தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சூர்யாவின் என்ஜிகே படத்தின் சூட்டிங்கை மறுபடியும் தொடங்கியுள்ளார் செல்வராகவன்.
இந்த மாத இறுதிக்குள் சூட்டிங்கை முடித்துவிட்டாலும் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளுக்கு போதுமான காலம் இல்லை என்பதாலும் பொங்கல் சமயத்தில் நிறைய போட்டி இருப்பதாலும் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து இருக்கிறார்களாம்.
2019 பொங்கலை முன்னிட்டு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் மோதுகின்றன.
இத்துடன் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படமும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இதன் பின்னர் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு கார்த்தி நடித்துள்ள தேவ் திரைப்படம் வெளியாகவுள்ளது.
எனவே இந்த படங்கள் வெளியாகும் சமயத்தில் நம் படம் வந்தால் சரியாக இருக்காது என்பதால் தன் நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தை 2019 கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம் சூர்யா.