செல்லப் பிராணிகளை விரும்பும் குழந்தைகளுக்கான படம்.; ‘ஓ மை டாக்’ பற்றி அருண்விஜய்

செல்லப் பிராணிகளை விரும்பும் குழந்தைகளுக்கான படம்.; ‘ஓ மை டாக்’ பற்றி அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமேசான் பிரைம் வீடியோவின் பிரிமியர் அறிவிப்பிற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தின் ஸ்னீக்பிக் வெளியானது.

2டி நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை சரோவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ளார். இதில் இளம் அறிமுக நடிகர் அர்னவ் விஜய், அருண் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார் மற்றும் வினய் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தைப் பற்றி நடிகர் அருண் விஜய் பேசுகையில்….

” டீஸரில் பார்த்ததைப் போல் இந்த திரைப்படம் ஒரு சிறு குழந்தைக்கும், அவரது செல்ல நாயான சிம்பாவுக்கும் இடையே தனித்துவமான நட்பு மற்றும் அழகான – வேடிக்கையான தருணங்களை காண்பிக்கிறது.

இந்த படத்தின் திரைக்கதையை முதன்முதலாக கேட்டபோது, இது வித்தியாசமான திரைக்கதை என்பதை நான் உணர்ந்தேன்.

ரிலீசுக்கு வரிசை கட்டிய 5 படங்கள்..; அண்ணாமலையாரிடம் ஆசி பெற்ற அருண்விஜய்

இந்தத் திரைக்கதையில் ஏராளமான உணர்வுகள் இடம்பெற்றிருந்தன. பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், செல்லப்பிராணிக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பந்தத்தை மையப்படுத்தி இருந்தது.

தந்தையும், மகனும் திரைக்கதையில் அழகாக பிணைக்கப்பட்டு இருந்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியடையும் வகையில் ஒரு முழுநீள குழந்தைகள் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.

இந்தப்படத்தில் என்னுடைய மகன் அர்னவ் நடித்தது மிகவும் அதிர்ஷ்டம் என்றே நான் நம்புகிறேன்.” என்றார்.

ஒவ்வொரு குழந்தைகளும், செல்ல பிராணி மீது அன்பு கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பாக ‘ஓ மை டாக்’ உருவாகி இருக்கிறது.

அர்ஜுன் மற்றும் அவரது நாய்க்குட்டி சிம்பாவை பற்றிய இதயத்தை வருடும் கதை. ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும் விரும்பி பார்த்து ரசித்து கொண்டாடும் திரைப்படம் இது. குழந்தைகள் மற்றும் அவர்களின் விருப்பத்திற்குரிய செல்லப்பிராணிகளின் உலகத்தில்.. அவர்களின் ஆசைகள், முன்னுரிமை, அக்கறை, துணிச்சல், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற அன்பு, விஸ்வாசம் ஆகியவை குறித்து இந்த திரைப்படம் ஆராய்கிறது.

OH MY DOG..; நாய்க்கு நாலாவது பொறந்தநாள் கொண்டாடிய ‘யானை’ நட்சத்திரம்

‘ஓ மை டாக்’ படத்தை ஜோதிகாவும் சூர்யாவும் தயாரித்துள்ளனர்.

ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் எஸ் ஆர் ரமேஷ் பாபு ஆகியோர் ஆர். பி டாக்கிஸ் சார்பாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்திருக்கிறார்.

கோடை விடுமுறையை ‘ஓ மை டாக்’ உடன் கொண்டாடுங்கள்.

ஏப்ரல் 21ஆம் தேதியன்று இந்தியா மற்றும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரத்யேகமாக உலகளாவிய பிரிமியரில் ஃபேமிலி என்டர்டெய்னராக வெளியாகிறது.

