‘தமிழ் ராக்கர்ஸ்’ அப்டேட் : பைரசியை அழிக்க ஏவிஎம் நிறுவனத்தில் அருண் விஜய்

‘தமிழ் ராக்கர்ஸ்’ அப்டேட் : பைரசியை அழிக்க ஏவிஎம் நிறுவனத்தில் அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

இத்தகையப் பெரும் செய்தி திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர்.

முதல் முறையாக இந்த தலைப்பில் ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நடத்தி, இந்த வலையில் இருக்கும் ஆழ்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக இந்த தொடர் இருக்கும்.

எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் உருக்கமான கதைகளுக்கு பெயர் போன சோனி லிவ் நிறுவனம், தங்களது அடுத்த தமிழ் அசலாக “தமிழ் ராக்கர்ஸ்” எனும் தொடர் மூலம் செய்தி திருட்டு எனும் தலைப்பில் ஒரு வித்தியாசமான கதை தளத்தின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் ஒரு திரைக்கதை அமைத்துள்ளனர்.

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற வெற்றி பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், தமிழ் ராக்கர்ஸ் ஆகஸ்ட் 19 முதல் சோனி லிவ் இல் ஒளிப்பரப்பாக உள்ளது.

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட இந்த தொடர், நேயர்களை ருத்ரா எனும் ஒரு காவல் அதிகாரியின் பயனம் மூலமாக விவரிக்கிறது.

இதில் நடிகர் அருண் விஜய் நடிக்கின்றார். ருத்ரா என்பவன் காலம் கடந்து, அடங்க மறுக்கும் ரசிகர்கள் மற்றும் மிகவும் ஆபத்தான ஆற்றல் மிக்க இணைய தள திருடர்கள் மீது போர் தொடுப்பவனாக காட்டப்படுகின்றான்.

ஒரு மிக பெரிய தயாரிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை மக்கள் பெரிதாக எதிர்பார்க்கும் ஒரு படத்தை எவ்வாறு காப்பாற்றுகிறான் என்பதே கதைத்தளம்.

இத்திரைப்படத்தினை நாட்டில் மிகவும் பழமையான மற்றும் மிகவும் பிரபலமாக உள்ள AVM தயாரிப்பு நிறுவனம் தனது OTT உலகின் நுழைவு வாயிலாக இந்த தொடரினை தயாரிக்கிறது.

மனோஜ் குமார் கலைவானன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாதின் எழுத்தில் உருவான இந்த தொடர், அருண் விஜய், அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண் குமார் ஆகியோரை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

பதிவான கருத்துக்கள்

அருணா குகன், தயாரிப்பாளர், AVM நிறுவனம்..

தமிழ் ராக்கர்ஸ் ஒரு நல்ல ஆழமான கதை களத்தை கொண்டது. நாங்கள் மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம், கலை துறையினர் படும் இன்னல்கலை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாக காட்டிஉள்ளனர். சோனி லிவ் நிறுவனத்தினை தனது ஒளிப்பரப்பு பங்குதாரராக கொண்டது எங்களுக்கு பலத்தினை மேலும் கூட்டியிள்ளது.

தொலைநோக்கு சிந்தை உள்ள இயக்குனர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலத்தினை தந்ததுடன் மட்டும் இல்லாமல், மக்களுக்கு ஒரு உணர்வு பூர்வமான ஒரு பந்தத்தினை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது.

அறிவழகன், இயக்குனர்-

பைரசி, ஹால் காபி, டோரன்ட் டவுன்லோட் போன்ற வார்த்தைகள் என்ன தான் கேள்வி பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் உலகிற்கு தெரியாது.

தமிழ் ராக்கர்ஸ் ஒரு சுவாரஸ்மான திரில்லர் மூலம் அருண் விஜய் தனது ருத்ரா எனும் கதா பாத்திரம் மூலம் மக்களை பைரசி உலகத்தின் சவால்களுக்கு அழைத்து செல்கிறது.

அருண் விஜய், நடிகர் –

இந்த தொடரின் பகுதியாக இருப்பது ஒரு மிக பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்கு தேவைப்படும் தொடராக இதனை பார்க்கிறேன். செய்தி திருட்டு என்பது காலம் காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றதும்.

இந்த தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும். மற்றும் எனது கதாபாத்திரமான ருத்ரா என்பவன் எப்படி இதனை முடிவிற்கு கொண்டு வருகின்றான் என்பதே கதை.

எனவே நான் மிகவும் ஆவலுடன் இந்த தொடரை சோனி லிவ் இல் காண்பதற்கு காத்திருக்கின்றேன். திறை துறையில் அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Arun Vijay starrer Tamil Rockers update

ரஜினி-கமலின் ராசியான நாயகி அமலா நடித்த புதிய படம் செப்டம்பர் 9ல் ரிலீஸ்

ரஜினி-கமலின் ராசியான நாயகி அமலா நடித்த புதிய படம் செப்டம்பர் 9ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்தியாசமான கதைக்களங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்க தவறியதில்லை. அப்படிய வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

அந்த நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது ‘கணம்’.

இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ‘அம்மா’ பாடலுக்கு சமூக வலைதளத்தில் வெகுவாக பாராட்டு கிடைத்தது.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அமலா, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1980 களில் ரஜினி கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் அமலா. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் நடிப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையைச் சார்ந்த திரைப்படம் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக மெனக்கிடலை படக்குழு அளித்து வருகிறது. பணிகள் முடிந்து செப்டம்பர் 9-ம் தேதி பிரம்மாண்டமாகப் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவான திரைப்படம் என்பதால், தமிழில் வெளியாகும் அதே நாளில், தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்கிற பெயரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

‘கணம்’ படம் குறித்த பல ஆச்சரியமூட்டும் அறிவிப்புகளைத் தொடர்ச்சியாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

Get ready to roll back your memories with #Kanam
In Theaters from September 9th ❤️

@ImSharwanand @riturv @amalaakkineni1 @actorsathish @thilak_ramesh @JxBe @sujithsarang @sreejithsarang @twittshrees @prabhu_sr @DreamWarriorpic @johnsoncinepro

#கணம்
#KanamFromSep9th

Kanam will release on september 9th

கௌதம் மேனன் இயக்கத்தில் இணைந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்

கௌதம் மேனன் இயக்கத்தில் இணைந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் 9ஆம் தேதி நடிகை நயன்தாரா் – இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதல் திருமணம் நடைபெற்றது.

திருப்பதியில் நடத்த திட்டமிட்டு இருந்த இந்த திருமணம் அங்கு அனுமதி கிடைக்காத காரணத்தினால் சென்னை அருகே இந்த திருமணத்தை நடத்தினர்.

இந்த திருமணத்தில் பிரபல நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டாலும் பிரபலங்களின் படத்தை வெளியிடாமல் தம்பதியினர் படத்தை மட்டுமே வெளியிட்டனர்.

இவர்கள் திருமண நிகழ்வினை பிரபல ஓடிடி தளத்திற்கு விற்று விட்டதால் எந்த படங்களும் வெளியாகவில்லை.

திடீரென ஒரு மாதம் கழித்து திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்களான ரஜினிகாந்த் ஷாரூக்கான் சூர்யா கார்த்தி விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களை வெளியிட்டனர்.

இந்த நிலையில் தற்போது இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் netflix தளம் இவர்கள் திருமணம் தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் காதலை பற்றி சொல்லியுள்ளனர். இதை ஒரு டாக்குமென்டரி வடிவில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்க நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விரைவில் இது netflix ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

Netflix has partnered with #GauthamVasudevMenon and #RowdyPictures for this documentary, which will be released soon.

#NayantharaBeyondTheFairytale #Netflix #GVM

Nayanthara – Vignesh Shivan joins for Gautham Menon

3 மொழிகளில் ‘கோப்ரா’.; ரிலீஸ் தேதியுடன் அதிரடி போஸ்டரை வெளியிட்டது படக்குழு

3 மொழிகளில் ‘கோப்ரா’.; ரிலீஸ் தேதியுடன் அதிரடி போஸ்டரை வெளியிட்டது படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘கோப்ரா’.

விக்ரம் இந்த படத்தில் மதியழகன், கோப்ரா, பிளாக் ஹோப்ரா உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறாராம்.

கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி செட்டி இதில் நாயகியாக நடித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைகின்றனர்.

இவர்களுடன் மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, பத்மபிரியா, முகமது அலி பெய்க், கனிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக கே எஸ் எஸ் லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகிறது என படக் குழுவினர் சற்றுமுன் அறிவித்தனர்.

இத்துடன் ஒரு புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Chiyaan Vikram’s Cobra release date announced

அமலாபால் என்றதும் சிலரின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது.; நாயகி முன்னிலையில் டைரக்டர் ஓபன் டாக்

அமலாபால் என்றதும் சிலரின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது.; நாயகி முன்னிலையில் டைரக்டர் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’.

ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

”2016 ஆம் ஆண்டில் இந்த கதையினை கதாசிரியர் அபிலாஷ் பிள்ளையுடன் இணைந்து திரைக்கதை எழுதினோம். பல்வேறு தயாரிப்பாளர்களை சந்தித்து இந்த கதையை கூறிய போது ஒவ்வொருவரும் பல ஆலோசனைகளை வழங்கி, படத்தின் மைய நோக்கத்தை திசை திருப்பவே முயற்சித்தார்கள்.

இதனால் சோர்வு ஏற்பட்டது. இந்த தருணத்தில் நண்பர் ஒருவர் மூலமாக அமலா பால் அவர்களை சந்தித்தோம். அவரிடம் கதையைக் கூறியதும், ‘பிடித்திருக்கிறது. நடிக்கிறேன்’ என்றார்.

அதன் பிறகு தயாரிப்பாளரை தேடினோம். அமலாபால் நாயகி என்றதும் அவர்களின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. பிறகு ஒரு கட்டத்தில் இந்த படைப்பை நானே தயாரிக்கிறேன் என அமலபால் நம்பிக்கை அளித்தார். அந்த தருணம் முதல் இந்த தருணம் வரை அவர் எனக்கு கடவுளாகவே காட்சித் தருகிறார்.

