தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
“ஒரு நாள் கூத்து“ படத்தில் நாயகி நிவேதா பெத்துராஜின் தந்தையாக நடித்தவர் செந்தில்.
இப்படத்தில் கூட தினேஷிடம் “பொண்ண விட அவங்க அப்பா செமையா இருக்காருல“ என்று பாலா சரவணன் சொல்லியிருப்பார். அந்த அப்பாதான் நடிகர் செந்தில்.
இவர் தன் திரையுலக அனுபவம் பற்றி கூறியுள்ளதாவது..
“1995 ஆம் ஆண்டு பிலிம் இன்ஸ்டிட்யுடில் சேர்ந்து ஆக்டிங் கோர்ஸ் பயின்றேன்.
சில வருடங்கள் டி.வி சீரியல்களில் நடித்தேன்.
அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள சினிமா மேனேஜராக முடிவு செய்தேன்.
சத்யராஜ் அவர்களும் சினிமாவில் மேனேஜராக இருந்து நடிகராக ஆனவர்தான்.
அதன்பின்னர் மேனேஜராக இருந்தேன். படிப்படியாக சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.
இப்போது ஒரு நாள் கூத்து, ப்ருஸ் லீ, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நடித்துள்ளேன்.
ஒரு நாள் கூத்து படத்தில் நெல்சன், ஒரு நல்ல கேரக்டரை எனக்கு கொடுத்தார்.
எனது சினிமா என்ட்ரீ லேட் ஆனதால், தற்போது அப்பா வாய்ப்புகளே அதிகம் வருகிறது.
எனவே, விஜய், அஜித், மற்றும் த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட அனைவருக்கும் அப்பாவாக நடிக்க காத்திருக்கிறேன்.” என்று கூறினார்.