OFFICIAL ‘பிச்சைக்காரன் 2’ டிரைலர் & ரிலீஸ் அப்டேட்

OFFICIAL ‘பிச்சைக்காரன் 2’ டிரைலர் & ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் ‘பிச்சைக்காரன் 2’.

இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இயக்கம் மட்டுமின்றி, விஜய் ஆண்டனி தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூலம் படத்தை தயாரிக்க, இவரே இசையும் அமைக்கிறார்.

இந்த நிலையில், ‘பிச்சைக்காரன் 2’, மே 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தின் டீசர் நாளை ஏப்ரல் 29-ம் தேதி சனிக்கிழமை வெளியாகவுள்ளது.

மேலும், ‘பிச்சைக்காரன் 2’ படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிச்சைக்காரன் 2

‘Pichaikkaran 2’ to release on this may 19

ஆந்திரா சென்ற ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாலையா ! முழு விவரம் இதோ !

ஆந்திரா சென்ற ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாலையா ! முழு விவரம் இதோ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான என்டிஆரின் 100வது ஆண்டு விழா இன்று (ஏப்ரல் 28) விஜயவாடாவில் நடைபெற உள்ளது.

விமானம் மூலம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை விமான நிலையத்தில் என்டிஆர் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா வரவேற்றார்.

தலைவருக்கு பாலய்யா குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளிக்கும் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பிரம்மாண்ட நிகழ்வில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொள்கிறார்.

ஆடம்பரமான NTR100 நிகழ்வு இன்று மாலை 04.30 மணிக்கு தொடங்குகிறது.

Rajinikanth receives a grand welcome by top actor Balayya for the legendary NTR’s centenary event!

சிவா மனசுல சக்தி பார்ட் 2 ரெடி .. சூட்டிங் எப்போது ?

சிவா மனசுல சக்தி பார்ட் 2 ரெடி .. சூட்டிங் எப்போது ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா தனது பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான ‘சிவா மனசுல சக்தி’யை மீண்டும் கையில் எடுக்க உள்ளார்.

பா.விஜய்யுடன் அவர் நடித்த பிரம்மாண்ட படம் முடிந்ததும் மீண்டும் எஸ்எம்எஸ் படம் மூலம் இயக்குனர் எம் ராஜேஷுடன் அவர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படம் எஸ்எம்எஸ்ஸின் சரியான தொடர்ச்சியாக இருக்கும் என்றும் தனித் திரைப்படமாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

“ஜீவாவும் நானும் எஸ்எம்எஸ் 2 இல் வேலை செய்வது பற்றி ஆலோசித்து வருகிறோம்.

இருப்பினும், எல்லாம் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது.

விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Is Jiiva’s blockbuster ‘Siva Manasula Sakthi’ getting a sequel?

PS2 – USA Premiere Show அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் ‘பொன்னியின் செல்வன் 2’.

PS2 – USA Premiere Show அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் ‘பொன்னியின் செல்வன் 2’.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது.

‘பொன்னியின் செல்வன் 2’ அமெரிக்க பிராந்தியத்தில் 1100 க்கும் மேற்பட்ட திரைகளில் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் USA பிரீமியர்களை இந்த முறை அதிக கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் USA பிரீமியர்களில் $500K+ வசூலித்துள்ளதாக லைக்கா தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

USAவில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் நாள் வசூல் 1 மில்லியனைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ‘PS2’ படம் ‘PS 1’ ஐத் தாண்டி 5.5 மில்லியன் டாலர்களை வசூலித்து. அதனால், ‘PS2’ படம் USAவில் தற்போது ஆல் டைம் நம்பர் 1 ஆக உள்ளது.

பொன்னியின் செல்வன் 2

‘Ponniyin Selvan 2’ USA box office collection earns $500K+

எம்ஜிஆர் – குஷ்பு வரிசையில் சமந்தா.; நடிகைக்கு கோயில் கட்டி வழிபடும் ரசிகர்.