2018 ஆம் ஆண்டில் இதற்கான பணிகளை தொடங்கினோம். இடையில் கொரோனா பாதிப்பு காரணமாக படத்தின் பணிகள் மிக மெதுவாக நடைபெற்றது. இருப்பினும் படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். படத்தை வெளியிட நினைத்த போது, தவிர்க்க இயலாத பல தர்ம சங்கடங்களை எதிர்கொண்டோம். பிறகு ஒரு வழியாக இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார், எங்களது ‘கடாவர்’ திரைப்படத்தினை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட்டு, எங்களது கனவை நனவாக்கியத்துடன், பிரம்மாண்டமாக வெளியிட்டு எங்களை பெருமைப்படுத்தியிருக்கிறது. இதற்காக நாங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.‌

கடாவர் – ஒரு மெடிக்கல் க்ரைம் திரில்லர். காவல்துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் பத்ராவாக நடிகை அமலாபால் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த கதாபாத்திரத்திற்காக சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் இடம்பெற்றிருக்கும் பிணவறைகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். அவரது கதாபாத்திரம் திரையில் நேர்த்தியாக தோன்றுவதற்கு, அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியும் ஒரு காரணம். ”என்றார்.

‘கடாவர்’ படத்திற்கு கதை எழுதிய அபிலாஷ் பிள்ளை பேசுகையில்…

” நான் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றினாலும், என்னுடைய கனவு சினிமா தான். 2010 களில் என்னுடைய சகோதரர் இறந்தார். அவரது உடல், உடற்கூறாய்வு செய்வதற்காக பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு சென்று பார்வையிட்ட போது தான் இப்படத்திற்கான கதை கரு உருவானது. அதன் பிறகு இயக்குநர் அனூப் எஸ் பணிக்கருடன் இணைந்து ஓராண்டு திரைக்கதையை எழுதினோம். பிறகு இந்த கதையை அமலா பால் தயாரிக்க விருப்பம் தெரிவித்த போது, எங்களுக்கு இருந்த கவலை அகன்றது. அவர் இந்த திரைப்படத்தை பல தடைகளை கடந்து உருவாக்கினார்” என்றார்.

‘கடாவர்’ படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகியுமான நடிகை அமலா பால் பேசுகையில்…

“கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். ரசிகர்களையும் பார்வையாளர்களையும் நேரில் காணும் போது உற்சாகம் பிறக்கிறது. அபிலாஷ் பிள்ளையும், இயக்குநர் அனூப் எஸ். பணிக்கரும் என்னை சந்தித்து ‘கடாவர்’ படத்தின் கதையை கூறியதும், என்னுடைய கதாபாத்திரம் புதுமையானதாகவும், வலிமையானதாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

பிறகு அவர்கள் தயாரிப்பாளர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டதை கண்டு, தயாரிப்பாளராகவும் பணியாற்ற சம்மதம் தெரிவித்தேன்.

இந்தத் தருணத்தில் எனக்கு உற்ற துணையாக திகழ்ந்த என்னுடைய தாயார் மற்றும் சகோதரருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்ட போது பல வடிவங்களில் தடைகள் உருவானது.

இந்தப் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர். கடவுளின் ஆசியாலும், மறைந்த என்னுடைய தந்தையாரின் ஆசீர்வாதத்தினாலும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எங்களின் கடாவர் படத்தினை ஐந்து மொழிகளில் வெளியிட ஒப்புக்கொண்டது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓ .டி. டியில் ‘கடாவர்’ வெளியாகிறது.‌ பல மெடிக்கல் கிரைம் திரைப்படங்கள் வெளியானாலும், தடயவியல் துறையில் இதுவரை படைப்புகள் அதிகமாக வெளியானதில்லை. காவல்துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என அனைத்து விசயங்களும் நேர்த்தியாக இருக்கும். ரசிகர்கள் வழக்கம்போல் இந்த ‘கடாவர்’ திரைப்படத்திற்கும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

When Amalapal came, the expectations of some people were different.;

டீ கடையில் உலக அரசியல்.. அதிதி ஒரு ஆலியா பட்.. தங்க தட்டில் தாலாட்டும் 2டி.. வளர்த்த பெண்ணே ஜோடி.; ‘விருமன்’ விழா சுவாரஸ்யங்கள்

டீ கடையில் உலக அரசியல்.. அதிதி ஒரு ஆலியா பட்.. தங்க தட்டில் தாலாட்டும் 2டி.. வளர்த்த பெண்ணே ஜோடி.; ‘விருமன்’ விழா சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் “விருமன்”.

முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

பத்திரிகையாளர் சந்திப்பில்

இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம்புலி பேசும்போது,

மதுரையிலேயே நன்றாக பேசிவிட்டோம். வாடிவாசலில் இருந்து வருகிற சத்தம் போல் பேரன்பு மிக்க ரசிகர்களின் ஆரவாரம். அமைதியாக இருங்கள் என்று கூறியே சூர்யா சாருக்கும், கார்த்தி சாருக்கும் தொண்டை தண்ணீர் வற்றிவிட்டது. இப்படம் ஆரம்பித்ததில் இருந்தே விழாவாகவே இருக்கிறது. இப்படத்தை திரையில் பார்க்கும்போது அழகாக இருக்கிறது. கார்த்தி சாரை திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. மண் சார்ந்த படைப்புகளுக்கு சரியான தேர்வாக முத்தையாவை 2டி தேர்ந்தெடுத்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி முத்தையா கூறும்போது நாமும் இப்படத்தில் இடம்பெற வேண்டும் என்று அவருடன் தொடர்பில் இருந்தேன்.

முத்தையா ஒருவரிடம் கதை கூறினால், அவர் அப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று அர்த்தம். ஒரு காட்சியை அவரிடம் கூறினால், அதற்கு பல காட்சிகளை கூறுவார். எல்லாவற்றையும் பற்றி அறிந்திருப்பார். எப்போதும் அவருடைய கொள்கைகளை மட்டும் வைத்திருப்பார். நிறைய கதைகளை வைத்துள்ளார். எப்போதும் சோர்வாகவே மாட்டார். சட்டை அணிவதில் கூட நெறியைப் பின்பற்றக் கூடியவர்.

எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவர் கார்த்தி. படப்பிடிப்பு முடிந்தால் உடற்பயிற்சி செய்வார். வேறு யாரைப் பற்றியும் பேச மாட்டார். அமெரிக்காவில் படித்து வந்தவர் போல அல்லாமல் மிகவும் இயல்பாக இருப்பார். நான் மும்பை சென்று வந்தாலே இரண்டு நாட்களுக்கு ஹிந்தி மொழியில் கலந்து தான் பேசுவேன்.

அதிதி தான் என்னுடைய ஆலியா பட். அப்பாவை மட்டும் பின்பற்றுங்கள் அதிதி. அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் என்றார்.

நடன இயக்குனர் ஷோபி பேசும்போது,

நீண்ட காலமாக முத்தையாவுடன் பணியாற்ற வேண்டும் என்ற கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது. இப்படத்தில் நடனம் சாதாரணமாக இருக்கக் கூடாது. பிரமாண்டமாக வரவேண்டும் என்று கூறினார்கள். அதற்காக சில விஷயங்கள் செய்திருக்கிறோம். திரையில் பார்க்கும்போது நாங்கள் நினைத்ததை விட பிரமாண்டமாக வந்திருக்கிறது.

அதிதி நாம் என்ன கூறினாலும் தயங்காமல் செய்துவிடலாம் என்று அசால்ட்டாக கூறி நடனமும் ஆடிவிடுவார். முதல் படத்திலேயே இந்த இடத்தில் ஆட வேண்டும், இந்த இடத்தில் முகபாவனை வேண்டும் என்றாலும் அதன்படியே அழகாக செய்துவிடுவார் என்றார்.

பாடலாசிரியர் சினேகன் பேசும்போது,

விருமன் படத்தின் மதுரை விழாவில் அழைக்காததை வருத்தம் தெரிவித்திருந்தேன். அதை மிகப் பெரிய வைரலாக்கி விட்டார்கள். அதற்காக 2டி நிறுவனத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். 10 படங்களில் 2 படங்களுக்குத்தான் எங்களைப் போன்ற பாடலாசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அப்படி 2 படங்களில் ஒன்றாகத்தான் இப்படத்தை நினைத்திருந்தேன்.

அந்த அங்கீகாரம் கிடைக்காமல் போன உரிமையில் தான் பேசினேன். வேறு எந்த உள் நோக்கமும் இல்லை. அதைத் தெளிவு படுத்தத்தான் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டேன்.

முத்தையாவின் பெற்றோரை மேடை ஏற்றிய 2டி நிறுவனத்திற்கு முத்தையா சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

22 வருடங்களில் 2,500 பாடல்கள் எழுதியிருக்கிறேன். ஷோபி, சாண்டி மாஸ்டர், சிங்கம் புலி, ராஜ்கிரண் அனைவரும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். நீங்கள் எங்களுடன் இறுதிவரை இருக்க வேண்டும் என்றார்.

டைரக்டர் ராஜூமுருகன் பேசும்போது,

2டி ராஜா சார் இந்த விழாவிற்கு என்னை அழைத்தார். என்னுடைய கதையைக் கூறுவதற்கு தேனி சென்றேன். அப்போது, இந்த டீயூனுக்கு பாடல் வேண்டும் என்று கூறினார். அவசரமாக வேண்டும் என்றார். அப்படித்தான் இப்படத்திற்கு 3 பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பாடலுக்கு இசைஞானி இளையராஜா சார் குரலில் வந்திருக்கிறது. அந்த வாய்ப்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

பொதுவாக ஜனங்களின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஈரானிய சினிமா என்று எந்த மொழி படமாக இருந்தாலும், ஜனங்களின் படங்கள் தான் முக்கியத்துவம் பெறும்.

