் மூலம் ஒன்றாக வந்தோம். மேலும் என்னுடைய வேளச்சேரி வீட்டில் நானும் என் கணவர் சீமானும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

நான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்’ எனக்கு இருந்தது. என் தாய்க்கு பேரபிள்ளைகளை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் சீமான் அவர்கள் தன்னுடைய அரசியலில் நான் ஒரு நிலை வரும் வரை குழந்தை வேண்டாம் என்றார். இந்த நிலையில் நான் ஏழு முறை கருவுற்றேன்.

என்னுடைய அனுமதி இல்லாமல் எம்மை சீமான் அவர்கள் நான் கருத்தரிக்கும் ஆறு ஏழு முறையும் எம்மை கட்டயபடுத்தியும் நிற்பந்தபடுத்தி கருச்சிதைவு மாத்திரைகள் எமக்கு கொடுத்து என்னுடைய அனுமதி இல்லாமல் எமக்கு கருச்சிதைவு செய்தார். இதனால் என்னுடைய உடலும் உள்ளமும் பலவீனம் ஆனது. நலிவுற்று போனது.

எங்கள் குடும்பம் இதனால் நிம்மதி இழந்தாது. நான் சினிமா துறையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த நகைகளை பணங்களை, சுமார் 60,00,000/- லட்சம் பணமும் 35,00,000/- மதிப்பிலான நகைகளையும் சிறுக,சிறுக என்னிடம் பெற்றுக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் நான் பணம் கொடுக்க மறுக்கவே மது அருந்திவிட்டு என்னை துன்புறுத்தி அடித்துவிட்டு பணத்தை புடிங்கி செல்வார். ஒரு நாள் நான் சீமான் அவர்களுக்கு மத்திய உணவை நான் சமைத்து வளசரவாக்கம் கட்சி அலுவலகத்தில் கொண்டு செல்வேன் அவர் சாப்பிட்ட பிறகு 45 மணி வரை அவரோடு இருந்துவிட்டு மாலை வீட்டிற்கு செல்வது தினந்தோறும் பழக்கம் மேலும் சீமான் அவர்களின் Ford-காரில் என்னை வேளச்சேரி வீட்டில் இறக்கிவிட்டு செல்வார்கள், ஒரு நாள் நான் செல்லும் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து ஒரு பெண் எம்மை கண்காணித்துள்ளார்.

அந்த பெண் ஒரு நாள் என்னுடைய கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு என் பெயர் தேன்மொழி எனக்கும் சீமானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் திரு.பாலுமகேந்திரா மற்றும் சுகாசினி அவர்களின் தலைமையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

திருமணம் நாளுக்காக காத்திருக்கிறேன். நீங்கள் யார் சீமானை அலுவலகத்திற்கு வந்து செல்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார், நான் அந்த பெண்ணிடம் என் கணவர் என்று கூறினேன். அப்பொழுது அந்த பெண் என்னை ஏமாற்றியது போல் உங்களையும் ஏமாற்றி உள்ளார் என்று அந்த பெண் கூறினார்.

பிறகு சீமானின் இதை பற்றி கேட்ட பொழுது அவர் மழுப்பலாசு உண்மைக்கு மாறான தகவலை பேசினார் என்னிடம் சண்டையிட்டு அடித்தார். பிறகு இயக்குனர் சேரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவரும் ஆமாம் என்று கூறினார். இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு நானும் எனது குடும்பமும் உள்ளானோம். நான் சினிமா துறையில் என் தொழிலை பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது இவர் எனக்கு வரும் சினிமா வாய்ப்பை தடுத்தார். இந்த நிலையில் சீமான் அவர்களின் அடி ஆட்களை வைத்து எமக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

நான் உடனே சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களிடம் புகார் மனு அளித்தேன். அந்த புகார் மனுவுக்கு RS, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் குற்ற எண்:1007/2011 ws,417,420,354,376, 506(1) IPC & SCA of TNPWH Act, வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன். சீமான் அவர்கள் அப்பொழுது இருந்த அஇஅதிமுக கட்சியின் முக்கிய பொறுப்பாளரான தடா சந்திரசேகர் அவரை வைத்து நல்ல முறையில் ஊர் அறிய உலகம் அறிய வாழ வைப்பதாக கூறினார்கள்.