Oh My Dog – A magical tale about a kid and his pet

‘வெங்காயம்’ நடிகர் லிட்டில் ஜான் மரணம்.; குடும்பத்திற்கு நடிகர் அலெக்சாண்டர் உதவி

‘வெங்காயம்’ நடிகர் லிட்டில் ஜான் மரணம்.; குடும்பத்திற்கு நடிகர் அலெக்சாண்டர் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யராஜ் நடித்த வெங்காயம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த காமெடி நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

தற்போது வரை மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் படைவீடு அல்லி நாயக்கன்பாளையம் என்ற ஊரில் வசித்து வந்த தனசேகரன் என்ற லிட்டில் ஜான் வயது 43 இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இதை அறிந்த ஊடக நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்று செய்தி சேகரித்து தொலைக்காட்சிகளில் வெளியிட்டிருந்தார்கள்.

‘வெங்காயம்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் சௌந்தரராஜன் ஊடகங்கள் வாயிலாக லிட்டில் ஜான் இறந்த செய்தியை பார்த்திருக்கிறார்.

பணிச்சுமை காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை இருப்பினும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் சக கலைஞனின் குடும்பத்திற்கு உதவ நினைத்து செய்தி வெளியிட்டிருந்த செய்தியாளர்களை தொடர்புகொண்டு தான் லிட்டில் ஜான் குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று என கேட்டுள்ளார்.

அதன்படி தனது அலுவலக பணியாளர்களை அனுப்பி ரூபாய் 50 ஆயிரத்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொடுக்க வைத்துள்ளார்.

லிட்டில் ஜான் மிகப் பெரிய நடிகனாக இல்லாதபோதும் ஒரு கலைஞனை மதிக்கும் விதமாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் இதுபோல் நற்செயல் நடந்துள்ளது.

சக கலைஞனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அலெக்சாண்டர் சௌந்தரராஜன் அவரது செயல் பாராட்டுதலுக்குரியது.

Actor Alexander helps late actor little john family

முதல்வர் ரங்கசாமி- நடிகர் விஜய் பேனர்கள்.; வேற மாரி தளபதி ரசிகர்கள்

முதல்வர் ரங்கசாமி- நடிகர் விஜய் பேனர்கள்.; வேற மாரி தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் 13ஆம் தேதியே வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமெங்கும் மிகப்பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பேனர்களில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி & விஜய் சந்தித்த புகைப்படம் இடம்பிடித்துள்ளது. இந்த விவகாரம் புதுச்சேரி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி-விஜய்-அஜித்தான் ஹீரோ; நான் இல்ல… சிவகார்த்திகேயன் ஃபீலீங்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சென்னை வந்தபோது நடிகர் விஜய்யை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பு அப்போதே புதுச்சேரி அரசியல் கட்சியினரிடயே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில விஜய் மக்கள் இயக்க தலைவருமான புஸ்சி ஆனந்த் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் பலமுறை சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றார்.

இந்நிலையில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதால் இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரமாண்ட கட்அவுட் – பேனர்கள் வைத்துள்ளனர்.

ரசிகர்கள் வைத்துள்ள பெரும்பாலான பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி படமும், சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி விஜயை சந்தித்த படமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay with CM Rangasamy in the Banners of Beast in Pondy

‘பீஸ்ட்’ படத்திற்கு ரூ 1500 வரை டிக்கெட்.; தியேட்டரிலேயே நான்கு நாட்களுக்கு கட்டணம் உயர்த்த முடிவு.?

‘பீஸ்ட்’ படத்திற்கு ரூ 1500 வரை டிக்கெட்.; தியேட்டரிலேயே நான்கு நாட்களுக்கு கட்டணம் உயர்த்த முடிவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் 13ஆம் தேதியே வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமெங்கும் மிகப்பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது.

பீஸ்ட் படத்திற்கான முன்பதிவு தமிழகத்தில் அமோகமாக உள்ளது.

சென்னையில் ரூ 1000 முதல் 1500 வரை டிக்கெட்டுக்கள் விற்கப்படுகிறது.

நானும் விஜய் ரசிகர்தான்.; ‘பீஸ்ட்’ ட்ரைலருக்கு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பாராட்டு

தமிழகத்தில் பல ஊர்களில் டிக்கெட் கட்டணம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இதை தடுக்கத்தான் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

இந்த நிலையில், புதுச்சேரி திரையரங்குகளில் வரும் 13 முதல் 17ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக போர்டுகள் தயாரித்துள்ளனர். இது இணையத்தளங்களில் வைரலானது.