கார்த்தி சாருடன் அடுத்த படம் பணியாற்றப் போகிறேன். அவர் எப்போதும் முழு சார்ஜ் போட்ட பேட்டரி போன்று இருப்பார்.

உழவன் என்ற பெயரில் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை செய்து வருகிறார்.
நான் எப்போதும் அண்ணார்ந்து பார்க்கக் கூடிய கலைஞன் ராஜ்கிரண் சார். என்னுடைய முன்னோடியாக அவரைப் பார்க்கிறேன்.

இப்படம் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகை சரண்யா பேசும்போது,

குட்டிபுலி படத்தில் முத்தையாவுடன் பணியாற்றினேன். அதற்கு பிறகு அவரின் படங்களில் நான் பணியாற்றவில்லை. இந்த படத்திற்கு அழைத்தபோது உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஆகையால் நான் கதை கேட்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். அவர் கூறியதை செய்தாலே காட்சிகள் நன்றாக வரும்.

அனைவரையும் தங்க தட்டில் வைத்து தாலாட்டுவது 2டி நிறுவனம் மட்டும் தான். என்ன கேட்டாலும் செய்துக் கொடுப்பார்கள்.

கார்த்தியுடன் ஏற்கனவே அம்மாவாக நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்ததும் மகிழ்ச்சி. பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தில் நடித்திருக்கிறேன்.

ராஜ்கிரணுடன் நடிக்கும்போது குடும்ப உறவாகத் தோன்றும்படி பழகுவார். சூரியுடன் நகைச்சுவை நன்றாக எடுபடும் வகையில் அமைந்துள்ளது.

எல்லோருக்கும் அம்மாவாக தோன்றும்படி எப்படி நடிக்கிறீர்கள்? என்று எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள். நான் எப்படி நடிக்கிறேன் என்று எனக்கே தெரியாது, அது கடவுளும் தமிழ் சினிமாத்துறையும் எனக்குக் கொடுத்த மிகப்பெரிய வரம் என்றார்.

தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது,

சூர்யா, கார்த்தி மற்றும் ராஜா சார் அனைவரையும் பார்க்கும் போது எனக்கு அந்த மாதிரி உறவுகள் இல்லை என்று ஏக்கமாக இருக்கிறது. ஸ்டுடியோ 9 இன்றுவரை விநியோகம் செய்யும் நிறுவனமாகத்தான் இருக்கிறது. என்னால் வாய்ப்பு கிடைத்தவர்கள் வளர்ந்த பிறகு என்னைவிட்டு சென்று விட்டார்கள். ஆகையால், நானே தயாரித்து நடிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இப்போது எனது மனைவி எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.

கார்த்தியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்படத்தில் நிறைவேறியது. கார்த்தி அண்ணன் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் காட்சியிலும் அதைப் பெரிதும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர். அவருடன் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

இந்த படத்தில் கொடுத்த வாய்ப்பைப் போன்று தொடர்ந்து கார்த்தி அண்ணன் கொடுக்க வேண்டும்.

ஷோபி இன்று பெரிய நடன இயக்குனராக வளர்ந்திருப்பதில் மகிழ்ச்சி. சூரி அண்ணனுடன் ஏற்பட்ட தவறான புரிதலுக்கு வருந்துகிறேன் என்றார்.

நடிகர் சூரி பேசும்போது,

சூர்யா அண்ணன் நீங்கள் எப்போதும் நன்றாக இருப்பீர்கள். கார்த்தி அண்ணனும் நன்றாக இருப்பார். உங்களுக்கு கிடைக்கக் கூடிய வருமானத்தை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால், பலருக்கும் வாய்ப்பளித்து வருகிறீர்கள். கல்வி, வேலை என்று மற்றவர்களுக்கு ஏதாவது ஒன்றை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். 2டி நிறுவனத்தை ‘சவுக்கு’ போல ராஜா சார் தாங்கிப் பிடித்து கொண்டிருக்கிறார்.

ஒழுக்கத்திற்கும், உண்மைக்கும் உதாரணமாக இருக்கும் ராஜ்கிரண் அப்பாவிற்கு நன்றி. இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் நீங்கள் வேட்டியை தூக்கிக் கட்டினால் அழகாகத்தான் இருக்கும்.

மறுநாள் படப்பிடிப்பிற்கு தேவையானவற்றை முதல்நாளே திட்டமிட்டு தயார்நிலையில் வைக்கிறார்கள். அதிதிக்கு வாழ்த்துகள். சரண்யா அக்காவிற்கு வாழ்த்துகள். நீங்கள் எல்லோருக்கும் அம்மாவாக நடிக்கவில்லை, அம்மாவாகவே வாழ்கிறீர்கள். ஆகையால், தான் எல்லோருக்கும் அம்மாவாக தோன்றுகிறது.

முத்தையா மண் சார்ந்து அதோடு ஒன்றி வாழ்ந்து வருகிறார், அதனால் தான் தொடர்ந்து அதுபோன்ற படங்களை இயக்கி வெற்றிபடமாக கொடுக்க முடிகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற பந்தா இல்லாமல் அனைவரிடமும் இயல்பாக பழகுவார். உணர்ச்சிவசப்படக் கூடிய காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும்போது கூட நகைச்சுவை செய்து விடுவார். முதல் படத்திலேயே சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார்.

நான் தூக்கி வளர்த்த பெண் இந்திரஜா எனக்கு ஜோடி என்று கூறியதும், முதலில் தயங்கினேன். ஆனால், இந்திரஜாவே தயக்கத்தை உடைத்துவிட்டார்.

மதுரை விழாவில், ஆயிரம் அன்னச்சத்திரம் கட்டுவதைவிட, ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு ஏழைக்கு கல்வி கற்பிப்பது சிறந்து என்று பாரதியாரின் கூற்றைத் தான் கூறினேன். நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல.

யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகவும் கூறிவில்லை. மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன் என்றார்.

நடிகர் ராஜாகிரண் பேசும்போது,

2டி நிறுவனம் எனக்கு முதல் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜா அவர்களுக்கும் நன்றி. தம்பி முத்தையாவும், கார்த்தியும் கொம்பனில் முதல் வாய்ப்பு கொடுத்தார்கள். இரண்டாவது படம் விருமன் கொடுத்ததற்கு நன்றி. 2டி நிறுவனம் கடமையாக செய்யாமல் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராக பாவித்து அனைவருக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்தார்கள்.

இப்படத்தை வெறும் படமாக வியாபார நோக்கில் எடுக்காமல், நல்ல கருத்துகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொறுப்போடு தம்பி முத்தையா எடுத்திருக்கிறார். வாழ்த்துகள் என்றார்.

சக்தி பிலிம் பாக்டரி சக்தி பேசும்போது,

தமிழ்நாடு விநியோகம் சக்தி பிலிம் பாக்டரி செய்கிறது. ஃபான் பாயாக தான் நான் விநியோகம் செய்திருக்கிறேன். ஏற்கனவே நான் பணியாற்றிய நிறுவனம், இப்போது சொந்த நிறுவனம் எதுவாக இருந்தாலும் மண் சார்ந்த படத்திற்கு மிகுந்த வரவேற்பு இருக்கும். அதிலும் கார்த்தி சார் படத்தை கொண்டாடுவார்கள். பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், கடைக்குட்டி சிங்கம், நான்காவதாக விருமனையும் நான் தான் விநியோகம் செய்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

ராஜ்கிரண் போன்ற கலைஞர்களின் படங்களை வண்டிக் கட்டிக் கொண்டு வந்து பார்ப்பார்கள். சம காலத்தில் கிராமங்களை இயல்பாக பதிவு செய்ய பாரதிராஜாவிற்குப் பிறகு யாரும் கிடையாது. அதை முத்தையா நிறைவேற்றி இருக்கிறார். மண் சார்ந்த அயல்நாட்டு படங்கள் முதல், நம் நாட்டு படங்கள் வரை ஒரே மாதிரியாக இருக்கிறது என்று சலிப்படைய செய்யும். நகரத்து பெண்களைவிட கிராமத்து பெண்கள் தான் அருமையாக காதலிப்பார்கள். அதை நிறம் மாறாமல் பதிவு செய்தது முத்தையா தான்.

உலகத்தில் எங்கோ மூலையில் இருக்கும் விஷயங்களைப் பற்றி தேடித் தேடி தெரிந்து கொள்கிறார்கள். ஆனால், பக்கத்தில் இருக்கும் கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ள தவறி விடுகிறோம். கூட்டு குடும்பங்கள் எப்படி இருக்கும் என்பதை மதுரை மாதிரியான கிராமங்களில் தான் தெரிந்து கொள்ள முடியும்.

கிராம படங்களை ஆதரித்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி இன்னும் மேன்மையடையும். அதற்கான மிகப் பெரிய அடித்தளமாக இப்படம் இருக்கப் போகிறது. என் பெயருக்கு பின்னால் எனது அப்பா பெயர் இனிஷியலாக இருப்பது போல எனது வியாபாரத்திற்கு 2டி நிறுவனம் இருக்கும். அவர்களின் குடும்பத்திற்கு நன்றி என்ற வெறும் வார்த்தையால் கூற முடியாது. அனைத்து இப்படம் வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்றார்.

நடிகை அதிதி பேசும்போது,

என் கனவை நிறைவேற்றிய அப்பா, அம்மா, தங்கைக்கு நன்றி. என் வீட்டை விட்டு நான் எங்கும் சென்றதில்லை. அந்த குறை தெரியாமல் பார்த்து கொண்ட 2டி நிறுவனத்திற்கும், படக்குழுவிற்கும் நன்றி. முத்தையா எல்லாவற்றையும் ஊக்கப்படுத்திக் கற்றுக் கொடுத்தார். இப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கொடுத்த யுவன் சாருக்கு நன்றி. கார்த்தி சார் தினமும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுப்பார். சூரி சாருடன் நடிக்கும் காட்சிகளில் ஏதாவது நகைச்சுவை சொல்லிக் கொண்டிருப்பேன். ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் சாருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.