எம்ஜிஆர் – குஷ்பு வரிசையில் சமந்தா.; நடிகைக்கு கோயில் கட்டி வழிபடும் ரசிகர்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை சமந்தா. இவர் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

இரு மாநிலங்களிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதனையடுத்து நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

சமந்தா

சில மாதங்கள் மட்டுமே இருவரும் இணைந்து வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

ஆனாலும் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த சமந்தா திடீரென ஒரு தோல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

இந்த நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்த தெனாலி சந்தீப் என்பவர் நடிகை சமந்தாவுக்கு, கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார்.

சமந்தா

தெனாலி சந்தீப் வீட்டின் ஒரு பகுதியில் எழுப்பப்பட்ட இக்கோயிலில் சமந்தாவின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவர் சமந்தாவின் தீவிர ரசிகர் என்றாலும், அவரது படங்களைவிட, அவரின் பிரதியுஷா அறக்கட்டளை மூலம் சமந்தா செய்துவரும் நற்பணிகள் தன்னை ஈர்த்ததுள்ள காரணத்தாலேயே கோயிலை கட்டியுள்ளதாக தெனாலி சந்தீப் தெரிவித்துள்ளார்.

இன்று ஏப்ரல் 28 சமந்தாவின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தக் கோயில் திறக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

சமந்தா

கூடுதல் தகவல்..

1990களில் நடிகை குஷ்பு பிரபலமாக இருந்தபோது அவருக்கு தமிழக ரசிகர்கள் கோயில் கட்டினர்.

அதுபோல நடிகராக வளர்ந்து மக்களின் தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆருக்கும் தமிழகத்தில் கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Fan of Samantha builds a temple for her in AP

CHOLA TOUR ENDS.. கண்கலங்கிய விக்ரம் & த்ரிஷா.; உருகிய கார்த்தி & ஜெயம் ரவி

CHOLA TOUR ENDS.. கண்கலங்கிய விக்ரம் & த்ரிஷா.; உருகிய கார்த்தி & ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை திரைப்படமாக்க பலர் முன் வந்தனர்.

எம்ஜிஆர், கமல்ஹாசன் தொடங்கி பலரும் முயற்சித்த நிலையில் கிட்டத்தட்ட 50 – 60 வருடங்களுக்கு பிறகு அதை சாத்தியமாக்கி இன்று சரித்திர சாதனை படைத்து வருகிறார் மணிரத்னம்.

‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை திரைப்படமாக்கி இரு பாகங்களாக உருவாக்கினார். முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்று 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது. தற்போது அதன் இரண்டாம் பாகமும் அதே போல நாளை 2023 ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முதல் பாகம் வெளியான போதும் இரண்டாம் பாகம் வெளியாகிற போதும் இந்த படம் தொடர்பாக கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு படக் குழுவினர் சென்று ப்ரோமோஷன் செய்து வந்தனர்.

படக்குழுவின் இந்த பிரமோஷன் சுற்றுப்பயணத்திற்கு சோலா டூர் சோழர்களின் பயணம் என்று பெயரிட்டு இருந்தனர்.

நாளை இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் இன்று ஏப்ரல் 27 ஆரம்பித்த சென்னையிலேயே நிறைவு செய்தனர்.

இன்று விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி லைக்கா தமிழ் குமரன் உள்ளிட்ட பலரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

எங்களின் இந்த திரைப் பயணம் கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்களாகி விட்டது. நாளை இந்த திரைப்படம் உங்கள் பார்வைக்கு வருகிறது.

இத்துடன் எங்கள் சோழர்களின் பயணம் நிறைவு பெறுகிறது என மேடை ஏறிய படக்குழுவினர் கண்கலங்கி பேசினர்.

முக்கியமாக த்ரிஷா ஐஸ்வர்ய லட்சுமி ஷோபித்தா விக்ரம் உள்ளிட்டோர் கண் கலங்கிய படியே பேசினர் என்பது.

கார்த்தி மற்றும் ஜெயம் ரவி கண்கலங்கவில்லை என்றாலும் அவர்கள் இருவரும் உருக்கமாக பேசினர். கார்த்தி என் தம்பியை போன்றவர் என்று பேசிய ஜெயம் ரவி இனி எப்போதுதான் நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வோம்.. தொடர்பில் இருப்போம் என்று உறுதிமொழி அளித்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன்

Vikram Trisha Karthi Jayam Ravi emotional moment

More Articles
Follows