ஓடிடியில் காமெடி சரவெடி போட தயாராகி வரும் சந்தானம் படங்கள்

ஓடிடியில் காமெடி சரவெடி போட தயாராகி வரும் சந்தானம் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ஓரிரு படங்கள் சூப்பர் ஹிட்டும் ஓரிரு படங்கள் தோல்வியை தழுவியும் வருகின்றன.

ஹீரோவானாலும் தன்னுடைய படங்களில் நடிப்பவர்களை கலாய்த்து ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறார் சந்தானம்.

இவரது நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்கள் உள்ளன.

கொரோனா சூழ்நிலையால் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக இவை கிடப்பில் உள்ளன.

இந்நிலையில் ‘டிக்கிலோனா’ மற்றும் ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

‘சர்வர் சுந்தரம்’ படத்தை 2017ல் வெளியிட திட்டமிட்டனர்.

பல முறை இப்படத்தின் வெளியீட்டை அறிவித்தாலும் படம் வெளியாகவில்லை. இப்போது ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

சந்தானம் நாயகனாக நடித்துள்ள மற்றொரு படமான ‘டிக்கிலோனா’ படத்திற்கும் இதே நிலைதான்.

கார்த்திக் யோகி இயக்கத்தில் யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் அனகா, ஷெரின் கான்ச்வாலா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஹர்பஜன் சிங், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.

சந்தானம் மூன்று விதமான கெட்டப்களில் இந்தப்படத்தில் நடித்துள்ளார்.

டைம் டிராவலை மையப்படுத்தி ‘டிக்கிலோனா’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

டிக்கிலோனா படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

Santhanam next films to have direct OTT release

லிங்குசாமியின் ‘RAPO19’ பட ஹிந்தி சாட்டிலைட் உரிமை மட்டும் இத்தனை கோடி.??

லிங்குசாமியின் ‘RAPO19’ பட ஹிந்தி சாட்டிலைட் உரிமை மட்டும் இத்தனை கோடி.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் #RAP019 படத்தை N.லிங்குசாமி இயக்கி வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் #RAP019 படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க ஆதி வில்லனாக நடிக்கின்றார்.

நதியா மற்றும் ஜெய பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் கதாநாயகனான ராம் பொத்தினேனி சென்னையில் படித்தவர். பல வெற்றி படங்களில் நடித்துள்ள ராம் பொத்தினேனி சமீபத்தில் வெளியான Ismart Shankar, ரெட் என தொடர் வெற்றிகளை தெலுங்கில் கொடுத்துள்ளார்.

இவர் மிகவும் சரளமாக தமிழ் பேசுபவர்.

இயக்குனர் லிங்குசாமி – ராம் பொத்தினேனி – ஆதி என்ற காம்பினேஷனில் உருவாகும் இப்படத்தின் ஹிந்தி சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் 16 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

நடிகர் ராம் பொத்தினேனி நடித்த படங்களில் அதிக விலைக்கு ஹிந்தி சாட்டிலைட் விற்கப்பட்ட படம் என்ற பெருமையை “RAPO19” திரைப்படம் பெற்றுள்ளது.

மேலும் இப்படத்தின் தமிழ் சாட்டிலைட் உரிமையை பெற பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் அதன் விவரம் வெளியிடப்படும்.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்துள்ளது.

பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.

RAPO19 hindi satelite rights sold for a huge price

ஆறு கெட்டப்புகளில் நான்கு நாயகிகளுடன் அசத்தும் அரவிந்தசாமி.; டீசரும் செம ஹிட்!

ஆறு கெட்டப்புகளில் நான்கு நாயகிகளுடன் அசத்தும் அரவிந்தசாமி.; டீசரும் செம ஹிட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரவிந்தசாமி – செல்வா கூட்டணி இணைந்துள்ள ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

3 நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ஹிட் அடித்திருக்கிறது வணங்காமுடி டீசர்.

‘வானம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களை தயாரித்த கணேஷ் ரவிச்சந்திரன் தற்போது மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பாக ‘வணங்காமுடி’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

அரவிந்தசாமி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான இந்த டீசரில் அரவிந்தசாமியா இது? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அதே இளமையுடன் விதவித கெட்டப்புகளில் கவனம் ஈர்க்கிறார்.

இந்தப் படத்தில் நாயகிகளாக ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன், சாந்தினி நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா , ஜெயபிரகாஷ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தை ‘நான் அவன் இல்லை’ பார்ட் 1 & 2 ஹிட் படங்கள் கொடுத்த செல்வா இயக்கியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் செல்வா கூறியதாவது…‘

‘இது போலீஸ் கதை. வழக்கமான டமால்-டூமில் போலீஸ் கதையாக இல்லாமல் தன்னுடைய புத்திச்சாலித்தனத்தை கொண்டு ஹீரோ எப்படி குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார்..

அந்த வகையில் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் வழக்குகள் எப்படி உள்ளே நுழைகிறது என்பதையும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர் எவ்வித முயற்சி எடுக்கிறார் என்பதையும் விறுவிறு திரைக்கதையில் காட்சிப்படுத்தியுள்ளேன்.