அதற்கு நான் கொடுத்த புகார் மனுவுக்கு காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று சீமான் அவர்கள் தடா சந்திரசேகர் அவர்களை வைத்து என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டார். மேலும் என்னிடம் கணவராக வாழ்ந்து கொண்டே கயல்விழி என்ற பெண்ணை திருமணம் செய்ய மறைமுகமாக வேலை செய்து கொண்டார்.

இந்த தகவல் கயல்விழிக்கும் சீமானுக்கும் திருமணமான பிறகுதான் எமக்கே தெரிந்தது. அன்றைக்கு இருந்த அதிமுக அரசை ஆதரித்து இருந்தாலும், கயல்விழி முன்னால் சபாநாயகர் காளிமுத்து அவர்களின் மகள் என்பதாலும் நான் கொடுத்த புகார் மனுவிற்கு அப்பொழுது காவல் துறையினர் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிமுக அரசும் அந்த கட்சியில் இருந்த நபர்களுக்கு சீமானும், சீமான் அடியாட்கலும் அச்சுறுத்தி பயமுறுத்தியதால் நான் என் உயிருக்கும் உடைமைக்கும் பயந்து வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசு மாறி திமுக அரசு வந்ததால் என் புகாருக்கும் எனக்கும் நடந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நான் சட்டரீதியாக முயற்சி செய்தபோது சீமான் அவர்களின் கட்சியை சார்ந்த மதுரை செல்வம் என்ற நபர் எம்மை தொடர்பு கொண்டு அக்கா நீங்கள் அண்ணன் சீமான் அவர்கள் மீது புகார் ஏதும் கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்.

உங்கள் மாமா சீமான் உங்களை மனைவியாகவும் கயல்விழியை துணைவியாகவும் வைத்து வாழ்க்கை நடத்துவதாக கூறியுள்ளார். இதனால் உங்களுக்கு மாத மாதம் 50,000/- ஆயிரம் பணம் அண்ணன் சீமான் அவர் அனுப்ப சொல்லி உள்ளார். அந்த பணம் இந்த ஆண்டு 2023 மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை 50,000 அனுப்பினார்கள்.

நான் என்னால் பெங்களூரில் தனியாக வாழ முடியாது.என்னை சென்னைக்கு வரவைத்து சீமானை என்னுடன் வாழ்க்கையை நடத்த சொல்லுங்கள் என்று நான் கூறினேன். ஆனால் சீமானின் தூண்டுதலின் பேரில் மதுரை செல்வமும் எம்மை குறித்து தவறான செய்தியை சமூக வலைத்தளத்தில் வதந்தியையும் பரப்பினார்.

இது குறித்து அவரிடம் நான் கேட்டதற்கு என்னை whatsapp பில் தொடர்பு கொண்டு எமக்கு கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமில்லாமல் எம்மை குறித்து ஏதோ ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டினார்கள். எனவே ஐயா அவர்களே என்னை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து என்னுடன் கணவராக வாழ்ந்து என் வயிற்றில் இருந்த கருவை என் அனுமதியின்றி கருச்சிதைவு செய்து என்னுடைய பணம் நகைகளை பறித்து என்னை இழிவாக பேசி எம்மை தற்கொலைக்கு தூண்டி என் வாழ்கையை சீரழித்த சீமான் மீதும் சீமானின் தூண்டுதலின் பேரில் எனக்கு ஆபாச வீடியோ அனுப்பி என்னை மிரட்டிய மதுரை செல்வம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து எனக்கு என் உடல்நிலை சரியில்லாத என் சகோதரிக்கு பாதுகாப்பு அளித்து எமக்கு நீதியும் நியாயத்தையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ச.விஜயலட்சுமி

28 August 2023

Actress Vijayalakshmi complaint letter towards NTK Seeman

பிக்பாஸில் 2 வீடு..; டபுள் கமல்.; இணையத்தை எகிற வைத்த புரோமோ!

பிக்பாஸில் 2 வீடு..; டபுள் கமல்.; இணையத்தை எகிற வைத்த புரோமோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஒன்று பிக்பாஸ்.

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பத்தில் பிக்பாஸ் 6வது சீசன் முடிவுக்கு வந்தது.

அந்த சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது.

மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரேகா நாயர், மாகபா ஆனந்த், விஜே பாவனா, கே.பி.ஒய்.சரத் ஆகியோரிடம் ஆடிஷன் நடந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் 7-வது சீசனின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Two House in Bigg Boss show Kamal says in bigg boss season 7 promo video

More Articles
Follows