அதில் 3 ஆம் வகுப்பு கட்டணம் ரூ. 50ல் இருந்து ரூ.150ம், இரண்டாம் வகுப்பு ரூ. 75ல் இருந்து ரூ. 175 ம், முதல்வகுப்பு கட்டணம் ரூ. 100ல் இருந்து ரூ.200ம், பால்கனி ரூ. 150ல் இருந்து ரூ. 250ம், பாக்ஸ் ரூ. 160ல் இருந்து ரூ. 260ம் என்று உயர்த்தப்படுவதாக எழுதப்பட்டிருந்தது.

இதனால் சமூக ஆர்வலர்கள் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் இதுகுறித்த தரப்பில் விசாரித்தபோது…

“புதுச்சேரியில் திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி தரவில்லை” என தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் புதுச்சேரியில் ‘பீஸ்ட்’ திரைப்படத்துக்கு டிக்கெட் கட்டணம் நான்கு நாட்களுக்கு மட்டும் அனைத்து வகுப்புகளிலும் ரூ. 100 உயர்த்தப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

High ticket price for Beast movie in pondicherry

படிக்காமல் பார்வேட் செஞ்சிட்டேன்.. மன்னிப்பு கேட்க வெட்கமில்லை..; கோர்ட்டில் எஸ்.வி.சேகர் மன்னிப்பு

படிக்காமல் பார்வேட் செஞ்சிட்டேன்.. மன்னிப்பு கேட்க வெட்கமில்லை..; கோர்ட்டில் எஸ்.வி.சேகர் மன்னிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி வகித்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அப்போது, பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த கண்டனங்களை அடுத்து அந்த பதிவுகளை நீக்கினார் SVE சேகர்.

ஆனாலும் சர்ச்சை பதிவு தொடர்பாக சென்னை காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

நடிகர்கள் சம்பளமே சங்கத்திற்கு போதும்; அஜித் ரகசியம் பற்றி எஸ்வி. சேகர்

இந்த புகாரின் பேரில் எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கப்பட்டு, மன்னிப்பும் கேட்கபட்டது.

மேலும் எஸ்.வி.சேகர் தரப்பில் நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஜாதி கருத்து மோதல்; ரஜினி உங்களுக்கு புரிய வைப்பார் ரஞ்சித்… – எஸ்வி.சேகர்

அப்போது…

அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தை படித்து பார்க்காமல் பார்வேர்ட் செய்தேன்.

தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை என கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறி மனு தாக்கல் செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது குறித்த நடிகர் எஸ்.வி.சேகரின் நிலைப்பாட்டை, நான்கு புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமான பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Women journos slam sexist comment by TN BJP leader SVe Sekher

Veteran கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடிப்பில் உருவான முதல் தமிழ் சினிமா

Veteran கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடிப்பில் உருவான முதல் தமிழ் சினிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அசல் ஓய்வுபெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடித்துள்ள யதார்த்த படமாக உருவாகியுள்ளது ‘போலாமா ஊர் கோலம்’.

இப்படத்தை நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கியுள்ளார்.

கஜசிம்ஹா மேக்கர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். பிரபுஜித் படத்தை இயக்கியிருக்கும் நாகராஜ் பாய் துரைலிங்கம் கலாபிரபு தொடங்கி விக்னேஷ் சிவன், ஹெச். வினோத் வரை பல இயக்குநர்களிடம் பல்வேறுபட்ட படங்களில் துணை, உதவி, இணை இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்.

இதில் கதாநாயகனாக பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பிரபுஜித், ஒரு நடிகராக ஏற்கெனவே சுட்டுப் பிடிக்க உத்தரவு ,ஜகமே தந்திரம், பேட்ட,போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

இவர்தன் பள்ளி, கல்லூரி நண்பர்கள் உதவியில் கிரவுட் பண்டிங் எனப்படும் கூட்டு நிதிப் பங்களிப்பு முறையில் தயாரித்துள்ளார்.

