தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
25 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார் அருண்விஜய். ஆனால் 2015ல் என்னை அறிந்தால் படம் வெளியான பிறகுதான் இவருக்கு சரியான ரீஎன்ட்ரி கிடைத்து வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறார்.
ஆனால் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளே ஆகியுள்ளது.
ஒரு கட்டத்தில் மறைமுகமாக அருண்விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு லேசான மோதல் உருவானது. இது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று மே 9ல் நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே தன் மகனுக்கு உங்கள் ஆசி மற்றும் வாழ்த்துக்கள் தேவை என அருண்விஜய் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
(சமீபத்தில் வெளிவந்த ‘ஓ மை டாக்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஆர்னவ்.)
இதனையடுத்து “இனிய பிறந்தநாள் தம்பி. ‘ஓ மை டாக்’ படத்தில் உங்களது நடிப்பை ரசித்தேன். உங்களது நடிப்பிற்கும், படிப்பிற்கும் எனது வாழ்த்துகள்,” என ஆர்னவைப் பாராட்டியிருந்தார் சிவகார்த்திகேயன்.
அதற்கு அருண் விஜய், “உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பிரதர். ஆர்னவ்வை வாழ்த்தியதில் நீங்கள் உண்மையில் அன்பானவர். இதை நிச்சயம் ஆர்னவ்விடம் தெரியப்படுத்துகிறேன்,” என்று நன்றி தெரிவித்துள்ளார் அருண்.
ஆக இந்த சம்பவத்தால் தற்போது இவர்களின் மோதல் முடிவுக்கு வந்துள்ளது எனலாம்.
யாரு மாஸ்ன்னு விவஸ்தை இல்லையா?; சிவகார்த்திகேயனை சீண்டினாரா அருண்விஜய்?
Sivakarthikeyan puts an end to his clash with Actor Arun Vijay