அரவிந்தசாமியின் படங்களில் இது முக்கிய படமாக இருக்கும்,என்றார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

நடிகர், நடிகைகள்: அரவிந்தசாமி, ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன், சாந்தினி, தம்பிராமையா, ஜெயபிரகாஷ்..

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: செல்வா

இசை: இமான்

ஒளிப்பதிவு:கோகுல் பினாய்

எடிட்டிங்: ஆண்டனி

பாடல்கள்:விவேகா, அருண்ராஜா காமராஜ்

நடனம்:ஸ்ரீதர், தினேஷ்

மக்கள் தொடர்பு:ஜான்சன்

தயாரிப்பு: மேஜிக் பாக்ஸ் புரொடக்‌ஷன்
கணேஷ் ரவிச்சந்திரன்

Actor Arvindswami in 6 different avatars in Vanangamudi

ஜிவி. பிரகாஷ் & காயத்ரி இணையும் படத்திற்கு மாஸான டைட்டில் வைத்த சீனு ராமசாமி

ஜிவி. பிரகாஷ் & காயத்ரி இணையும் படத்திற்கு மாஸான டைட்டில் வைத்த சீனு ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் காயத்ரி ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இதில் நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் காயத்ரி.

இவர்களுடன் செளந்தர் ராஜா, அருள்தாஸ், மனோபாலா உள்ளிட்டோரும் உண்டு்.

பாடலாசிரியராக வைரமுத்து, இசையமைப்பாளராக ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தேனியில் நடந்த நிலையில் தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் இந்தப் படத்துக்கு ‘இடிமுழக்கம்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இப்பட டைட்டில் லுக் போஸ்டரை நடிகரும், எம்எல்ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சற்றுமுன் வெளியிட்டனர்.

GV Prakash and Seenu Ramasamy new film is titled Idi Muzhakkam

நிச்சயதார்த்தத்தை ரகசியமாக முடித்த நயன்தாரா..; சொல்லவே இல்ல..!!??

நிச்சயதார்த்தத்தை ரகசியமாக முடித்த நயன்தாரா..; சொல்லவே இல்ல..!!??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.

இவரே தயாரித்து நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே 2 முறை (சிம்பு மற்றும் பிரபுதேவா) லவ் ப்ரேக் அப் ஆனவர் நயன்.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 6 வருடங்களாக காதலில் உள்ளார்.

விரைவில் இவர்கள் திருமணம் செய்துக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாராவிடம் சில கேள்விகள் கேட்டுள்ளனர்.

அப்போது நயன் கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு இது நிச்சயதார்த்த மோதிரம். தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியிருக்கிறார் நயன்தாரா.

Nayanthara talks about her engagement ring

சினிமாவில் 43 ஆண்டுகளை நிறைவு செய்த ராதிகா.; அருண்விஜய் சூட்டிங்கில் பார்ட்டி..; சரத்குமார் வாழ்த்து

சினிமாவில் 43 ஆண்டுகளை நிறைவு செய்த ராதிகா.; அருண்விஜய் சூட்டிங்கில் பார்ட்டி..; சரத்குமார் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் ராதிகா.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி ரஜினி கமல் சரத்குமார் முதல் தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி வரை அனைவருடனும் நடித்துள்ளார்.

தமிழில் பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

தற்போதும் சினிமா, டிவி என மிகவும் பிசியாகவே இருக்கிறார் ராதிகா.

இன்றோடு இவர் திரைக்கு வந்து
43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

தற்போது டிரம் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு காரைக்குடியில் நடந்துவருகிறது.

அருண்விஜய் நாயகனாக நடிக்க அதிரடி இயக்குநர் ஹரி இயக்கிவரும் இப்படத்தில் இன்று ராதிகா நடித்து வந்தார்.

43 வருடம் நிறைவை ஒட்டி படகுழு சார்பில் பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் படபிடிப்பு இடைவேளையில் சர்பிரைசாக கேக் கொண்டுவரப்பட்டு பாட்டு பாடி உற்சாகமாகக் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

ராதிகா அவர்களுக்கு டைரக்டர் ஹரி, அருண்விஜய், தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், இணை தயாரிப்பாளர் ஜி.அருண்குமார், ஒளிப்பதிவாளர் கோபிநாத், யோகிபாபு, ராஜேஷ், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி மற்றும் அனைவரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

ராதிகாவிற்கு அவரது கணவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்… “அன்பு மனைவி மற்றும் சிறந்த தோழிக்கு, சினிமா துறையில் 43 ஆண்டுகள் புகழுடன் இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

நீங்கள் ஒரு சிறந்த நடிகையாக மட்டும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. குறை சொல்ல முடியாத நடிகையாகவும், தொழில் முனைவோராகவும் முத்திரை பதித்துள்ளீர்கள்.

இனி வரும் காலங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், வெற்றிகள் ஆகியவற்றை உங்களது நடிப்பின் மூலம் உருவாக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ராதிகா,” என பாராட்டி வாழ்த்தியுள்ளார் சரத்குமார்.

#43YearsOfRadhika

Sarath Kumar wishes his wife Radika on completing 43 years in cine industry

More Articles
Follows