கார்த்தி சார் போலவே நானும் முதல் படமாக மண் சார்ந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்றார்.

2டி ராஜசேகர் பாண்டியன் பேசும்போது,

கார்த்திக்கு தான் முதலில் நன்றி கூற வேண்டும். கொம்பன் போன்று ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். கொம்பன் – 2 எடுக்கலாம் என்று முத்தையா கூறினார். ஆனால், புதிதாக மண் சார்ந்த படம் வேண்டும் என்றதும், விருமன் கதையைத் தேர்ந்தெடுத்தோம். உறவுகளை அரவணைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதியை மறந்துவிடாத படி ஒரு படம் எடுக்க நினைத்தோம். எல்லா உறவுகளையும் அரவணைத்துக் கொள்ளும்படியான ஒருவர் ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார். இப்போது எனது தங்கை அப்படி இருக்கிறார்.

அதிதியை அறிமுகப்படுத்தியதில் எங்களுக்குத்தான் பெருமை. எங்களை நம்பி அதிதியை அனுப்பி வைத்த ஷங்கர் சாரும், ஈஸ்வரி மேடமிற்கும் நன்றி. ராஜ்கிரண் சாரிடம் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு அழைத்தோம். அப்போது அவரிடம் தேதிகள் இல்லை. இந்த படத்தில் நடித்ததற்கு நன்றி.

பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை திரையிலும், திரைக்கு வெளியிலும் நடந்து கொள்ளும் முத்தையாவிற்கு இந்த பட வாய்ப்பைக் கொடுத்தற்காக பெருமைப் படுகிறோம்.

மதுரையில் பிரமாண்டமாக இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. நம் வீட்டில் திருமணம் நடக்கும்போது பெரியப்பா, சித்தப்பா யாரையாவது ஒருவரை மறந்துவிடுவது போலத்தான் பாடலாசிரியர் சினேகனை மறந்துவிட்டோம். அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் இப்படத்தை பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.

இயக்குனர் முத்தையா பேசும்போது,

இதுவரை ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும்.
இப்போது இருக்கும் காலகட்டத்தில் இரு பிள்ளைகளை வளர்ப்பது சிரமமாக இருக்கிறது. இப்போது ஒரு குழந்தை, பிறகு குழந்தையே வேண்டாம். நான் இருவர்.. நமக்கி இருவர் என்ற நிலை வரலாம்.

இப்படத்தில் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைதான். என் வீட்டிற்கு பக்கத்தில் நேரில் நடந்ததைதான் இப்படத்தில் எடுத்திருக்கிறேன். கார்த்தி சாரிடம் இக்கதையைக் கூறியதும் ஒப்புக் கொண்டார். இப்படம் துவங்கும்போது என்ன வேண்டுமானாலும் செலவு செய்துகொள்ளுங்கள் என்று ராஜா அண்ணன் கூறினார். ஆனால், இப்படத்தில் அதிகமாக ஆன செலவு வெள்ளையடித்ததுதான்.

நிறைபாண்டி, முனியாண்டி இந்த இரு கதாபாத்திரம் தான் முக்கியமானதாக இருக்கும். நந்தினி, அருந்ததி நடித்திருக்கிறார்கள். வெற்றியின் ஜனகன மண படமும் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இளையராஜா சார் என் படத்திற்கு டைட்டிலில் பாடிகொடுத்ததில் மிகுந்த பெருமை. இக்கால இயக்குனருக்கு அமைவது அரிது. அனைத்து ஒட்டுனர்களும் இரவில் அமைதியாக வண்டி இயக்க அவர் தான் காரணமாக இருக்கிறார்.

செல்வா நன்றாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வடசென்னையில் தத்ரூபமாக படப்பிடிப்பு தளத்தை அமைத்திருந்தார் ஜாக்கி. ஆகையால், இந்த படத்திற்கு அழைத்தோம்.

பொதுவாக நான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது வியாபார நோக்கத்தையும் மனதில் வைத்துத்தான் எடுப்பேன். சூழல்கள் அமைந்தால் நகரம் சார்ந்தும் படம் எடுப்பேன். ஆனால், தவறான படத்தை ஒருபோதும் இயக்க மாட்டேன். என் படத்தில் யார் மனதையும் புண்படுத்தும் வசனமோ இடம்பெறாது.

நடிகர் கார்த்தி பேசும்போது,

இப்படத்தின் டிரைலர் வரும்வரை பதட்டமாகத்தான் இருந்தது. அயல்நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து கலாச்சாரம் மாறி விட்டதா? நமது மண் சார்ந்த படங்களுக்கு ஆதரவு இருக்காதோ?

ஏனென்றால், கிராமத்தில் கூட ஸ்விக்கி, ஸொமேட்டோ வந்துவிட்டது. ஆனால், டிரைலர் வெளியாகி வெற்றிப் பெற்றதும் அந்த எண்ணம் மாறிவிட்டது.

பருத்தி வீரன் பாணி கொம்பனில் வரக் கூடாது என்று கவனமாக இருப்பேன். கடைக்குட்டி சிங்கத்தில் 5 அக்காவிற்கு தம்பியாக இருக்க வேண்டும். முன் படத்தின் சாயல் வரக் கூடாது என்று எண்ணுவேன்.

ஷோபி மாஸ்டர் எனக்கு என்ன வருமோ அதை உணர்ந்து கொடுப்பார். கிராம வாழ்க்கை தான் அழகாக இருக்கிறது. அந்த கதாபாத்திரம் ஏற்று நடிக்கும்போது சுகமாக இருக்கிறது.

என் மாமனாருக்கு என்னுடம் பேச மிகவும் பிடிக்கும் ஆனால், எனது தோளை தொட்டுவிட்டு சென்று விடுவார்.

நானே வலிய சென்று பேசி அவரிடம் பேசுவேன். உலக அரசியல் வரைக்கும் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். எப்படி என்று கேட்டால், எல்லாம் டீ கடையில் தான் என்பார்.

ராஜ்கிரண் சார் நடிக்கிறார் என்று கூறியதும் நம்பிக்கை வந்துவிட்டது.
காசு வாங்காமல் நடிப்பேன் ஆனால், சம்பளம் வாங்காமல் நடிக்க மாட்டேன், என்பார் பிரகாஷ் ராஜ் சார். கலைஞன் என்றால் பணத்தைப் பொருட்படுத்தாமல் நடிக்க வேண்டும் என்ற அழகான விஷயத்தை பிரகாஷ் ராஜ் கற்றுக் கொடுத்தார்.

விடியற்காலை 3 மணிக்கு பாடல் காட்சிகளை பதிவு செய்தார்கள். அந்த நேரத்தில் சினேகன் வரிகள் பாடலுக்கு அழகு சேர்த்துள்ளது. சூரி அண்ணன் நடிகர் என்றே தோன்றாது. குட்டி இயக்குனர் போலவே இருப்பார். சிறு இடம் கிடைத்தாலும் பஞ்ச் வசனங்களை இயல்பாக பேசிவிடுவார். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனே ஓடிப் போய்விடுவார்.

கடைக்குட்டி சிங்கத்தில் அவருக்கும் எனக்குமான ஒரு காட்சியில் மழை பெய்து கொண்டிருந்த போதும் அழுதுவிட்டார். அவரால் காமெடியும் நடிக்க முடியும், குணசித்திர வேடமும் நடிக்க முடியும்.

ஏற்கனவே, இருக்கும் கிராமம் போன்ற காட்சிகள் இல்லாமல் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று ஜாக்கியிடம் கேட்டுக் கொண்டோம். செல்வாவிடம் எனக்கு க்ளோசப் வேண்டாம், அழகான கிராமங்கள் இருக்கும்போது ‘வைட்’ கோணத்தில் வைத்தே எடுங்கள் என்று கூறினேன். அந்த கிராமத்தில் வாழ்வோர் எப்போதுதான் அதன் அழகைக் கண்டு ரசிப்பார்கள் என்று கூறினேன்.

என் முதல் படம் வெற்றி என்ற வார்த்தையை என்னிடம் முதலில் கூறியது சக்தி தான். நகரத்தில் இருப்பவர்களின் கேளிக்கை வேறு, கிராமப்புறங்களில் இருப்பவர்களின் கேளிக்கை வேறு என்று உற்சாகமாக கூறுவார். அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் மாதிரி. மிகவும் உண்மையான மனிதர்.

2டி நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று தான் மதுரையில் வைத்தார்கள். ஆனால், அங்கிருந்த ரசிர்களின் விசில் சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 5 மணி நேரம் உற்சாகமாக இருந்தார்கள்.

அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல, நம்பிக்கை என்று கூறும் படம் தான் இது.
எங்களுக்கு எதாவது ஒன்று என்றால் பிருந்தா பக்கத்திலேயே இருப்பார். என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவருடைய தம்பி உடன் இருந்தார். அதன் காரணமாகத்தான் கந்தன் வேண்டும் என்று முடிவெடுத்தோம். அண்ணயையும், பிருந்தாவையும் கொடுத்த அப்பா அம்மாவிற்கு நன்றி.

அனல்அரசு மாஸ்டர் சண்டைக் காட்சிகளை இயக்கியிருக்கிறார்.

படப்பிடிப்பில் இருக்கும்போது ஒரு அம்மா ஓடிவந்து இங்கிருக்கும் பள்ளியை வந்து பாருங்கள் என்று கூறினார். அங்கு சென்று பார்த்தால் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இப்போது அகரம் சார்பாகவும், பலரும் செய்த உதவியால் இன்று சிறப்பாக இருக்கிறது. இதுபோன்று இருக்கும் இடங்களில் கேட்டபிறகு உதவி செய்யாமல் தாமே முன்வந்து செய்ய வேண்டும்.

இப்படம் பெரிய வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்றார்.

Viruman press meet high lights

More Articles
Follows