இன்னொரு முக்கிய பாத்திரமேற்றுள்ள மதுசூதன் பெரிசு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.

இதில் நாயகியாக நடித்துள்ள சக்தி மகேந்திரா பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர்.

முதன் முதலாக இதில் நாயகியாக நடித்துள்ளார். கதாநாயகன் கதாநாயகியை இயக்குனர் அறிமுகம் செய்துள்ளார்.

இவர்கள் தவிர ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபிக்,ஆதீ இராசன் போன்றோரும் நடித்துள்ளனர்
.இவர்களை இயக்குனர் அறிமுகம் படுத்தி உள்ளார்.

அதுமட்டுமல்ல 1980களில் மாநில, தேசிய அளவில் பங்கெடுத்துப் புகழ்பெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அவர்கள் இன்றும் விளையாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களைச் சுற்றி இந்தக் கதை சுழல்கிறது.

ஓய்வுபெற்ற கால்பந்தாட்ட வீரர்கள் இப்படத்தில் நடித்து இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை உண்டுபண்ணி உள்ளது.

” இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது.

ஒரு மூத்த கால்பந்தாட்ட வீரர் தனது காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பயணம் மேற்கொள்கிறார்.

அவர் தனது பயணத்தில் சந்திக்கும் அழகிய காதல் மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான, அதிர்ச்சியான, சுவையான, சுவாரஸ்யமான சம்பவங்களின் கால் பந்தாட்டம் தொகுப்பு தான் இந்தப் படம். அந்தப் பயணத்தில் பல்வேறு முடிச்சுகளும் திருப்பங்களும் இருக்கும்.படமாகப் பார்க்கும் போது பார்வையாளர்களைக் கட்டிப் போடும்படி விறுவிறுப்பாக இருக்கும்” கால்பந்தாட்டத்தையும் அதன் அசல் தன்மையோடு ஊடுருவச் செய்து கலகலப்பான சுவாரசியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது என்றார் இயக்குநர்.

இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி அதாவது, 80%ஆந்திராவிலும், 20% தமிழ்நாட்டிலும் நடைபெற்றுள்ளது.

ஒளிப்பதிவு வைஷாலி சுப்பிரமணியம். இவர் 70 சதவிகித காட்சிகளைப் படம் பிடித்துள்ளார். எஞ்சிய 30 சதவிகித பகுதிகளை டேவிட்பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் தீபக்.
படத்தில் ஒரே ஒரு சண்டைக் காட்சியும் ஒரே ஒரு பாடல் காட்சியும் உண்டு.

சண்டைக்காட்சிகளை குன்றத்தூர் பாபு அமைத்துள்ளார்.

இசை சமந்த் நாக். பாடலை அனுராதா எழுதியுள்ளார். பின்னணி இசை ஏ. ஆர். ரஹ்மானின் கேஎம் இசைப்பள்ளியில் கற்பிக்கும் கே.எம்.ரயான். இவர் ஏ. ஆர். ரகுமானின் மாணவர். பின்னணி இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது இயக்குனர் மகிழ்ச்சியில் உள்ளார்.

படத்தில் வரும் சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான காட்சிகள் ரசிகர்களைக் கவரும் . அதை கொஞ்சமும் சமரசம் இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கி இருப்பதாக இயக்குநர்
நாகராஜ் பாய் துரைலிங்கம் கூறுகிறார்.

உலகிலேயே veteran கால்பந்தாட்ட 20 வீரர்களை நடிக்க வைத்து உருவாக்கப்பட்டுள்ள முதல் படம் இது “என்று பெருமையுடன் கூறுகிறார் இயக்குநர் .

கால்பந்தாட்டப் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு யதார்த்தமான திரை அனுபவம் தரும். வணிக ரீதியிலான திருப்தியைத் தரும் என்று நம்புகிறார் இயக்குநர். இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

“Polama oorgolam” becomes the first-ever Tamil movie to feature real-life veteran football players

More Articles
Follows