சூர்யாவை ‘பேரழகனாக’ காட்டிய இயக்குனர் மரணம்

சூர்யாவை ‘பேரழகனாக’ காட்டிய இயக்குனர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director sasi-shankarமலையாளத்தில் திலீப் நடித்து பெரும் ஹிட்டடித்த படம் குஞ்ஞி கூனன்.

தமிழில் பேரழகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இங்கும் வெற்றிப் பெற்றது.

மலையாளத்தில் இயக்கிய சசி சங்கரே தமிழிலும் இயக்கி இருந்தார்.

இதில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இரு வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பகடை பகடை என்ற தமிழ்ப் படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சர்க்கரை நோயாளியான இவர் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு போகும் வழியிலே மரணமடைந்தார் . இவருக்கு வயது 57.

மேலும் மலையாளத்தில் 10 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த சசி சங்கருக்கு பீனா என்ற மனைவியும் விஷ்ணு என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விஜய்யை அழைக்கும் கலெக்டர்

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விஜய்யை அழைக்கும் கலெக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayஇயற்கையின் அழகால் சூழப்பட்ட மாநிலம் கேரளா என்று சொன்னால் அது மிகையல்ல.

இம்மாநிலத்தில் எல்லைப் பகுதிகளில் அடர்ந்த காடுகளை காணலாம்.

இதில் பாலக்காட்டில் துணை கலெக்டராக பணிபுரிந்து வருபவர் உமேஷ் கேசவன்.

இவர் அங்குள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் அட்டப்பாடி பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

அப்போதுதான் அங்குள்ளவர்களுக்கு எந்தவிதமான அரசின் சலுகைகளும் வந்து சேரவில்லை என தெரியவந்துள்ளது.

ஆனால் அவர்களின் ஒரே பொழுதுபோக்கு விஜய் படம் தானாம்.

எனவே அங்கு கல்வி மற்றும் அனைத்துவிதமான விழிப்புணர்வை ஏற்படுத்த விஜய்யை அழைக்க இருக்கிறாராம் துணை கலெக்டர் உமேஷ் கேசவன்.

ரஜினியை இயக்க போகும் ஐஸ்வர்யா-சௌந்தர்யா

ரஜினியை இயக்க போகும் ஐஸ்வர்யா-சௌந்தர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini family stillsஇந்திய சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்க பலர் முன்னணி இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால் யாரும் எதிர்பாரா வண்ணமாக தற்போது புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் மீண்டும் அதுபோன்ற போன்ற வாய்ப்பை தன் இரு மகள்களுக்கும் கொடுக்கவிருக்கிறாராம்.

கண்டக்டர் முதல் சூப்பர் ஸ்டார் வரை தன் தந்தை பயணித்த வாழ்க்கையை எழுதி வருகிறார் ஐஸ்வர்யா.

இந்த புத்தகம் நிறைவு பெற்ற உடன் இதற்கு திரை வடிவம் கொடுத்து, அதை ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இருவரும் இயக்கவிருக்கிறார்களாம்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் கலைஞர்கள் பற்றிய விவரங்களை இந்தாண்டின் இறுதியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

மீண்டும் மோதலுக்கு தயாராகும் விக்ரம்-தனுஷ்

மீண்டும் மோதலுக்கு தயாராகும் விக்ரம்-தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram and dhanushபிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தொடரி’ வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை வருவதால் நான்கு நாட்களை குறிவைத்து இப்படத்தை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள இருமுகன்  செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நாளை குறிவைத்தே படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

கடந்தாண்டும் விக்ரம் மற்றும் தனுஷின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொண்டது.

விக்ரம் நடித்த ’10 எண்றதுக்குள்ள’ மற்றும் தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ ஆகிய இரு படங்களும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய அடுத்த பிரபலம்.?

சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய அடுத்த பிரபலம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo stillsசிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ரெமோ.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீடு ஆகஸ்ட் இறுதியிலும் படத்தின் சென்சார் செப்டம்பரிலும் நடைபெற உள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளரான ஆர் டி ராஜா, தன் முதல் பட தயாரிப்பையே பிரம்மாண்டமாக செய்து வருகிறார்.

மேலும் விளம்பரங்களையும் வித்தியாசமான முறையில் கையாண்டு வருகிறார்.

கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய ஏரியாக்களின் உரிமைகள் விற்ற நிலையில், தற்போது வட ஆற்காடு, தெற்கு ஆற்காடு ஏரியாக்களை எஸ் பிக்சர்ஸ் சார்பாக ஜி.சீனிவாசன் என்பவர் வாங்கியிருக்கிறாராம்.

சிம்புவுடன் நடிக்க காத்திருந்த நடிகை காலமானார்

சிம்புவுடன் நடிக்க காத்திருந்த நடிகை காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu stillsஜி.வி. பிரகாஷ் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இப்படத்தில் மனீஷா யாதவின் பாட்டியாக பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று மரணமடைந்தார்.

இதுகுறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

“சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA) படத்தை இயக்கிவருகிறேன்.

என்னுடைய இரண்டாவது படத்திலும் ஜோதி லட்சுமிக்கு ஒரு கேரக்டர் கொடுத்திருந்தேன்.

ஆனால் அவர் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்தார். அதற்குள் அவரை மரணம் தழுவிக் கொண்டது” என்று தெரிவித்தார்.

பின்குறிப்பு: ‘ராகம் தாளம் பல்லவி’ படத்தில் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, மாயா என்று மூன்று கவர்ச்சி நடிகைகளை ஒரே பாடலுக்கு நடனமாட வைத்தவர் டி. ராஜேந்தர்.

இதில் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows